Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்!

$
0
0

    வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்

 ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்

 சர்ப்ப கிரகங்களான ராகுவும்–கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’ என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங் களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.

 அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம். ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.

 மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற் பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு மிகுந்தது.

வீட்டில் பூஜை செய்வது எப்படி?

 ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாத வர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.

சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை நீங்க

 வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

  செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகு காலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.

எந்த நாளில்.. எப்படி பலன் :

 வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.

 அதன்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

 ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

 ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வரு கிறது. விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம்.

 ராகுகால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.

 ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

 இந்தச் சொல்லுக்கு ‘முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க’ என்று பொருள்.

The post வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


போகர் வடிவமைத்த நவபாஷான பழனி முருகன்

$
0
0

  போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தவா் என்றும் அவருடைய வரலாற்றையும் படித்திருக்கிறோம். போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

 murugaதகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர் அவா்கள்.  போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று தோன்றி  புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து சென்று அதன் புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரின் உள்ளுணா்வால்  உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. போகர், தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுளுக்கும்  பசிக்காது, தலைமுடி நரைக்காது, பார்வை மங்கலாகாது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும்  முதுமை வயது தோன்றவே தோன்றாது, தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்”என்றார்.  போகர் அந்தப் பழத்தைச்  சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

 சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.  பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். “யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.  அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.  போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

 போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார். அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார். அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.  போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தீராதநோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன்....

 போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார் போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார்.

 பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது. இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post போகர் வடிவமைத்த நவபாஷான பழனி முருகன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம்

$
0
0

காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம் (Thuvidha Naga Bantham)

 ஞானபானு பாம்பன் சுவாமிகள் (Pamban Swamigal)  இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.  இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.  துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும்.  இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.

 நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.  அதற்கு பொருள் செலவு அதிகம்.  செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.

 நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது. அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.

 முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.

முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.  திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.

  பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.  அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.

 அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.

 ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.  மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.

 தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 15.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 15.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

 

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 15.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சூரிய கிரகணம்- கிரகண பாதிப்பிலிருந்து விடுபட

$
0
0

கிரகண பாதிப்பிலிருந்து விடுபட

சூரிய கிரஹணம்:

 கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.

chandra grah2

 சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும். சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும் நிலையில் முழு சூரிய கிரகணம் இன்று (21/08/2017) திங்கள் கிழமை ஸோமவார அமாவாசை தினத்தில் இரவு இந்திய நேரப்படி இரவு 9.17 முதல் இரவு 2.34 வரை தோன்றுகிறது. இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும்.

ஜோதிடத்தில் கிரகணங்கள்:

 வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது.

 ஆனால் ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் – சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் – சந்திரன் – ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும்.

 எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர்.

 அதை தொடர்ந்து இன்று ஏற்படும் சூரிய கிரஹணத்தில் திருகணித பஞ்சாங்க படி சூரியனும் சந்திரனும் சிம்மராசியில் நின்று ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் நிற்கும் வேளையில் திங்கட்கிழமையுடன் கூடிய. ஸோமவார அமாவாசை தினத்தில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிறது.

ஈசன் செயலில் ஓர் நன்மையான காரணம் இருக்கும் கிரஹணம் ஜோதிட ரீதியாக ஏற்படும் மாற்றங்கள்

 இன்றைய சூரிய கிரஹனத்தின்போது கால புருஷனின் அயன சயன போக ஸ்தானம் எனப்படும் மீன லக்னத்தில் நீர் ராசி மற்றும் மோக்ஷ திரிகோணத்தில் அமைந்து மற்றொரு மோக்ஷ திரிகோணமான கடகத்தில் ராகு சுக்கிரனோடு இனைவு பெற்று நின்று மற்றொறு மோக்ஷ திரிகோணமாகிய விருச்சிகத்தில் சனி வக்ரம் பெற்று நிற்கும் வேளையில் சூரிய கிரஹணம் நிகழ்கிறது. பொதுவாக பதினைந்து நாட்களில் இரண்டு கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

 தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்நிலையில் சூரிய கிரஹனம் சூரியனின் ஆட்சி நிலையில் ஏற்படுகிறது. அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றை குறிக்கும் சூரியன் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து தனது ராசிக்கு பன்னிரெண்டில் கடகத்தில் மறைந்து பலமிழந்து நின்றிருந்தது. மேலும் ஆண்மை, வீரம், பலம், அதிகாரம், ராணுவம் ஆகியவற்றை குறிக்கும் செவ்வாய் நீசவீட்டில் பலமிழந்து நின்றிருந்நது. இந்நிலையில் சூரியன் மட்டும் சிம்மத்திற்கு சென்று கிரஹண கால லக்னத்திற்கு ஆறாம் வீட்டதிபதியாகி (சத்ரு ஸ்தானம்) நிற்கிறது.

  நீர் ராசிகளில் ராகு சுக்கிரன் வக்கிர சனி ஆகியவை நின்று கிரஹணம் ஏற்படுதால் கடல் சீற்றம், தொடர்மழை, வெள்ள சேதங்கள் ஆகியவையும் இந்த ஆண்டு இறுதி வரை ஏற்பட்ட வண்ணம் இருக்கும். மேலும் விஷங்களால் பாதிப்பு ஏற்படும். பங்கு சந்தையும் திடீர் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. மோக்ஷ திரிகோணங்களில் கர்ம விணைகளை குறிக்கும் ஸர்ப கிரகங்கள், அசுர குருவான சுக்கிரன் மற்றும் சனைஸ்வரர் வக்ரம் பெற்று நிற்பதால் ஆன்மீக பெரியோர்களுக்கு மோக்ஷ நிலை ஏற்படும்.

கிரகண பாதிப்பில் இருந்து விடுபட

 கிரகணத்தால் நமக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சாஸ்திரங்கள் ஆலோசனைகளை வழங்குகின்றன. அதன்படி, புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தானங்கள் வழங்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். மேலும் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ சிந்தனையுடன் கிரகணம் முடியும் வரை, ஜபங்கள், பாராயணங்கள் செய்யலாம்.

 கிரகணத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து விடுபட, நாம் அணிந்த உடைகளை, நீரில் நனைத்து, துவைத்து காயப் போடுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம். பாதிப்படைந்த கதிர்வீச்சின் தன்மை கோயிலில் உள்ள தெய்வ சிலைகளின் அஷ்ட பந்தனத்துக்கும் (பீடத்தில் உள்ள மருந்துக் கலவை) தெய்வச் சிலைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கோயில்களை மூடிவிடுவார்கள்.

 மகம் நட்சத்திரத்தில் ஏற்படுவதால், மகம், அசுவினி, மூலம், ரேவதி, பூரம் நட்சத்திரங்களில் உள்ளவர்கள் சாந்திப் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

Image result for mobile icon png9941510000     Related image8124516666     Image result for facebook like png    Image result for youtube subscribe png

 

The post சூரிய கிரகணம்- கிரகண பாதிப்பிலிருந்து விடுபட appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 16.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 16.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

 

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 16.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 17.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 17.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 17.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!

$
0
0

புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால்7 ½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

‘நன்றிதமு சனிகவச நாள்தோறும்
அன்பினொடு நவின்று போற்றில்
வென்றிதரும் விறல் உதவும் புகழ் அளிக்கும்
பெருவாழ்வு மேவ நல்கும்
கன்றுபவத் துயரொழிக்கும் வினை ஒழிக்கும்
பணி ஒழிக்கும் கவலி போக்கும்
அன்றியும் உள் நினைந்தவெல்லாம் அங்கை நெல்லி
யம்கனியாம் அவனி யோர்க்கே”

(சனி கவசத்திலிருந்து சில வரிகள்)

‘நவம்” என்றால் ஒன்பது. கிரகங்கள் என்பது கோள்களைக் குறிக்கும், ஒன்பது கிரகங்களாகிய, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), சுக்கிரன், ராகு, கேது மற்றும் சனி ஆகியவற்றின் சுழற்சியின்போது இயற்கையிலும் மாறுதல் நடைபெறுகிறது. அதேபோன்று, மனிதர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதைக் காணலாம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய ஜோதிடர்கள் கணித்துக் கூறி உள்ளனர்.images (1)

கோள்கள் இடம் விட்டு இடம் மாறும் சமயம், மனிதர்களுக்கும் அவர்கள் பிறந்த நேரத்தின்படி, அவர்களது ஜன்ம நட்சத்திரத்தின் பலன்களை துல்லியமாக கணிக்க முடியும். அடுத்த சுழற்சியின்பொழுது, அதற்கேற்றபடி ஏற்ற இறக்கங்களை காண முடியும் என்கின்றனர். உரிய பரிகாரம் செய்ய தாக்கத்தின் உக்கிரம் குறைந்து தாங்கிக் கொள்ள சூழ்நிலை உண்டாவதை அறியலாம். தொழில்களிலும், பணியாற்றும் இடத்திலும், கல்வி பயிற்சியிலும் மாற்றம் ஏற்படும்.
நவக்கிரகங்களுக்கு உரிய தலங்கள் பல இருந்தாலும் பிரசித்தி பெற்றவையாக திருநள்ளாறு இவைகளில் அநேக கோவில்கள் கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். அவைகளை வரிசைப்படுத்தி உள்ளோம்.

1. ஆலங்குடி குரு – (வியாழன்)
2. திங்கர்                  – சந்திரன்
3. திருநாகேஸ்வரம் – ராகு
4. சூரியனார் கோவில் – சூரியன்
5. கஞ்சனூர் – சுக்கிரன்
6. வைத்தீஸ்வரன் கோவில்- செவ்வாய்
7. திருவெண்காடு – புதன்
8. கீழ்பெரும்பள்ளம் – கேது
9. திருநள்ளாறு – சனி

இப்பொது அருள்மிகு தர்ப்பனேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு, சனீஸ்வரரை பற்றி தெரிந்து கொள்வோமா?

இது சிவ தலமாக இருந்தாலும், சனி பகவானே மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த தலம் வந்து வழிபட்டவர்களில் திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் உள்ளனர். இந்த தலத்தில் இருக்கும் விநாயகபெருமான் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் விளங்குகிறார். இந்த கோவில் சுமார் 1900 வருடம் பழமை வாய்ந்தது.

சூரியனுடைய மனைவியின் பெயர் உஷா. அவர் சூரியனின் வெப்பம் தாளாது, அவளது நிழலில் ஒரு பெண்ணை உருவாக்கி அதற்கு சாயா தேவி என்ற பெயருடன் இருந்துவந்தார். இது அறியாமல் அவருடன் சூரியன் உறவாடி பிறந்தவர்தான் சனிபகவான். குழந்தை பிறந்த பின்பு இதை அறிந்த சூரியன் இருவரையும் வெறுத்தார். சனி பகவான் இதன் பின்பு காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு, கிரகங்களின் வழி வந்தால், நவகிரகத்திற்கு சென்று அடைந்தார்.

hqdefault (1)

திருநள்ளாற்று தர்ப்பனேஸ்வரர், அன்னை பிராணேஸ்வரியும், இங்கு அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். திருமாலுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இந்த தலத்து தர்ப்பனேஸ்வரரையும் அன்னையும் வழிபட மன்மதனை குழந்தையாகப் பெற்றார்.

திருநள்ளாறு செல்பவர்கள் கோவிலுக்குள் நுழையும் பொழுது, வாசல் படியை தொட்டு வணங்கிச்செல்கின்றனர். இந்த இடத்தில் சனீஸ்வரன் தங்கி இருப்பதாக ஐதீகம்.

நளன் தனது இன்னல்கள் தீர தர்ப்பனேஸ்வரரை தஞ்சம் அடைய இக்கோவிலில் நுழைந்த சமயம், அவரைத் தொடர்ந்து வந்த சனி பகவான், சிவபெருமான் தன் மீது கோபம் கொள்வாரோ என்று பயந்து, வாசல் படியிலேயே இருந்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால், சிவபெருமான், சனி பகவானின் பாரபட்சம் இல்லாத சேவையைப்பாராட்டி, அவருக்கு ஈஸ்வர பட்டம் தந்து தன் கோவிலின், நுழைவாயிலேயே இடம் கொடுத்து தங்க வைத்தார்.

இந்த தலத்து வரலாற்றை அறிந்தால், புராண காலத்திலேயே காதலுக்கு கொடுக்கப்பட்ட மாரியாதை தெரிகிறது. நிடத நாட்டு மன்னன் நளன். சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் புரிந்து கொண்டனர். ஆனால் தேவர்கள் தமயந்தியை மணம் புரிய விரும்பினர். ஆகவே இந்த திருமணத்திற்கு பிறகு, நளன் மீது பொறாமையும் கோபமும், கொண்டு சனிபகவானை இதற்கு உதவி புரிய வேண்டினர்.

ஆனால் சனி பகவான், இவர்களது தூய்மையான அன்பை அறிந்து, நளனின் உண்மையான அன்பை அவர்களுக்கு உணர்த்த 71/2 ஆண்டுகளாக பல தொல்லைகள் கொடுத்தும், மனம் தளராத உறுதியுடன் தர்ப்பனேஸ்வரரை வந்து அடைந்து சாப விமோசனம் பெற்றார். இதை தேவர்கள் அறிந்து கொள்ளவே கலங்காத உள்ளம் கொண்ட நளனின் பொறுமையையும் தூய காதலையும் வெளிப்படுத்தச் செய்தார்.

9676539773_8f76c87e33
சனீஸ்வரரை வணங்கி வழிபட, சில முறைகளை பின்பற்றி வருகின்றனர். அதுவே பரிகாரம் தேடுவதில் நல்ல பலன் கிட்டும் என்கின்றனர்.
அதிகாலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நள விநாயகர் மற்றும் பைரவரை வழிபட்டு பின்னர் கோவிலில் உள்ள கங்காதீர்த்துக்குளத்தை வணங்க வேண்டும். அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும். சனீஸ்வரரின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும்.

முதல் பிரகாரத்தில் நள சரித்திரத்தை பார்த்து வணங்கவும், காளத்தி நாதரை வணங்க வேண்டும். அடுத்து கருவறையில் உள்ள மூலவர் அருள்மிகு தர்பனேஸ்வரரை தரிசிக்க வேண்டும். அதன்பின்னர் தியாகவிடங்கர் சன்னதிக்க சென்று பக்தி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் மரகதலிங்கதையும் அர்த்தநரரீஸ்வரரையும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், தரிசித்து வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.

அங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்து பின்பு, கட்டைக் கோபுரத்துள் அருள்பாலிக்கம், அன்னை பிராணேஸ்வரியை வணங்கி அதன் பின்னர் தான் சனீஸ்வரரிடம் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரர் சன்னதிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறை அல்ல என்றும், சனிதோஷ நிவர்த்தி கிட்டாது என்றும் கூறுகின்றனர்.
இங்கு நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தக்குளங்கள் இருக்கின்றன. சனித்தொல்லை தீர, நள தீர்த்ததிலும், முந்திய சாபங்களுக்கு விமோசம் பெற பிரம்ம தீர்த்ததிலும், கல்வி மேன்மை பெற, சரஸ்வதி தீர்த்தத்திலும், நீராடி ஈசனை வழிபட பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடும்திறமை பெறுவாராம். இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், மகாசிவராத்திரி, மார்கழி திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, சனிப்பெயர்ச்சி ஆகியவை ஆகும்.
சனிப்பெயர்ச்சியின் போது தங்க வாகனத்தில், தங்க கவசம் அணிந்து சனீஸ்வரர் வருவது மிகவும் ரம்மியமான காட்சி ஆகும். சனிபகவானைக்கண்டாலே பின் வாங்கும் நிலைமையில், இங்கு அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும், தமிழ்நாட்டு மக்களுக்கு இணையாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் இங்கு பலர் வருகை தருகின்றனர்.images (1) (1)

சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் என்றும் அதற்கு அடுத்து சனிகிரகம் என்றும், வான் மண்டல அறிவியல் தகவல் வெளிப்படுத்துகிறது. சனீஸ்வாருக்கு பிடித்த தானியம் எள், ராசி மகரம், கும்பம், நிறம் கருப்பு, மலர் கருங்குவளை, திசை மேற்கு ஆகும்.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக தர்ப்பையில் இருந்து வெளி வந்தவராக உள்ளார். இப்பொழுதும் லிங்கத்தின் மீது தர்ப்பை முளைத்த தழும்பைக் காணலாம். இங்கு நந்தியும் பலி பீடமும், சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று விலகி இருப்பதை இந்த தலத்தில் மட்டுமே காணமுடிகிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றதலம் இது.
நடை திறப்பு.. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.

அமைவிடம்: அருள்மிகு. தர்ப்பனேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி மாநிலம்

தொடர்புக்கு:  04368- 236530, 236504, 9442236504.

செய்தி: ப.பரசுராமன்
படங்கள் : ப.வசந்த்

The post “உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


தினசரி ராசிபலன்கள் இன்று 18.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 18.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 18.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்

$
0
0

ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்

 இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, ” தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது ” என்ற அரிய வரத்தினை பெற்றான்.  

 தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.  

 எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி “எங்கெ உன் நாராயணன்” எனக் கேட்க, பிரகலாதணோ ” என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் ” என்று கூறினான்.  

 கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.  

 அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி.அவரின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.  

 இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.  

 இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.  

 இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.  

 காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.  

 லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.  

 “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.  

 இதில் திருபுவனம் கோவிலில் சரபேஸ்வரருக்குத் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலிலும் தனிச் சன்னதி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட சரபேஸ்வரர் ஸ்லோகம்

ஹராய பீமாய ஹரிப்ரியாய

பவாய சாந்தாய பராத்பராய

ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

ஸ்ரீ சரபாஷ்டகம்

– இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.

007733sarabeswarar

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 19.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 19.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 19.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 20.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 20.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 20.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நவகிரக தோஷங்களை நீக்கும் நவகிரக கணபதி

$
0
0

நவகிரக தோஷங்களை நீக்கும்

நவகிரக கணபதி

 விநாயகரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில்  குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன் என எல்லா கிரகங்களும் பிள்ளையாரிடம் இருக்கின்றன. தும்பிக்கையில் ஸ்வர்ண கலசம் ஏந்தி பக்தர்களின் நவகிரக தோஷங்களை நீக்குகிறார் விநாயகர். முறம் போன்ற காதுகளை அசைத்து பக்தர்களின் துன்பங்களை விரட்டுகிறார் என்கிறது ‘கணேச புராணத்தின் வக்ர  துண்ட கணபதி துதி.

 கணபதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரருள் பெற்று நலமடையலாம் என்பது பொதுவானது. என்றாலும் அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் நலம் பல பெறலாம்.

ஞாயிறு – சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம

திங்கள் – சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம

செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம

புதன் – புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம

வியாழன் – குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம

வெள்ளி – சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம

சனி – சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம

ராகு – ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம

கேது – கேதுஸ்வரூப ஞான கணபதயே நம

 

எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்

 

“நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ

ஸ்வரூபகம் கணபதயே நம.”

 திருஞானசம்பந்தர் “சிவனிருக்க என்னை நாள் என் செய்யும் கோள் என் செய்யும்” என்று “கோளறு பதிகம்” பாடினார். அருணாகிரியார் முருகனையே வணங்கி, “நாள் என் செயும் எனை நாடிவந்த கோள் என் செயும்” என்று கந்தரலங்காரத்தில் கூறினார்.

 கணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்றெண்ணி, அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் விலகுவது நிச்சயம். காரிய வெற்றியும் கைமேல் கிட்டும்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

 

The post நவகிரக தோஷங்களை நீக்கும் நவகிரக கணபதி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 21.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 21.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 21.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

WEEKLY NUMEROLOGY RASI PALANGAL FEB 20 TO 26

$
0
0

NUMBERS FOR THE WEEK 08 Feb 20 – Feb 26, 2018

ONE: you will feel deeper sense of being accepted in family and among your loved ones. Be at ease and learn to have fun and be playful.you will radiate with confidence in your job or project.
TWO: you will flow with best creativity and excitement. Do be watchful on what you speak. Focus on cultivating a habit for health, family time. You can afford to take a break and participate in get together or social gathering.
THREE: your cheerfulness, energetic and bubbling energy will find the much needed award or reward or recognition. Do enjoy the good time or lucky times. You will learn more on how to handle the people’s expectation on you. Be smart and compassionate as well.
FOUR: Be ready for action packed week.you will get insight on some important aspects of your life. Learn to let go unwanted emotional worries or animosity, which has been bogging you. You will gain more by giving more.

FIVE: Be clear on your needs, expectations and desires. Remember, you carry the special energy to manifest anything on which you set your heart and mind. Find time to spend with friends and loved ones. It will recharge and stimulate your creativity and as well as confidence.

SIX : whatgoes around comes back around manifold. Be ready for surprising ( on good side). Your charming, noble , diplomatic nature will win you more deals and as well as friends. Flow freely and happily.
 SEVEN:  Romance and love is in the air.feel free to share your feelings.it’s time to plan your work, hobbies, family time.

EIGHT: Be at ease and use your patience, observance attitude to win over a deal or friendship or relationship.more you are calmer, better you will be able to find solutions almost for anything and everything. Your listening and willing to learn attitude is going to be the strong foundation for your grandeour achievements that are waiting around the corner.

NINE : Remember you live your life by choice and chances. Trust your instinct while taking major decisions connected with investments or buying land or house. Keep your sense of humor.do plan your life for fitness, hobbies and family as well.

There is a saying, Know Thy to Know Others – which means , knowing the qualities possessed by you will be the gate for you to know the world and others.

The post WEEKLY NUMEROLOGY RASI PALANGAL FEB 20 TO 26 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


தினசரி ராசிபலன்கள் இன்று 22.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 22.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

 

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 22.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 23.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 23.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 23.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அஷ்ட பைரவர்களின் ஆயுதமும் வாகனமும்

$
0
0
அசிதாங்க பைரவர்:
 முக்கண், தலைமாலை, கதை, கபாலம், பாநபாத்திரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம், திகம்பரத் தோற்றம், வெண்மையான நிறத்தில், ப்ரஹ்மாணி சக்தியுடன் அன்ன வாகனத்தில் வீற்றிருப்பார்.
ருரு பைரவர்:
 முக்கண், டங்கம், க்ருஷ்ணாமிருகம் (மான்) பாநபாத்திரம், கத்தி, மகேஸ்வரி சக்தியுடன் ரிஷப வாகனத்தில் வீற்றிருப்பார்.

சண்ட பைரவர்:
 முக்கண், சாந்த முகம், வில், அம்பு, கத்தி, பாநபாத்திரம், வெண்ணிறம் கொண்டவர். கௌமாரி சக்தியுடன் மயில் வாகனத்தில் வீற்றிருப்பார்.
குரோத பைரவர்:
 முக்கண், கதை, சங்கம், பாநபாத்திரம், சாந்தமுகம், குமாரர், திகம்பரத்தோற்றம், நீல நிறத்துடன் இலக்குமி சக்தியுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார்.
உன்மத்த பைரவர்:
 முக்கண், குமாரர், திகம்பரத்தோற்றம், கட்கம் (கத்தி), கபாலம், உலக்கை, கேடயம், வராகி சக்தியுடன் அஸ்வ (குதிரை) வாகனத்தில் வீற்றிருப்பார்.

 கபால பைரவர்:
 பாசக்கயிறு, வஜ்ரம், கத்தி, பாநபாத்திரம், இந்திராணி சக்தியுடன் யானை (கஜம்) வாகனத்தில் வீற்றிருப்பார்.
பீஷண பைரவர்:
 கத்தி, சூலம், கபாலம், உலக்கை, சாமுண்டி சக்தியுடன் சிவந்த நிறத்தோடு கூடியவராக பிரேத வாகனத்தில் வீற்றிருப்பார்.
சம்ஹார பைரவர்: 
 1௦ கைகள், முக்கண், சர்ப்பப்பூணூல், கோரைப்பற்கள், குமாரர், திகம்பரத் தோற்றம் , சண்டிகா சக்தியுடன், சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பார். இவரது கைகளில் சூலம், டமருகம், சங்கம், பாநபாத்திரம், கதை, சக்கரம், கத்தி, கட்வாங்கம், பாசம், அங்குசம் காணப்படும். தேகத்தில் தலை மாலைகளை அணிந்து காணப்படுவார். (சில விக்ரஹத்தில் நாய் வாகனத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது).
Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post அஷ்ட பைரவர்களின் ஆயுதமும் வாகனமும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 24.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 24.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்:  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கன்னி:  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு:  பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

கும்பம்:  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 24.02.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ராகு-கேது பரிகார ஸ்தலங்கள்

$
0
0

 ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம்.

* சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.

* காரைக்குடியில் செஞ்சை பகுதியில் நடராஜ் தியேட்டர் கீழ்புறம் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.

* பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம்.

* திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம்.

* சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம்.

* செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும். இங்கு வழிப்படலாம்.

* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.

* ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோவில் (வழி) தண்ணீர்பந்தல் பாளையம் போஸ்ட், தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில் ராகு- கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும்.

* மன்னார்குடி அருகில் பாமினியில் உள்ள சிவாலயம் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம் உள்ளது.

* திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி- விசுவாமித்திரர் தவம் இருந்த பூமி தில்லைக்காளியும் உண்டு.

* நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் (ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம்)

* மயிலாடுதுறை – பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

* கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும் பணம் கட்டினால் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள்.

* கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார ஸ்தலம், பிரார்த்தனை ஸ்தலம்.

* ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி- அதற்காக பயப்படத் தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு- கேதுப் பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.

* சோளிங்கரிலிருந்து 12 கி.மீ.ë தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.

*கொடு முடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவர்.

* காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.

* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

* கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

* சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

* நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

* சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு- கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

* திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் ராகு-கேது சிக்கல் விலகி சுபீட்சம் காண்பீர்கள்.

* திருவாலங்காடு சென்று முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர ராகு, கேது தோஷம் நீங்கி வளம் பெருகும்.

* மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மாங்குடிக்கு அருகில் திருச்சிறுபுலியூர் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கிருபாசமுத்திர பெருமாளையும், ஸ்ரீதயாநாயகி தாயரையும் வணங்கினால் வழக்கில் வெற்றி, பூர்வீக சொத்து பிரச்சினை தீருதல், செல்வம் சேருதல் ஆகியன கிட்டும்.

* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாக நாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்.

* திருவாரூர்- கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள தலம் மணக்கால். இங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கி ஸ்ரீஆதிசேஷன் விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம். ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கினால் அரசு தொடர்பான வேலைகள் வெற்றி அடையும், நல்ல வேலை கிடைக்கும்.

* நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள் யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள்பெற்ற திருத்தலமே நாகூர். இங்கு கோவில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிகேஷன் சிவபெருமானை பூஜை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி பெரிய பதவிகள் கிடைக்கும்.

* தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது.

இத்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி பத்ரம் (இலை) ஆகியவை சார்த்தி, ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம் யாவும் விலகும்.

* குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது. இத்தோசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.

* ராகு, கேது தோஷ முள்ளவர்கள் ரமேசுவரம் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் அமைந்திருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுகிறது.

* மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள இலுப்பட்டு தலம் நாக வழிபாட்டில் சிறப்பு வாய்ந்தது. நளமகராஜன் விஷக்கடியில் நிறமாறியிருந்தான். அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கே தான் அடைந்தான் என்று அத்தல வரலாறு பேசும். சிவபெருமானே தமது கண்டத்தில் விஷமருந்திய இறையைக் காட்டி அருளியபதியும் அதுவே தான்.

* கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாரம்பரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்களை எவ்வளவு விவரித்தாலும் தகும்.

* ஐந்தலை நாகம் குடைப்பிடிக்க விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களுள் நாகப்பட்டினமும், தஞ்சை பாபநாசமும் சிறப்புக்குரிய தலங்களாகும்.

* திருபுவனம் திருக்கோவிலில் எல்லா காலமும் சரபமூர்த்தி வழிபாடு அருள் நலம் பொலிய நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் சரப மூர்த்தியை வழிபாடு செய்வதன் வாயிலாக ராகு-கேதுக்களைப் பிரீதி செய்வதுடன் நடுக்கம் தீர்த்த பெருமான், அறம் வளர்த்த நாயகி, சரபர் இவர்களது அருளுக்கும் பாத்திரர் ஆகலாம்.

* தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கிய பெருமை குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில் தான் எனப்படுகிறது. இங்கே நாள் தோறும் ராகு கால பூஜை நடைபெற்று வருவது சிறப்பு.

* காமதேனுவின் கால் பதிந்த தலம் தான் மாடம்பாக்கம். இங்கு தேனுபுரீசுவரர் கோவிலுக்குள் சென்றதும் முன் மண்டபமும் மண்டபத்துக்கு இடப்புறம் காணப்பெறும் தூண் ஒன்றில் சரப மூர்த்தியின் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. ஆர்த்தெழுந்த சரபத்தைக் கண்டு நரசிம்மன் அஞ்சி ஓடியிருப்பார்.

சரபப் பறவையும் விடாமல் நரசிம்மத்தை தாவி பிடித்திருக்கும். அவ்விதம் தாவும் தகைமையைத்தான் சிற்பி கற்தூணில் இங்கு நிலை பெறச் செய்திருக்கிறார். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் மக்கள் பெருமளவில் வந்து இந்த சரப மூர்த்தியை வழிபட்டு செல்கிறார்கள்.

மேலும், நவகிரஹா ப்ரீத்தி அல்லது எந்த ஒரு பரிகாரம் செய்யும் முன் அது சம்பந்தப் பட்டவர்களிடம் ஆலோசனைப் பெற்று செய்வது உச்சிதம்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post ராகு-கேது பரிகார ஸ்தலங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>