கர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விளக்க வேண்டுமா?
விதியை வெல்லும் சூட்சமம்
மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான்.
அவை
1)சஞ்சித கர்மம்
2)பிராப்த கர்மம்
3)ஆகாமிய கர்மம்
சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும்.
பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாகா நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்,
ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.
இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும்.
பிரம்மா-
எல்லா படைப்பு இயக்கங்களையும் செய்பவர். அவரின் படைப்புக்கு தேவையான ஞானத்தினை தருகிற சரஸ்வதி அவரின் மனைவி.
விஷ்ணு –
காக்கும் கடவுள், எல்லா உயிர்களையும் இரட்சித்து காப்பவர். இவர் உலகினை காக்க செல்வம் வேண்டுமல்லவா? அதை அவருக்கு நல்க செல்வத்திற்கு அதிபதியான மஹா லக்ஷ்மி அவரின் மனைவி.
சிவம் –
அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை, கர்மவினைகளை, தீமைகளை அளித்து நன்மை தருபவர். இவருக்கு தீமைகளை அழிக்கின்ற சக்தியினை தருவதற்கு சக்தி தேவியே இவருக்கு துணைவியாக.
மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் என்பவைபஞ்ச பூதங்களாகும். சிவனே பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக பஞ்சபூத தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார்.
அவையாவன
காஞ்சிபுரம் – நிலம் – ஏகம்பநாதர்
திருவனைகாவல் – நீர் – ஜலகண்டீஸ்வரர்
திருவண்ணாமலை – நெருப்பு – அண்ணாமலைநாதர்
காளஹஸ்தி – வாயு – காளத்திநாதர்
சிதம்பரம் – ஆகாயம் – நடராஜர்
அகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களால் ( ஐந்து புலன்களால் – மெய், வாய், கண், காது, மூக்கு) ஆகியவற்றின் மூலியமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது பாவங்கள் – கர்மவினைகள் உண்டாகிறது.
பஞ்ச பூதங்களால் – பஞ்ச இந்திரியங்களால் தோன்றிய பாவத்தை – பஞ்ச லிங்கங்கள் அல்லவா தீர்க்க முடியும். இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன
யாதனம் – கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
சிரவணம் – இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
கீர்த்தனம் – இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
பூஜார்தனம் – அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல்,
நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.
ஸ்துதி – இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.
இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.
The post கர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விலக வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.