சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்வது எப்படி
சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும்.
ஏழரைச்சனி:
ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.
ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.
சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.
கந்த சஷ்டி கவச பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை.
விரயச்சனி:
கோசார ரீதியில் சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.
இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம். இது மிகமிக எளிமையானது ஆகும். விரயச்சனி காலத்தில் இதுபோல செய்யலாம்.
ஜென்மச்சனி:
கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசி இல்லத்துக்கே வந்து நிற்கும் காலம் `ஜென்மச்சனி’ இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.
இந்த காலத்தில் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு.
பெயர் – சனி பகவான், சனீஸ்வரன், முடவன், மந்தன்
தந்தை – சூரிய பகவான்
தாயார் – உஷா, சாயாதேவி
மனைவிகள் – நீலாதேவி,
சேஸ்டா தேவி புத்திரர் – குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் – புதன், சுக்கிரன்
சின்னம் – தராசு
மொழி – அந்நிய பாஷை
ஆசனம் – வில்வ வடிவம்
பாலினம் – அலி
சாஸ்திர பெயர் – மேற்கோள்
கோத்திரம் – காசியபர்
வடிவம் – குள்ளம்
நாடி – வாத நாடி
உடல்உறுப்பு – நரம்பு (தொடை)
உணவு – எள்ளு சாதம்
உடமை – ஆயுளுக்கு முழுப் பொறுப்பு
ரத்தினம் – கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை – ஆகாயம்
குணம் – குரூரர்
நன்மை அடையும் இடம் – 3, 6, 11 தசை
வருடம் – 19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை – 3, 7, 10
ராசி சஞ்சாரம் – 2 வருடம்
பிணி – வாதம், நரம்பு நோய்
பகைவர்கள் – செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை – சனிக்கிழமை
பூஜிக்கும் தேவதை – துர்க்கா, சாஸ்த்தா
பெற்ற பட்டம் – ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள்- 1.திருநள்ளாறு, 2.குச்சனூர், 3.திருக்கொள்ளிக்காடு
திசை – மேற்கு
அதிதேவதை – எமன்
தேவதை – பிரஜாபதி
தலம் – திருநள்ளாறு
இனம் – சூத்திரர்
நிறம் – கருமை
வாகனம் – காகம்
தானியம் – எள்
மலர் – கருங்குவளை மற்றும் வன்னி
ஆடை – கருப்பு நிற ஆடை
ரத்தினம் – நீலமணி
சுவை – கசப்பு
சமித்து – வன்னி
உலோகம் – இரும்பு
பயன் – நோய்,
வறுமை, சிரமங்கள், நீங்குதல்
தீபம் – எள்ளு தீபம் ஆட்சி
வீடு – மகரம், கும்பம்
உச்ச வீடு – துலாம்
நீச்ச வீடு – மேஷம்
நட்பு வீடு – ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
சம வீடு – விருச்சிகம்
பகை வீடுகள் – கடகம், சிம்மம்
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்வது எப்படி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.