Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

எமனையே காக்க வைக்கும் வைத்தீஸ்வரன்

$
0
0

     நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிஅடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் தீராதநோய்கள் மட்டுமல்ல செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மேலும் யம பயத்தை போக்குவதுடன் எமனையே காக்க வைக்கும் சக்தி படைத்த வைத்தீயநாத சுவாமிசித்தர்கள் முன்காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் பல விதமான மூலிகைகளைப் பற்றியும் நோய்கள் உண்டானால் அதன் காரணம், அதன் தன்மை, அதற்கு நிவாரணம் தரும் மூலிகைகளைப் பற்றியும் எழுதி வைத்துப் போனார்கள், ஆனால் தேவகர்ளோ நோய்கள் அனைத்தையும் போக்கக் கூறிய ஒரே ஒரு மூலிகை உண்டு என்றனா;. அந்த ஒரு மூலிகைதான் சஞ்சீவி மூலிகை எனப்படுவதும் ஆகும்.

   10 ராவணனுக்கு எதிராகராமன் தொடுத்த யுத்தத்தில், ராவணனின் மகனான இந்திரஜித் என்ற யுவராஜ அரக்ககனால் ஏவப்பட்ட பாணத்தில் கட்டுண்டு, ஆதிசேஷனின் வடிவமான லக்குமணரே மூயச்சித்து விழ, அனுமன் சஞ்சீவி மூலிகை இருக்கும் குன்றை எடுத்து வந்து உயிர்ப்பித்தார் என்கிறது இதிகாசம். அந்த அறிய வகை சஞ்சீவி மூலிகை இன்னும் இருக்கின்றது.ஆனால் அதனை உணரக்கூடிய சக்தி பெற்றவார்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாடம். சஞ்சீவி மூலிகையைத் தேடி ஓடவேண்டிய அவசியமில்லை. அதனினும் மேம்பட்ட ஒரு மூலிகையை வானோர்கள் நமக்குத் தந்துள்ளனா;. அதுதான் வைத்தீஸ்வரன் கோயிலில் குடி கொண்டிருக்கும் வைத்தியநாதசுவாமி. இந்த இறைவன் சஞ்சீவி மூலிகை உள்ளிட்ட உடைய லிங்க வடிவம் என்கிறது நாடி. இதனை அகத்தியா; எண்பத்தெட்டு கோடி வகை மூலிகை தம்பலம் கூடியவன் – தைலாம்பிகையை தன்பக்கத்தில் கொண்டான் – குறைவின்றி மாந்தா; பிணி போக்க கொலுவீற்றிருப்பான் புள்ளிருக்குவேளுர் தல்தே” என்கிறார்புள்ளிருக்கவேளுர் என்பது முன்னை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இருந்த பெயா;. எப்படிப்பட்ட நோயையும் குணஞ்செய்யும் சக்தி இந்த இறைவனுக்கு உண்டு .யம பயத்தை போக்குவதுடன் காலனைக் காத்திருக்கச் செய்யும் சக்தி படைத்தவன் ஆவான் என்கிறது பழம்பெரும் நூல்.

  கையில் நோயை குணஞ்செய்யும் தைலமதனைக்கொண்டவள் தையல்நாயகியாம்-வைத்தீஸ்வரசுவாமியின் பிராட்டிர். இங்குள்ள புஷ்கரணியை, சித்தாமிர்த தீர்த்த புஷ்கரணீ என்பவா; தேவா;. தேவாமிர்தம் என்பது தேவார்க்கும் அமரார்க்கும் உரித்தது. ஆனால் மானிடா; உய்ய ஒரு அமிர்தம் வேண்டும் என்பது அங்காரக பகவான் தவம் செய்து பெற்றுதுதான் இந்த சித்தாமிர்தம் என்ற தெய்வக் குழம்பு. செவ்வாய் பகவான் இந்த மண்ணில் கலந்துள்ளார் இந்த பொய்கையில் நீராடியபின்னா;தான் வைத்தியநாத சுவாமியை தார்சிக்க வேண்டும் ஆகம விதி சற்று பிசகாது அமைந்துள்ள இந்த சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் தேவர்களும் நீராடி புனிதமடைகின்றனா; என்றால் நமக்கு வியப்பு மேலிடுகிறது. இந்த புண்ணிய சேஷத்திரத்தில் குணப்படுத்த அதிக சிரமம் உடைய குஷ்டரோகம் என்ற நோய் முற்றிய நிலையில் வேதனை தாங்காது அங்காரகன் என்று ஜோதிட வல்லுநர்களால் அழைக்கப்படும் செவ்வாய் கிரக அதிபதியே – ஒரு முகூர்த்த காலம் மூழ்கிநீராடி இறைவனை வழிபட, குஷ்டரோகம் முழுவதுமாக விலகிற்று என்கிறது நாடி சாஸ்திரம்.

     இந்தப் பொய்கையில் நீராடி இறைவனை வழிப்பட்டால் நோய் மட்டும் நீங்கும் எனஎண்ணாதீர் … செவ்வாய் தோஷம், மாங்கல்யதோஷம் எல்லாமும் கண்டிப்பாக நீங்கும். ஆயுள்வலுப்பெறும். அன்று பிரம்மன் எழுதிய ஆயுட்காலம் முடிந்தாலும் மார்க்கண்டேய மகாரிஷிக்கு கிட்டிய பேறு நமக்கு கிட்டுகிறது. ஆயுள்காலம் முடிந்தாலும் மார்க்கண்டேய மகாரிஷிக்கு கிட்டிய பேறு நமக்கும் கிட்டுகிறது. ஆயுலை நீடிக்கும் இதனையே, “ காலனும் காத்திருப்பான்” என்கிறது பாடல். இந்த தலத்திருப்பான் ஜடாயு குண்டம் என்று ஒக்று இருக்கிறது. சீதாப்பிராட்டியாரை ராவணேஸ்வரன் சிறை எடுத்துச் செல்கையில் அவனைத் தடுக்க முற்பட்ட ஜடாயு என்ற பட்சி ராஜனை ராவணன் தூக்கி வீச ஜடாயு என்ற பட்சி ராஜனை ராவணன் தூக்கி வீச ஜடாயு விழுந்த இடம்தான் இந்த வைத்தீஸ்வரன் கோயில், முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனால் ஜடாயு, ராம-லட்சுமணரை தரிசித்தான். ராவணனோ சீதையை சிறை எடுத்து தெற்கு நோக்கிச் சென்றான் என்ற செய்தியை ராமபிரானுக்கு உரைத்து, பிறகு உயிரை விட்ட இடம் இது. உலகத்தையே உண்டு உமிழ்ந்து அளந்த அந்த சினுதனுசுவை முறித்த இறைவனே தனது பொற்கரங்களால் பட்சிராஜனாம் ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்து முடித்தான். ஜடாயுவின்அஸ்தியைக் கொண்ட கலசம் புதையுண்ட தலமே ஜடாயு குண்டம் என்பது, பக்தி, தியாகம், சத்தியம் போன்ற வற்றின் இருப்பிடமான இந்த ஜடாயு ஆழ்வானை நெஞ்சார துதிப்போரிக்கு, எப்படிப்பட்ட பாவியாயினும் மோட்சம் கிட்டும் என்கிறாரி அகத்தியாரி

  ஆறுமுகமான முருகப் பெருமான் சூரபத்மனை வதைக்க அவனுடன் யுத்தம் செய்தபோது பலவிதமான காயங்களுடன் அவதிப்பட்டு, இங்குள்ள புஷ்கரணியில் மூழ்கி, வைத்தியநாத சுவாமியை வழிபட காயங்கள் மறைந்து முத்துக்குமார சுவாமியாய் இன்றும் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.செவ்வாய் கிழமை ராகு காலம் மற்றும் அஸ்தமன சமயகளில் இறைவனைத்தொழுபவர்; வாழ்வில் எவ்வளவு வடுக்கள் வந்தாலும் மறையும் என்கிறது நாடி சாஸ்திரம்.

அமைவீடம் ;

       சிதம்பரத்தில் இருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்து பஸ்வசதிவுள்ளது

தொடர்புக்கு : 9952233899

   செய்தி : ப.பரசுராமன்

   படம் : ப.வசந்த்

The post எமனையே காக்க வைக்கும் வைத்தீஸ்வரன் appeared first on SWASTHIKTV.COM.


இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 14/06/2016

சிவபெருமானின் தோழனுக்கு வழிகாட்டிய காளை

$
0
0

     சிவகங்கை மாவட்டம் அடுத்துள்ள காளையார்கோவில் என்ற திருத்தலத்தில் சொர்ணகாளீஸ்வரர் என்ற பெயர் சிவன் அருள்பாலிக்கிறார்.இவரை அபிஷேகம் செய்து வணங்கினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆலயம் சிவபெருமாளின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200வது தேவாரத் தலமாக விளங்குகிறது. தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 10வது தலமாகும்.

சுந்தரருக்கு வழிகாட்டிய காளை:-

       ஓரு முறை சுந்தரர், விருதுநகர் அருகில் உள்ள திருச்சுழி என்ற தலத்தில் உள்ள திருமேனிநாதரை தரிசித்தார். பின்னர் அங்கிருந்து காளையார்கோவிலுக்கு சென்றார். அந்த ஊரின் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார் சுந்தரர். எல்லைப் பகுதியில் நின்றபடியே, இறைவா உன்னைக் காண உன் இருப்பிடம் வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி வருந்தி, தேவாரப் பாடல் பாடினார்.  தன் தோழனான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான் தனது காளையை அங்கு அனுப்பி வைத்தார். அது சுந்தரர் நின்றிருந்த இடம் வரை வந்து மீண்டும் கோவிலை நோக்கித் திரும்பிச் சென்றது. அப்போது அவ்விடத்தில் ஓரு அசரீரி ஓலித்தது. காளையின் கால்தடம் பதிந்த இடங்களில், லிங்கம் இல்லை. எனவே அந்த இடம் வழியாக நடந்து வந்து தன்னை தரிசிக்கலாம், என்றது அந்த அசரீரி. இதையடுத்து சுந்தரர், காளை நடந்து சென்ற இடம் வழியாக சென்று இறைவனை வணங்கி வழிபட்டார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் காளையார்கோவில் என்று பெயர் பெற்றது.imagesr

மூன்று சிவன் மூன்று அம்பாள் :-

     இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். பொதுவாக ஓரு கோவிலில் ஓரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பார்கள். ஆனால் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் மூன்ற சிவன், மூன்று அம்பாள் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. ஆலயத்தில் உள்ள பெரிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், சிறிய கோபுரம் மருமு பாண்டியர்களால் கட்டப்பட்டது. சோமேசர் சவுந்திநாயகி, சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவல்லி, சுந்தரேஸ்வரர் மீனாட்சி என மூன்று சுவாமிகளும், மூன்று அம்மன்களும் மூலவர்களாக தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த மூலவர்களில் சொர்ணகாளீஸ்வரர் மட்டுமே தேவாரப்பாடல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சண்டாசுரன் என்ற அசுரனை அழித்த காளி, சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, தன் பாவம் நீங்கப்பெற்றார். அவரே இங்கு சொர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறாள்.

சகஸ்ரலிங்கம்:-

         G_T9_588இந்த கோவிலில் ஆயிரம் லிங்கங்கள் இணைந்த சகஸ்ர லிங்கம் உள்ளது. மேலும் தங்கத்தால் ஆன பள்ளியறை இவ்வாலயத்தில் இருப்பது விசேஷமானதாகும். இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது Iதீகம். இங்குள்ள இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க, பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அதேபோல் இந்த தலத்திலும் வழிபாடு செய்தான். இந்த ஆலயத்தில் ஆயிரம் சிவாலயங்களை ஓன்றாக தரிசித்த பலன் கிடைத்ததை இந்திரன் உணர்ந்தான். அதன் அடிப்படையிலேயே இக்கோவிலில் சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் அமைந்த இடத்தின் புராணப்பெயர் திருக்கானப்பேர் என்பதாகும். இந்த ஆலயத்தில் மந்தாரை மரம் தல விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தில் யானை மேடு என்னும் கஜபுஷ்கரணி, சிவகங்கை காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கவுரி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

யானை உருவாக்கிய தீர்த்தகுளம்:-

     மகரிஷி ஓருவரால் இந்திரனுக்கு மாலை ஓன்று பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த மாலையை இந்திரன் தனது வாகனமான ஐராவத யானைக்கு அளித்தான். யானை அந்த மாலையை தரையில் வீசி எறிந்தது. இதையடுத்து ஐராவத யானைக்கு, முனிவர் சாபம் கொடுத்தார். அந்த சாப சிவர்த்திக்காக ஐராவதம் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. வழிபாட்டு காலம் முடியும் வரை மனிதர்களின் பார்வை, அந்த யானையின் மீது படக்கூடாது என்பதே விதி.ஆனால் ஓருமுறை ஓரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால் ஐராவதம் யானை தன் தலையால் பூமியை முட்டி, பாதாளத்துடன் சென்று விட்டது. யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஓரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு  யானைமடு என்று பெயர். ராமபிரான், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்தத் தீர்த்தக்குளத்தில் நீராடியதாக கந்த புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆலயத்திற்குள் சிவகங்கை தீர்த்தகுளம் உள்ளது.

         பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற, சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன் செய்கிறார்கள். இதனால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அமைவிடம் : – சிவகங்கையிலிருந்து காளையார்கோவிலுக்கு பஸ்வசதி உண்டு.

தொடர்புக்கு :  கோயில் நிர்வாகம் : 91-4575 – 232516, 94862 12371

செய்தி : ப.பரசுராமன்                                                                                                                                                                                                              படங்கள் : ப.வசந்த்

The post சிவபெருமானின் தோழனுக்கு வழிகாட்டிய காளை appeared first on SWASTHIKTV.COM.

பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முக கவசம்

$
0
0

  ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளதாகித்
தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வமாகி
எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈசனான
திண்டிறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க

ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பல் முழுதும் நற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள்விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறாயுதன் காக்க வென்றன்
ஏசிலா முழங்கை தன்னை எழிற் குறிஞ்சிக்கோன் காக்க

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
தறுகணேறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமான் மருகன் காக்க பின்முதுகைச் சேய் காக்க

ஊணிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத்
தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஒரிரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருட் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சர ணேச வாசான் திமிருமுன் தொடையைக் காக்க

ஏரகத் தேவன் என்தாள் இருமுழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடிரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க

ஐயுறு மலையன் பாதத் தமர் பத்துவிரலுங் காக்க
பையுறு பழநி நாத பரன் அகங் காலைக் காக்க
மெய்யுடல் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வநாயக விசாகன் தினமுமென் நெஞ்சைக் காக்க

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரும் பூதப் பிரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பலகணத் தெவையா னாலும்
கிலிகொள எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க

ஓங்கிய சீற்றமே கொண்டு உவனிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

ஒளவியம் உளர் ஊண் உண்போர், அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவரானுலும் திடமுட எனைமற் கட்டத்
தவ்வியே வருவாராயிற் சராசரமெலாம் புரக்குங்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடிநாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை எதனாலேனும் நானிடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க

ஙகரமே போற் றழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யனேறு ஆலப் பல்லி
நகமுடை யோந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையா வெற்கோர் ஊறிலா தைவேல் காக்க

சலத்திலுய்வன் மீனேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலுஞ் சலத்திலுந்தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க

ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிரகக் கோள் காக்க
சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமையணு காமலே பன்னிரு புயன் சயவேல் காக்க

டமருகத் தடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம் குடல்வலி ஈழை காசம்
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப் பிரமேக மெல்லாம்
எமையடை யாமலே குன்றெறிந்தவன் கைவேல் காக்க

(இ)ணக்கமில்லாத பித்த எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண் முளை தீமந்தஞ்
சணத்திலே கொல்லும் சன்னி சாலமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனையாளாமல் பெருஞ்சத்தி வடிவேல் காக்க

தவனமா ரோகம் வாதஞ் சயித்தியம் அரோசகம் மெய்
சுவறவே செய்யும் மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய் அண்டவாதங்கள் சூலை
எவையும் என்னிடத்தெய் தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

நமைப்புறு கிரந்தி வீக்கம் நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகு பல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவலிப்போ டெழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை யெய்தாமல் அருள்வேல் காக்க

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம்ஐம் ரீம் வேல் காக்க

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த இடத்தும் என்னை
நண்ணி வந்தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க

யகரமே போல் சூலேந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலா மீராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோ டாறும் ஆனோன் தன்கைவேல் நடுவிற் காக்க
சிகரமின் தேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திடமுடன் காக்க வங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க மேற்கில்
இகலயில் காக்க வாயு வினிற் குகன் கதிர்வேல் காக்க

வடதிசை தன்னில் ஈசன் மகனருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேதபோதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்று நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க

(இ)ழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கு நல் ஊணுண் போதும் மால் விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க திடமுடன் மயிலுங் காக்க

(இ)ளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச்சிவன் தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளி நடு பிற்பகல் கால் சிவகுருநாதன் காக்க

(இ)றகுடைக் கோழித் தோகைக் கிறை முன் ராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ்பின் ராவில் காக்க
நறவிசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழகன் எங்கோன் மாறாது காக்க காக்க

(இ)னமெனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடள் தான் காக்க வந்தே

The post பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முக கவசம் appeared first on SWASTHIKTV.COM.

குழந்தை வரம் வேண்டி கோட்டைமலை மேல் கோவில் கட்டிய மன்னன்

$
0
0

 சம்புவராய  மன்னர்கள் படை வீட்டை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த போது அவர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டது. காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் பல கோவில்கள் சிதிலமடைந்தது. 25சென்னை வேணுகோபால சுவாமி கைங்கர்ய அறக்கட்டளை மற்றும் இந்து அறநிலையத்துறை இப்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அப்படி கட்டிய கோவில்களில் சம்புவராய மன்னன் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய கோட்டை மலை மீது காட்சிதரும் ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி காட்சி தரும் மலைமீது மனங்கவரும் இயற்கை சூழலில் ஜொனைகளும்.கோட்டை கொத்தளத்துடன் சீரும் சிறப்புமாய் விளங்கிய இத்திருக்கோவில் இன்று மீண்டும் அச்சிறப்பான காலத்தை எதிர்நோக்கி நாடி வரும் பக்தர்களுக்கு வேணுகோபால சுவாமி அருளாசி வழங்கி வருகிறார்.காலை நேரத்தில் கதிரவனின் ஓளி பெருமாள் திருமுகத்தில் படும் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. கட்டிட கலையில் சம்பவராய மன்னனுக்கு சிறந்து விளங்கியது வியப்புக்குரியதாகவே உள்ளது.

DSC_5449   முதன்முதலாக சம்புவராயர்களின் தன்னுரிமையுள்ள தன்னாட்சியை நிறுவியவர் ராஜ கம்பீர சம்புவராயர் (1236-1268) ஆவார். இவரமைத்த படை வீட்டில் ஓரு மலையின் பெயர் ராஜ கம்பீர மலை என்று இவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.இவரது பெயரிலே 1239-ல் இவரால் கட்டப்பட்ட ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் இம்மலையின் 2560 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது.குண்டலிபுரம் படை வீடு ஆனது எப்படி?சோழர்கால ஆட்சியில் குறுநில மன்னர்களாய்த் திகழ்ந்த சம்புவராய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இத்தலம், போர் படையினர் தங்கும் இடமாகவும், ஆயுதங்களின் கிடங்காகவும் திகழ்ந்தது. படைவீடு அன்று அழைக்கப்பட்டதுஆதியில் குண்டலி நகரம், குண்டலிபுரம் எனப்பெயர் பெற்றிருந்தது. அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து அருள் பாலித்ததால்  படைவீடு என்றானது.

      சம்புவராய மன்னர் மறைவுக்குப்பின் இந்த கோட்டை மலை மேல் உள்ள கோவிலில் இன்றைக்கு சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். வாரத்தில் ஓவ்வொரு சனிக்கிழமை தோறும் பக்தர்கள் வழிபடுகிறார்கள் என்றும், மற்ற 6 நாட்களும் தேவர்களும், சித்தர்களும் பெருமாளுக்கு பூஜை செய்து வருவதாக மிகவும் விசேஷமாக நம்பப்படுகிறது. இக்கோவில் 5 மலைகளுக்கு இடையில் உள்ளதால் சமஸ்கிருதத்தில் இந்த இடம் பஞ்ச பருவத ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.முக்தி கல்வி,புத்திர பாக்கியம் வேண்டியவர்கள் சந்தான கோபால என்னும் மந்திரம் சொல்லி வழிபட்டால் புத்திர பாக்கியமும், சகல சவுபாக்கியமும் கிடைக்கும் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது. பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது.

நடைதிறப்பு :

    ஓவ்வொரு சனிக்கிழமை தோறும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.

அமைவிடம் :  திருவண்ணாமலை -வேலூர் சாலையில் உள்ள சந்தவாசலிருந்து 8வது கிலோ மீட்டரில் உள்ளது.

தொடர்புக்கு ; 04181 – 248224 / 248279

படமும் செய்தியும்:                                                                                                                                           ப.பரசுராமன்

The post குழந்தை வரம் வேண்டி கோட்டைமலை மேல் கோவில் கட்டிய மன்னன் appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 15/06/2016

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 17/06/2016

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருக்காட்சி நல்கிய லட்சுமி நரசிம்மர்

$
0
0

திருத்தல வரலாறு :

  திருவோங்கும் செந்தமிழ் நாட்டில், ஸ்ரீயப் பதியான நாராயணன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவாகும். உலகினைக் காக்கவும், உயிர்களுக்குத் திருவருள் செய்திடவும் திருவவதாரங்கள் பல எடுத்து, எண்ணிறந்தத் தலங்களில் அப்பெருமான் கோயில் கொண்டுள்ளார். எம்பெருமான் நாராயணன் எடுத்த அவதாரங்களுள் பத்து அவதராங்கள் மிகவும் சிறப்பாதானதாகும். அவற்றுள் சிறப்பானது நரசிம்மவதாரமாகும். நம்பியவர்களுக்கு நாராயணன், நம்பாதோருக்கு நரசிம்மன் என உண்மையான பக்திகொண்டு ஓழுகுவோர்க்கு இறைவன் திருவருள் சித்திக்கும் என்பதை உலகிற்கு உணர்த்தியது நரசிம்மாவதாரமாகும்.

      57_bigஎம்பெருமானின் இத்திருவவதாரமாகும் நிகழ்ந்த இடம் ஆந்திர மாநிலத்திலுள்ள அகோபிலம் எனும் தலமாகும். அப்பெருமாள் தேவர்களுக்காகவும் பிறுகு முனிவருக்காகவும் இலட்சுமி நரசிம்மராகத் திருக்காட்சி நல்கித் திருவருள்  செய்த இடம் தமிழகத்திலுள்ள தட்சின அகோபிலம் எனும் ஆவணியாபுரம் திருத்தலமாகும். தட்சன சிம்மாசலம் என்றும் தட்சண சிம்மகிரி என்றும், பஞ்ச திருப்பதித் தலம் என்றும் சிறப்பிக்கப்படும். ஆவணி என்பதற்கு சிங்கம் என்று பொருளாகும். இத்தலத்தில் திருமால், இலட்சுமி நரசிம்மராகக் காட்சியளித்தமையாகும். திருமகளும், கருடனும் மற்றும் அப்பெருமாள் எழுந்தருளியுள்ள மலையும்கூட சிங்கமுகக் கோலத்தில் காட்சியளிப்பதாலும், இத்தலத்திற்கு இவணி நாராயணபுரம் என்று திருப்பெயர் வழங்கப்பட்டுத் தற்போது ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகின்றது. இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வெட்பாலை மரமாகும். இலட்சுமி நரசிம்மரின் திருவருள் வேண்டித் தேவர்கள் இம்மலையின்மீது வெட்பாலை மரங்களாக தோன்றினர். மிகவும் குளிர்ச்சி பொருந்தியதாக வெட்பாலை உள்ளதால் பௌர்ணமி நாளில் இம்மலையைச் சுற்றிக் கிரிவலம் வருவது, உடலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.

      புராணக் காலத்தில் மிகவும் பாராக்கிரமமுடையவனும், அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஒர் அசுரன் இருந்தான். அவன் தனது கடுமையானத் தவங்களினால் நான்முகனை மகிழச்செய்து, தனக்குத் தேவர்களாலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, வீட்டிலோ, வெளியிலோ, பகலிலோ,இரவிலோ, மரணம் ஏற்படக்கூடாது என்பது போன்ற அநேக வரங்களைப் பெற்றான். அதனால் அவன் மிகுந்த கர்வம் கொண்டு மூன்று உலகங்களையும் தேவர்களையும் அடிமைக்கொண்டு துன்புறுத்தினான். அவனுக்கு பயந்து இந்திரன் முதலான தேவர்கள் ஒடி ஓளிந்தனர்.  அவ்வசுரனுக்குப் பிரகரலாதன் என்று ஓரு குமாரன் இருந்தனன். தாயின் கருவிலிருக்கும்போதே,நாரத முனிவரிடம் அட்டாட்சர மந்திர உபதேசம் பெற்ற  பிரகலாதன், நாராயணன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான்.அதனையறிந்த இரணியன், தனது மகனென்றும் பாராமல் பிரகலாதனை பலவகையிலும் துன்புறுத்தினான். ஆயுதத்தால் புடைத்தும், பாரங்களில் கட்டி சமுத்திரத்திலிட்டும், உயரத்திலிருந்துக் கீழே தள்ளியும், அக்கினியில் தள்ளியும், பாம்புகளை ஏவியும், உணவில் விஷம் கலந்தும் துன்புறுத்தினன்.பிரகலாதன் அந்த துன்புறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் இருந்து தியானித்திருந்தனன். நாராயணன் திருவருளால் இரணியனின் கொடுமைகளிலிருந்துத் தப்பி பிழைத்தான்.

   lakshmi1இறுதியாக இரணியன் மிகுந்த கோபத்துடன் தனது மகனை நோக்கி, உனது இறைவன் இந்தத் தூணிலும் இருப்பானோ? என்று ஓரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாய் சிரித்து, ஆந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஸ்ரீமந் நாராயணன்,  தூணிலிருந்து நரசிம்மராகத் தோன்றினார். பின்னர் இரணியனைப் பாய்ந்துப் பிடித்தனர். அந்தி சாயும் வேளையில் வாசற்படியின் மீது அமர்ந்து, அவ்வசுரனை அழித்தனர்.அப்போது நரசிம்ம சுவாமியின் திருவுருவத்தையும், கோபத்தையும் கண்டு அனைவரும் நடுங்கினர். பிரகலாதன் இரு கரங்கூப்பி வணங்கினன். ஈசுவரனே அமைதி கொண்டருளுங்கள் மாதவா மதுசூதனா அடியேங்கள்மீது கருணை செய்யுங்கள் தேவரீர், இலட்சுமி, தேவியோடு எழுந்தருள வேண்டும் என்று மண்டியிட்டு வேண்டினன். பிரகலாதனின் பக்திக்கு மெச்சிய நரசிம்மர், திருமகளைத் தனது இடப்பாகத்தில் அமர்த்திக்கொண்டு, சாந்தரூபமாய்த் திருக்காட்சி நல்கினர். பின்னர் பிரகலாதனுக்கு முடிசூட்டியருளித் தன் திருவுள்ளம் மகிழ்ந்தார்.

       பிரகலாதனுக்கு திருவருள் செய்த நரசிம்மரைக் கண்டு தேவர்களும் பிருகு முனிவர் முதலானோரும் போற்றி வணங்கினர். ஸ்ரீதரனே, தேவரீரின் இத்திருக்கோலத்தை ஈரேழு உலகத்து உயிர்களுக்கும் காட்டியருளி, உலகங்களைத் காத்தருள வேண்டும் என்று வேண்டினர்.அவர்களின் வேண்டுதலுக்கு மகிழ்ந்து நரசிம்மர், தேவர்களே நீங்கள் உத்தமமான ஓரு இடத்தில் தன்மைதரும் வெட்பாலை மரங்களாய் நின்று அருந்தவஞ் செய்து வாருங்கள், உங்களது வேண்டுதலுக்கு விரைவில் அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தனர்.பின்னர் முருகு முனிவரிடம், முனிவ, தேவர்கள் வெட்பாலை மரங்களாய் நிற்கும் புண்ணிய இடத்தில் உமக்கு பஞ்சத் திருத்தல மூர்த்தியாக திருக்காட்சி அருளுவாம் என்றனர்.அதனால் மகிழ்ந்த பிருகு முனிவரும், இந்திராதி தேவர்களும் அப்பெருமனை வணங்கி பலவாறு போற்றினர். பின்னர் பூலோகம் நோக்கி வந்தனர். பூவுலகில் எழில்மிகு சோலைகள் சூழ்ந்த ஓரு சிறுகுன்றின்மீது வெட்பாலை மரங்களாய் தேவர்கள் தோன்றினர். அவர்களுடன் வந்த பிருகு முனிவர் அம்மரங்களின் கீழமர்ந்து, நரசிம்ம சுவாமியை மனத்திலிருத்தித் தவஞ்செய்யலாயினர்.அப்போது ஓரு சுவாமி சுபநாளன்று, பிருகு முனிவரின் முன்பாக ஒராயிரம் சூரியர்களின் பிரகாசமொன்று தோன்றிற்று. அதிலிருந்து ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் எழுந்தருளினார். உடன் பிருகு முனிவர் எழுந்து, இருகரங்கூப்பி வணங்கி, ஸ்ரீ பெருமாளின் திருவடியில் விழுந்தார். கேசவா, அச்சுதா, நம்பியோரைக் காத்தருளும் தயாளனே இவ்விடத்து நித்தியமாய் எழுந்தருளியிருத்தல் வேண்டும். தேவரீரது கிடந்த நின்ற கோலங்களையும் அடியேனுக்குக் காட்டியருளி முத்தியருள வேண்டும் என்றிறைஞ்சினர்.

    அதனால் மகிழ்ந்த ஸ்ரீபெருமாள், அக்குன்றின் உச்சியில் வெங்கடேசராக (திருப்பதி) எழுந்தருளினார். பின்னர் வரதராஜராகவும் (காஞ்சிபுரம்), அரங்கநாதராகவும் (திருவரங்கம்) முத்தியையளிக்கும் யோக நரசிம்மராகவும், (சோளிங்கர்) திருக்காட்சி நல்கினார். பின்னர் அவ்விடத்து அந்தந்த மூர்த்தங்களாக அர்ச்சர் ரூபமாய் எழுந்தருளினார்.ஸ்ரீபெருமாளின் பஞ்ச திருத்தலக் கோலங்களையும் ஓருங்கே தரிசித்த பிருகு முனிவர், அம்மூர்த்திகளைப் பூசிக்கத் தீர்த்தம் ஓன்றினை அருளுமாறும் வேண்டினர். அதன்படி இலட்சுமி நரசிம்மர் தனது வலக்கரத்திலிருந்து ஓரு தீர்த்தத்தினை உண்டாக்கினார். ஸ்ரீபெருமாளின் திருக்கரத்திலிருந்து தோன்றிய அத்தீர்த்தம் பாகூ நதி எனும் பெற்று அக்குன்னிற்குக் குடதிசையில் செல்லும் சேயாற்றுடன் கலந்தது.பிருகு முனிவர் அத்தீர்த்தத்தை கொண்டு நாள்தோறும் பஞ்சத்திருத்தல மூர்த்திகளையும் பூசித்திருந்து, ஸ்ரீபெருமாளை அடைந்தனர். சிங்கமுகப் பெருமாள் எழுந்தருளிய அத்தலம், அவரது திருப்பெயரால் ஆவணி நாராயணபுரம் என்று அழைக்கப்படலாயிற்று.பிருகு முனிவர் பேறுபெற்ற இத்தலத்தில் வழிபாடு செழித்தது. எங்கும் அட்டாட்சர நாமம் ஓலித்தது. வெட்பாலை மரங்களாய் நிற்கும் தேவர்கள், ஓவ்வொரு பௌர்ணமி தோறும் சுயவுருப் பெற்று இலட்சுமி நரசிம்மரைப் பூசித்து வந்தனர்.

     அதனால்மகிழ்ந்த ஸ்ரீபெருமாள், ஓரு சுபநாளில் எங்கும் தனது தோற்றம் விளங்குமாறு திருக்காட்சி நல்கினார். அவ்வமயம் நரசிம்மரின் இடபாக்கத்தில் அமர்ந்துள்ள திருமகளின் திருமுகமும், கருடனின் திருமுகமும் அவர்கள் எழுந்தருளியுள்ள திருமலையும், சிங்கமுகத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் பலமுறை நரசிம்மரின் திருவடியில் விழுந்து வணங்கினர். நரசிம்ம மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை சொல்லி கிரிவலஞ் செய்தனர். அவ்வாறு பலகாலம் பூசித்திருந்து, விரும்பிய பலன்களைப் பெற்று பின்னர் தம்தம் உலகங்களை அடைந்தனர். பின்னொரு சமயம், திருத்தல யாத்திரை செய்த ஏரண்ட முனிவர் இத்தலத்திற்கு வந்திருந்து, நரசிம்மரை வணங்கி, அஷ்டமா சித்திகளைப் பெற்றனர். நாரதரும், தும்புருவும் வணங்கி, விரும்பிய உலகங்களுக்குச் செல்லும் பேற்றினை அடைந்தனர்.இக்கோயிலில் வைகானச ஆகமப்படி, நாள்தோறும், இருகால பூசைகள் நடைபெறுகின்றன. பிரதி சனி வாரத்தில் இலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனமும், மாதந்தோறும் நரசிம்மரின் திருநட்சித்திரமான சுவாதியில் விசேஷ பூசையும் யாகமும், வேத பாராயணமும் நடைபெறுகின்றன.

    தமிழப்புத்தாண்டு தலநாளாக சித்திரை முதல் நாள், தொன்றுதொட்டு விளங்கி வருகின்றது. சித்திரை மாதத்தில் தமிழகத்திற்கு நேராக கதிரவனின் சுழற்சி வரும். அப்போது கதிரவனின் ஓளிக்கதிர்கள் செங்குத்தாக தமிழகத்தின்மீது விழுகின்றது. சித்திரைத் தலைநாளைத் தொடக்கமாகக் கொண்டு இக்கோயிலில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. அன்று இலட்சுமி நரசிம்மருக்கும்,வெங்கடேச பெருமாளுக்கும் சிறப்புத் திருமஞ்சனமும் செய்யப்பட்டு பெருமாள் சன்னதியில் தமிழ்ப் புதுவருட பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.

  சித்திரைப் பௌர்ணமி நாளென்று கொடியெற்றம் தொடங்கிப் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் அலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு நடைபெறுகின்றது. சித்திரைச் சுவாதியன்று நரசிம்ம ஜெயந்தி ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் மூன்றாவது சனிவாரம் வெங்கடேசபெருமாள் கருட சேவை, ஐப்பசியில் தீபாவளித் திருமஞ்சனம், கார்த்திகைத் தீபம் மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை காணும் பொங்கல், மாசி மகத்தன்று இலட்சுமி நரசிம்மர் பில்லாந்தி கிராமத்திற்கு எழுந்தருளுதல், பங்குனி உத்திரத்தன்று இலட்சுமி நரசிம்மர் சோழவரம் கிராமத்திற்கு எழுந்தருளும் உற்சவம் என ஓவ்வொரு மாதமும் உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.சிறந்த பிராத்தனைத் தலமாக இக்கோயில் விளங்குகின்றது. பக்தர்கள் தங்களின் நிலத்தில் பயிரிட்ட தானியங்களின் முதல் அறுவடையினை, இலட்சமி நரசிம்ம சுவாமிக்கு நேர்த்திக் கடனாக சமர்ப்பிக்கின்றனர். இப்பெருமாளின் சந்நிதியில் நெய்தீபமேற்றி வழிபடுவோர், தோஷங்கள் நீங்கப்பெற்றும், பகைவர் பயம் இன்றியும், வாழ்வில் ஏற்றம் பெற்றுத் திகழ்வர்.சனிவாரத்தில் உபசாமிருந்து வணங்குவோருக்குச் சந்தானப்பேறு வாய்க்கும், அவ்வாறு குழந்தைப்பேறு வாய்க்கப்பெற்றோர் துலாபாரம் செலுத்தி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். திருமலை உச்சியில் எழுந்தருளியுள்ள வேங்கடேசப்பெருமாளை வணங்குவோரது கடன் தொல்லைகள் விலகும். பாவங்கள் அழியும்.

அமைவிடம் :  இத்தலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலைக்கு இடையில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு : கோவில் மேனேஜர்: திவாகர், செல் : 8608999572

செய்தி : ப.பரசுராமன்

 படம் : ப.வசந்த்

The post தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருக்காட்சி நல்கிய லட்சுமி நரசிம்மர் appeared first on SWASTHIKTV.COM.


சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்த காரைக்கால் அம்மையார்

$
0
0

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் அம்மையப்பனாக இருந்து அருள்பாலிக்கக் கூடியவன். அம்மையப்பனான சிவனால் அம்மை என்றும் அப்பன் என்றும் அழைக்கப்பட்ட அடியார்கள் இரண்டு பேர் உண்டு. அம்மை என அழைக்கப்பட்டவள் காரைக்கால் அம்மையார். அப்பன் என அழைக்கப்பட்டவர் கண்ணப்பநாயனார்.புனிதவதி என்னும் அவளது இயற்பெயர் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பட்டமைக்கு இறைவன் அவளை அம்மையே என்று அழைத்தமைதான் காரணமாயிற்று. புனிதவதியார் பரமத்தன் என்பவனை மணந்து காரைக்காலில் இனிமையான முறையில் இல்லறம் நடத்தி வந்தார். ஓரு சமயம் அவள் கணவனை காணவந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனுக்குத் தந்தனர். அவன் அந்த இரண்டு கனிகளையும் வீட்டுக்கு அனுப்பினான். புனிதவதியதத் அதனைத் தன் கணவனுக்குப் படைக்கலாம் என்று பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

  image3அந்நிலையில், சிவனடியார் ஓருவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அம்மையார் சோறு மட்டும் சமைத்திருந்தார். கறி முதலானவை தயாரகவில்லை. வந்த அடியவர் பசியோடு இருத்ததைப் பார்த்து அவருக்கு உணவிட்டு மாங்கனியும் படைத்து உண்ணச் செய்து அனுப்பினார். சிறிது நேரம் சென்றபின் கணவன் பரமதத்தன் வந்தான்.வழக்கம்போல உணவு படைத்தார் அம்மையார். அவன் அனுப்பியிருந்த மாங்கனியை கறி அமுது முதலானவற்றுடன் படைத்தார். பழத்தைச் சுவைத்துத் தின்றான் கணவன். அதன் இனிய சுவையில் மயங்கினான். இன்னொரு பழம் கொடுத்தேனே, அதனை கொணர்க என்றான்.அவன் சுவை உணர்வை கெடுக்கலாகது என நினைத்தாள் அவள். தான் இன்னொரு பழத்தை அடியவர் ஓருவருக்கு அமுதாகப் படைத்ததைக் கணவனிடம் சொல்லவில்லை. இன்னொரு பழத்தை எடுத்துவரச் சொல்வதுபோல அடுக்களையில் நுழைந்தாள், இறைவனை வேண்டி நின்றாள். இறையருளால் அவள் கைக்குப் பெரும் சுவையுடைய

  அதிமதுரக் கனி ஓன்று வந்தது. அந்தக் கனியைக் கொண்டுவந்து கணவன் இலையில் இட்டாள். பரமதத்தன் அதனைச் சுவைத்தான். முன்னால் சுவைத்த கனிச்சுவையிலிருந்து வேறுபட்டதாகவும், அதனினும் ஏன் அமிழ்தினும் மேம்பட்டதாகவும் இக்கனியின் சுவை இருந்ததைக் கண்டு நீ இதனை எங்கு பெற்றாய் என கேட்டான்? கணவனிடம் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும் நடந்ததை சொன்னாள். இந்த விஷயத்தைக் கேட்ட பரமதத்தன் இன்னொரு கனி எனக்கு வரவழைத்து கொடு என்று கேட்டான். தனியே சென்று இறையருளால் கிடைத்தது என்ற வார்த்தை பொய்யாகாமல் இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாள் அம்மையார். இறையருளால் இன்னும் ஓரு கனி அவள் கையில் கிடைத்தது. அந்தக் கனியை அவள் தன் கணவன் கையில் இட்டாள். அவன் மாங்கனியைப் பார்த்த அளவில் மாயமாய் மறைந்தது அந்த மாங்கனி. அது கண்டு அஞ்சினாள். அம்மையாரை தெய்வமாக நினைத்தான். அவளோடு ஓரே வீட்டில் இருந்தாலும் உறவுத் தொடர்பில்லாமல் இருந்தான்.

  அதன்பின் பரமதத்தன் மதுரைக்குச் சென்று பெருவணிகம் செய்ததும் இன்னொரு பெண்ணை மணம்புரிந்து கொண்டதும் அவள் மூலம் பிறந்த குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததும் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையாரின் தெய்வத்தன்மையை உணர்த்தும் வகையில் அவர் மாங்கனி பெற்ற அதிசயம் காரைக்காலில் அவருக்கு உள்ளே கோயிலில் மாங்கனித் திருவிழா என்ற பெயரால் விசேஷமாகக் கொண்டாடப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்தச் சம்பிரதாய திருவிழா தரிசிப்பதற்குரிய திருவிழாவாகும்.

 01july_tymbg06__02_2458752fசிவபெருமான் அம்மையே என்றழைத்த பெருமை காரைக்கால் அம்மையாரை சேரும். இதனால் பெருமையடைகிறது காரைக்கால் என்றால் மிகையாகாது. 63 நாயன்மார்களில் ஓருவராக உள்ள காரைக்கால் அம்மையார், சிவபக்தையாக இருந்து, இறைவன் இருக்கும் கைலாயத்தை காலால் நடந்து செல்லல் ஆகாது என்று முடிவு செய்து தலைகீழாக நடந்து சென்றதன் விளைவாக, இறைவன் புகழ், பெருமை கொண்ட புனிதவதியார் என்ற அழியா புகழைப் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்கால் நகரப் பகுதியில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் விமரிசையாக விழா நடத்தப்படுகிறது. புனிதம் நிறைந்த தெய்வத்தாய் வாழ்ந்த காரைக்காலில் ஓவ்வொரு ஆண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி, மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. விழாவில் பிச்சாண்டவர் வீதியுலாவில் பக்தர்கள் மீது மாங்கனிகள் வீசப்படும். அவ்வாறு இறைக்கப்படும் மாங்கனியைப் பிடித்து, சாப்பிடுவது இறைவன் அளித்த அமுதமாகவும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகக்கொண்டு, விழாவில் கலந்துகொண்டு மாங்கனிகளைப் பிடித்து சாப்பிடுவர். இந்த வரலாற்று நிகழ்ச்சியை காண உள்ளூர், வெளிமாநில பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள்.

மாங்கனி திருவிழா :-

  இன்று (17.06.2016) மாப்பிள்ளை அழைப்புடன் நிகழ்ச்சிய தொடங்கி, நாளை 18ம் தேதி புனிதவதியார் பரமபத செட்டியார் திருக்கல்யாணமும், 19ம் தேதி கைலாசநாதர் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் வீதியுலா (மாங்கனி இறைத்தல்) நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் மாம்பழங்களை இறைத்து வழிபாடு நடத்துவார்கள். 20ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் அம்மையார் இறைவனுக்கு காட்சிதரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செய்தி:ப.பரசுராமன்

படம் :ப.வசந்த்

 

 

The post சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்த காரைக்கால் அம்மையார் appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 18/06/2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக அமைந்துள்ள 468 சித்தர்களுக்கு இன்று மாலை பௌர்ணமி பூஜை.

$
0
0

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக அமைந்துள்ள 468 சித்தர்களுக்கு இன்று மாலை பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வருண பகவானே சித்தர்களுக்கு அபிஷேகம் செய்வது போன்ற காட்சி.

The post ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக அமைந்துள்ள 468 சித்தர்களுக்கு இன்று மாலை பௌர்ணமி பூஜை. appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 20/06/2016

சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் கொடுத்த படைவீடு

$
0
0

  திருவண்ணாமலை அடுத்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அருகே உள்ள குன்றின் மீது ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மயில் மேல் நின்ற கோலத்தில் காட்சித்தருவதோடு, இத்தலத்தில் சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய தலம். படை+வீடு = படைவீடு படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால் படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.

   சிவபெருமானிடம் அளவற்ற வரங்களைப் பெற்று தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்தோடு அனைத்து தேவர்களையும் அடக்கியாண்டு கொடுமைப்படுத்தினான் சூரபத்மன். தேவதச்சனை அழைத்து தென்கடலின் நடுவில் மிக பிரமாண்டமான பாதுகாப்பான மாட மாளிகைகள் நிறைந்த வீர மகேந்திரபுரி என்ற நகரை உருவாக்கச் செய்தான். நகரின் பிரதான சபையில் சிங்காதனத்தின் மேல் அமர்ந்த சூரபத்மன், பிரம்மாவை விட்டுத் தனக்கு மணிமகுடம் சூட்டச்செய்தான். தலைகுனிந்து வணங்கிய தேவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பணி செய்ய ஆணையிட்டான். பிரம்மா தன் புத்திரர்களோடு சபைக்கு வந்து தினமும் பஞ்சாங்கம் படிக்கவேண்டும், வீதிகளில் உள்ள குப்பைகளையெல்லாம் வாயுதேவன் அகற்ற வேண்டும். வீதிகளில் சந்தனம், பன்னீர் ஆகியவற்றை வருணன் தெளிக்க வேண்டும். அசுரர்களையும் அசுர சேனைகளையும் யமன் கொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் சூரன் இட்ட வேலைகளைத் தேவர்கள் மனம் நொந்தபடி செய்தனர். சூரபத்மனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், சிவபெருமானை அணுகி அருள்புரிய வேண்ட அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்கென்றே எமது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவசுப்பிரமணியன் விரைவில் அவர்களைக் கொல்வான் என்று கூறிய பெருமான், கந்தனை நோக்கிக் கடைக்கண்ணால் அருளாணை பிறப்பித்தார்.

  koil இந்திரனை மயில்வாகனமாகக் கொண்டு அக்னியை சேவற்கொடியாக்கி வீரபாகு தேவருடன் களமிறங்கிய முருகபெருமான், சூரபத்மனை இரண்டு கூறாகப் பிளந்து மயில்வா கனமாக, சேவற்கொடியாக ஏற்றுக்கொண்டார். சிவபாலா நானும் பிரம்மாவும் மற்றவர்களும் சூரபத்மனுக்கு வரம் கொடுத்து அவனைப் பலசாலியாக்கினோம். தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அவன் எங்களையே எதிர்த்தான். இந்திரன் நடுநடுங்கிப் போனான். நீ உன்னுடைய பெருவீரத்தினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து இந்திரலோகத்தை மீட்டாய். உன்னைப் பற்றிய அருமை தெரியமாமல் உலகத்தோர், நான் காக்கும் கடவுள் என்று என்னை புகழ்கிறார்கள். தேவர் உலகத்தை நிம்மதியாக வாழவைத்த நீயல்லவா மாபெரும் கடவுள் என திருமால் தன் மருமகனான மயில்வாகனனைப் புகழ்ந்து தள்ளினார்.

    இந்திரசேனா ஓரு படி மேலே சென்று, உமாபத்திரா, எங்களை அசுரரிடமிருந்து மீட்டு வாழவைத்த நீதான் இந்த இந்திரலோகத்துக்கு அதிபதியாக வேண்டும். எனது நன்றிக்கடனாக என் மகள் தெய்வானையை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என முறையிட்டான்.புன்னகை புரிந்த முருகப்பெருமானோ நீயே இந்திராபதியாக இரு. நாம் தேவர் படைக்குத் தளபதியாக தேவசேனாதிபதியாக இருந்து அசுரர் கூட்டத்தை அழித்து, எப்போதும் அமைதி நிலவச் செய்வோமாக… என அருள்புரிய…பிரம்மாதி விஷ்ணு தேவர்களும் சிவசுப்பிரமணியனே தேவசேனாதிபதியாக இருக்க வேண்டும் என்று ஆமோதித்து வணங்க…

     இந்த சமயத்தில் தமிழகத்தில் தொண்டை நாட்டில் கமண்டல நதிக்கரையில் மிகவும் புகழ்பெற்று, புராதனமாக விளங்கிய குண்டலீபுரத்தில் அன்னை ரேணுகாம்பாள் அருளாட்சி புரிந்து கொண்டிருந்தாள். மாதேஜோமயமாயும் குழந்தையாகவும் இருக்கிற சிவசுப்பிரமணியக் கடவுளைத் தேவசேனாதிபதியாக இருக்கிற சிவசுப்பிரமணியக் கடவுளைத் தேவசேனாதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்ய குண்டலீபுரத்துக்கு அனைவரும் வந்து நடத்தி வாழ்த்த வேண்டும் எனப் பதிவிரதையான ரேணுகாதேவி வேண்டினாள். அன்னை வேண்டியபடி, கணக்கற்ற புண்ணிய தீர்த்தங்களையும், நூற்றுக்கணக்கான திருக்கோயில்களையும் கொண்ட புனித பூமியான குண்டலீபுரமான படவேட்டுக்கு பார்வதி பரமேசுவரர், சீதா ராமர், லட்சுமி நாராயண நரசிம்மர், பாமா- ருக்குமணியுடன் வேணுகோபாலன் ஆகிய அனைத்து கடவுள்களும் குண்டலீபுரத்துக்கு ரேணுகாதேவியின் ஆலயத்துக்கு எதிரேயுள்ள ஓரு சிறிய குன்றில் வந்து குவிந்தனர்.ஆரணிக்கு அருகிலுள்ள படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த குமரக் கடவுளுக்கு அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம்  நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் மங்களகரமாக நடத்தி முடித்தாள்.

        அதே சமயம் அதிசயமானதொரு காட்சியைக் காண நேர்ந்தது. கிழக்கே பார்த் திருமுகம். மயில் மீது அமர்ந்த முருகனைத்தான் நாம் குன்று தோறாடும் குமரக் கடவுளைத் தரிசிப்பது வழக்கம். ஆனால் இங்கோ வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளிநாயகன் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. அதுமட்டுமல்ல மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பதும், எங்கும் காணமுடியாத காட்சியாகத்தான் தென்படுகிறது. மயில்மேல் அமர்ந்த முருகன் ஓரு சிலைதானா அல்லது அப்படியே நேரில் வந்து அமர்ந்து அருள்புரிகிறானா என்று ஆச்சியப்படுமளவுக்கு அற்புதமானதொரு சிற்பக்கலை வேலைப்பாடு, என்ன வேண்டும்? என்று கேட்பதுபோல நம்மை நோக்கி நிற்கும் வேலவனிடம் என்ன கேட்டாலும் தருவான்.

அமைவிடம் :

                வேலூர் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 32வது கி.மீட்டரில் சந்தவாசல் எனும் ஊரில் 7வது  கி.மீட்டரில் உள்ளது.

தொடர்புக்கு  : போன் : 04181 – 248224, 248424

செய்தி : ப.பரசுராமன்

படம் : ப.வசந்த்

 

 

The post சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் கொடுத்த படைவீடு appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 21/06/2016

அன்னை உமையவளுக்கு ஈசன் உபதேசித்த அபூர்வ பஞ்சபட்சி சாஸ்திரம்

$
0
0

ஆய கலைகள் என போற்றப்படும் 64 – கலைகளையும் விட மேன்மை பெற்ற கலைகளாக விளங்குவது நான்கு கலைகள் ஆகும். அதுவே சரகலை : பஞ்சபட்சி : கெவுளி சாஸ்திரம் : கொக்கோகம்: என்ற நான்கு வித சித்தர் கலைகள் ஆகும்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை “யோகிகள்” “ஞானிகள்” “முனிவர்கள்” “சித்தர்”களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர். இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்து குருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

panja

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும். தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் “பஞ்ச பட்சி சாஸ்திரம்” இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும். நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் – 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும். பஞ்சபூதம் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும் வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே

பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே

பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே

என்பது பெரியோர் வாக்குவாகும். மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால் தான், இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.

இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை, சிலம்பம் , பிரச்சனை, வழக்குகள், போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர். அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை வாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான், அவனை எவரும் வெல்ல முடியாது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம், செய்தொழில், காரியங்கள், வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும் நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர். உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.

.

The post அன்னை உமையவளுக்கு ஈசன் உபதேசித்த அபூர்வ பஞ்சபட்சி சாஸ்திரம் appeared first on SWASTHIKTV.COM.


எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

$
0
0

  வேலூர் மாவட்டம் வாலாஜப்பேட்டை அடுத்த கீழ்புதுபேட்டையில் தன்வந்திரி பீடம் அமைந்துள்ளது. தன்வந்திரி பிடத்தில் நாள்தோறும் யாகம் நடைபெற்று கொண்டியிருக்கிறது. இந்த யாகம் கடந்த 12 ஆண்டுகளாக அணையாமல் எறிந்து கொண்டியிருக்கிறது. பக்தர்கள் ஸ்ரீ முரளிதர சுவாமிகளை அணுகி பின்வரும் யாகத்தை செய்து அதன் பலனை பெறலாம்.

 யாகமும் அதன் பலனும்:

1.கார்ய சித்திக்கு – கணபதி யாகம்.
2.க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.
3.ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.
4.ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.
5.ஆரோக்யமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.
6.சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.
7.கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம், மற்றும் ஹயக்ரீவர் யாகம்.
8.செய்வினை, மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.
9.சகல கார்ய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.
10.பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம் நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.
11.திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.
12.ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.
13.புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.
14.சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ ருத்ர யாகம்.
15.அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ வித்யா யாகம்.
16.ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.

CONTACT DETAILS:

Sri Muralidara Swamigal

Phone: 94433 30203

Sri Danvantri Arogya Peedam

Danvantri Nagar, Kilpudupet,

Walajapet 632513,

Vellore District.

Phones: 91-4172-230033, 292133, 292433,

E-mail: danvantripeedam@gmail.com

Web: www.dhanvantripeedam.com

 

The post எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 22/06/2016

எம்மைத் தரிசித்துச் செல்லுங்கள் என்று கூறிய ஐயாறப்பர்

$
0
0

   தஞ்சாவூர் அருகில் நாதசன்மா-அநவித்யை என்ற தம்பதி வாழ்த்து வந்தனர் .சிவனின் மீது  சிறந்த சிவபக்தையாக திகழ்ந்தார். ஐயாறப்பமையும், நாயகியையும் தினசரிமூன்று வேளையும் பூஜை செய்துவந்தனர்.ஐப்பசி மாதகடைசி நாளில் வெகு விமர்சியாக கடைமுழுக்கு நடைபெறும்.அன்று அங்குள்ள அனைத்து ஆலயமூர்த்திகளும் உலா வந்து,மாயூரநாதர்-அபயாம்பிகையேடு காவிரியில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதீகம்.அதனால் இங்கு நிரடுவதால் பல தலைமுறைகளாக நாம் செய்த பாவம் கரைத்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.

  நாதசன்மா-அநவித்யை தம்பதிக்கு இந்த கடைமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு, துலா கட்டத்தில் நிரடுவது நீண்டநாள் ஆசை. உடனே காலை பூஜைகளை திருவையாறில் முடித்துவிட்டு இரவு திரும்பிவிடும் எண்ணத்வதாடு மாயூரம் புறப்பட்டனர். ஆனால், இரவு நேரம் நெரிகிவிட்டது. நினைத்தபடி ஐப்பசி கடைசி நாளில் பகலில் காவிரியில் நீராட முடியவில்லையே என வருதபட்டனர். இரவு நேரம் ஆகிவிடத்தால், அவர்களால் உடனடியாக திருவையாறுக்கு திரும்பி ஐயாறப்பமையும் தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் பெரும் கவலையடைதனர். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. கவலை வேண்டாம். பொழுது விடிவதற்குள் காவிரியில் போய் நிரடுங்கள். உங்களுக்கு ஐப்பசியில் நீராடியஅனைத்து புண்ணியங்களும் கிடைக்கும்.

 தவிர திருவையாற்றுக்கு திரும்ப முடியவில்லையே என வருந்த வேண்டாம்.மாயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கில் உள்ள ஆலயத்தில் யாம் எழுந்தருளியுளோம். அங்கு வந்து எம்மைத் தரிசித்துச் செல்லுங்கள்.’ அதன்படி இருவரும் மறுநாள் விடியற்காலையில் காவிரியில் நீராடி விட்டு, ஆலயத்திற்கு வந்து இறைவனையும்,இறவியையும் வழிபட்டனர். தன்னை வணங்கியஇருவரையும் தன்னுள் ஐக்கியமாகும்படி இறைவன் பணிக்க, அப்படியே நாதசன்மாவும்,அநவித்யையும் சிவபெருமானுடம் ஐக்கியமாயினர். நாதசன்மா ஐக்கியமான சிவலிங்கம்,மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கணக்கடி விநாயகர் சந்நதிக்கு அருகே தனிச் சந்நதியில் அமைந்துள்ளது. அநவித்மய ஐக்கியமான சிவலிங்கம் மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள அன்னை அபயாயம்பிகை சந்நதிக்கு தென்புறத்தில் இருக்கிறது. அநவித்தை ஐக்கியமான சிவலிங்கத்திற்கு வழக்கமான ஆடை அலங்காரங்கள் கிடையாது.மாறாக சிவலிங்கத்திற்கு இங்கு சேலையையே அணிவிக்கின்றனர். இது எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.

ஆலயத்தின் சிறப்பு

  ஐயாறப்பர் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் திருகுளமும்,அதனருகே படித்துறை விநாயகர் ஆலயமும் உள்ளன. அடுத்துள்ள முகப்பைக் கடந்ததும் விசாலமான பிராகாரத்தில் பலிபீடம், நந்தியம் பெருமான், கொடிமரம் ஆகியவை உள்ளன.மேற்கு பிராகாரத்தில் விநாயகர், தென் கயிலைநாதர், வடகையிலை நாதர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், மகாவிஷ்ணு, கஜலட்சுமிசந்நதிகள் உள்ளன. வடக்கில் சண்டிகேஸ்வரர் சந்நதி கொண்டுள்ளனர். வடகிழக்கில் பைரவர், சனிபகவான், சூரியன் திருமேனிகளும், கிழக்குப் பிராகாரத்தில் நவகிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர்.தெற்குப் பிராகாரத்தில் நால்வர் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் இடதுபுறம் அன்னை அறம் வளர்த்த நாயகியின் சந்நதி. அன்னையின் கருவறை முன்பு இரண்டு துவார பாலகிகள் சுதை வடிவ திருமேனியராக வீற்றிருக்கின்றனர்.

 அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் சங்கு மலையையும், மேல் இடது கரத்தில் தாமரையும் ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டி நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். மகாமண்டபத்தின் இடதுபுறம் பள்ளியறையும், நடராஜர்-சிவகாமிஅருள்பாலிக்கும் நடன சபையும் உள்ளன. அடுத்துள்ள இறைவனின் அர்த்த மண்டப நூழைவாயில் துவாரபாலகர்களின் சுதை வடிவ திருமேனிகள் அலங்கரிக்க, கருவறையில் இறைவன் ஐயாறப்பர் சிவலிங்கத் திருமேனியில் ஒளிர்கிறார். இறைவனின் தேவகோட்டத்தில் வடபுறம் பிரம்மா, துர்க்மகயம்மன்; கிழக்கில் அர்த்தநாரீஸ்வைர்; தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்கின்றனர். தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வருக்கு தொடர்ந்து 5 வாரங்கள் அர்ச்சனை செய்து வந்தால் தடைபட்டதிருமணம் உடனே நடந்தேறுகிறது.

 மாத அமாவசை தினங்களில் அர்த்த நாரீஸ்வரருக்கு இங்கு குறைந்தது 350 அர்ச்சனையாவது நடைபெறுகிறது! பிரதோஷபூஜையும் வெகு விமர்சையாக மேற்கொள்ளபடுகிறது. ஆலய தலவிருட்சம் வில்வம். வெள்ளிதோறும் மாலை ஆறு மணி அளவில் வார வழிபாடும், கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெறுகின்றன. இறைவன் சந்நதியின் முன் அப்பர் சுவாமிகள் தமையில் விழுந்து இறைவனை வணங்குவது போன்ற கருங்கல் சிலை ஒன்று உள்ளது. இங்கு சித்திரை சப்தஸ்தான திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். பத்தாம் நாள் ஆலயத்திலிருந்து இறைவனும் இறைவியும் காலையில் பல்லக்கில் புறப்படுவர். சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு திரிபுரசுந்தரி சமேத பிரம்மபுரீஸ்வைர் கோயில், சித்தர்காடு மங்கல சௌந்திர நாயகி சமேத மார்க்க சகாயசுவாமி கோவில், மூவலூர் அறம்வளர்த்த நாயகி அம்பாள் சமேத அழகியநாதர் கோயில், சோழம்பேட்டை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வர சுவாமி கோவில் (வள்ளலார் திருக்கோவில்), திருஇந்தளூர் காசிவிசாலாட்சி சவைத காசிவிஸ்வநாத சுவாமி கோவில், துலாக்கட்டம் அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி  கோவில் ஆகிய தலங்களுக்களும் உள்ளது . திருவையாறில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஐயாறப்பரும், இறைவி அறம்வளர்த்த நாயகியும், அதே பெயர்களில் இங்கும் எழுந்தருளியிருக்கின்றனர்.

இருப்பிடம் :

மயிலாடுதுறை பேரூந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐயாறப்பர் ஆலயம்.

பூஜை நேரம் : இரவு 7.30 மணி

The post எம்மைத் தரிசித்துச் செல்லுங்கள் என்று கூறிய ஐயாறப்பர் appeared first on SWASTHIKTV.COM.

தன்வந்திரி பீடத்தில் திரைப்பட நடிகர்கள் யாகம் செய்தனர்.

$
0
0

 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 22.06.2016 காலை திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.ராமராஜன் சிரிப்பு நடிகர்களான, திரு.செந்தில்,திரு.பாண்டு திரு.வையாபுரி,வருகை புரிந்து தன்வந்திரி  யாகத்திலும்,ப்ரத்தியங்கிரா தேவி யாகத்திலும்  கலந்துகொண்டு பின்னர் தரிசனம் செய்தனர்.திரு.செந்தில் அவர்கள் குடும்பத்தினருடன் வருகை புரிந்து யாகத்தில் கலந்து கொண்டார்.பங்கேற்ற நடிகர்கள் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசிபெற்றனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

The post தன்வந்திரி பீடத்தில் திரைப்பட நடிகர்கள் யாகம் செய்தனர். appeared first on SWASTHIKTV.COM.

ஆயிரம் ஆண்டுக்குப்பின் கடலிலிருந்து அமிர்த கலசத்துடன் வந்த மருத்துவ சித்தர் தன்வந்திரி

$
0
0

 கேரளா மாநிலம், ஆலாப்புழா அடுத்துள்ள சேர்த்தலாவில் மருத்துவ சித்தர் தன்வந்திரிக்கு தனிக்கோயில் உள்ளது.  இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முதலில் அந்த கடலிலிருந்து எழுந்தவரே தன்வந்திரி ஆவார். இவர் இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஓருவராக கருதப்படுகிறார். சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர்.

ஜோதியில் பிறந்த மகாபுருஷர் :-

Thottuva-Sri-Dhanvantari-Temple51 இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி,நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஓன்று எழுந்தது.அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஓன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.

பாற்கடலிலிருந்து அமிர்த கலசம்:-

  தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் ஓரு தேவர். இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பாற்கடலிலிருந்து அமிர்த கலசத்தை எடுத்துவந்தார், வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூட்டினார். தன்வந்திரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருதமுடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஓருவர் என்ற அந்தஸ்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய். அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக்கொள்ளும் எனக் கூறியப்பின் மறைந்து போனார்.

  வெகு காலத்துக்குப்பின் தன்வந்திரி காசியை ஆண்டுவந்த ஓரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஓருமுறை தன்வந்திரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழிமறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக்கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது.

  வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்திரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்திரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச்செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்திரி தமது மருத்துவ மகிமையால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார்.

d (1)  ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்திரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானசதேவி அவரைப்பற்றிய விவரத்தை கேட்டு அறிந்ததும், அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர். அவர் தேவர்களில் ஓருவர் என்பதை புரிந்துகொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்திரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக்கொள்ள தன்வந்திரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. தன்வந்திரி தனது கையால் அமிர்த கலசத்தை வைத்துக்கொண்டுள்ளவாறு காட்சி தருகின்றார்.

தமிழகத்தில் இவருக்கு தலம் :-

  இவருக்கு ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்திரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். மேலும் சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலையில் வாலாஜப்பேட்டை அருகில் தன்வந்திருக்கு தனி கோயில் அமைந்துள்ளது.

கேரள திருவிழா:-  

  இங்கு ஒணத்தன்றும், பிறதிருவோண நட்சத்திர நாட்களிலும் பால் பாயாச வழிபாடு நடக்கிறது. சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடத்தப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாள் தன்வந்திரி நாளாக கொண்டாடப்படுகிறது.

தலச்சிறப்பு:-

  தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். தன்வந்திரிக்கு ஒணத்திருவிழா அன்று இங்கு நடக்கும் பால்பாயாச வழிபாடு சிறப்புமிக்கது.

அமைவிடம் :-

  கேரளா மாநிலம், சேர்த்தலா, மருத்தோர் வட்டம் ஆலப்புழாவில் இத்திருக்கோயில் உள்ளது. இக்கோயில் காலை 5 முதல் 10.30 மணிவரை & மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் திறந்திருக்கும். பஸ் வசதி உண்டு.

செய்தி : ப.பரசுராமன்

படங்கள் : ப.வசந்த்

The post ஆயிரம் ஆண்டுக்குப்பின் கடலிலிருந்து அமிர்த கலசத்துடன் வந்த மருத்துவ சித்தர் தன்வந்திரி appeared first on SWASTHIKTV.COM.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>