Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு செல்லும் வழி

$
0
0

நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக…

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்

 சென்னையில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களின் இருப்பிடமும் செல்லும் வழியும் வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்க  பதிவு செய்யப்படுகிறது.

 1 ஆகாயம்  சிதம்பரேசுவரர்:

 சென்னையில் அமைந்திருக்கும் ஆகாய ஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும். இதன் மூலவர்திருமூலநாதசுவாமி ஆவார். மிகவும் பழுதடைந்த கோவில். தினமும் காலை 6 மணிமுதல் 11.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும். 1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு8.30க்கு நடைபெற்றுவருகிறது.

NO:112,அவதான பாப்பையா தெரு,

சூளை ,

 சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில்

சென்னை-112

7C, 7B, 7D, 164, 59, 159 என்ற எண்ணுடைய பேருந்தில்பயணித்து புவனேஸ்வரி திரையரங்கம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

2 மண்  ஏகாம்பரேஸ்வரர்:

 சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில்வன்னிமரத்தடியிலும், அரசமரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே! மண் ராசிகளான ரிஷபம்,கன்னி,மகர ராசிகள் மற்றும் ரிஷப லக்னம்,கன்னி லக்னம், மகரலக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட,அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும்.

NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற  முகவரியில் அமைந்திருக்கிறது  1, 21, 51, 57, 18A என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து  கந்தசாமி கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ராசப்பதெரு வழியே தங்கச்சாலை தெரு திரும்பி சிறிதுதொலைவில் அமைந்திருக்கிறது.

3 நீர்  கங்காதரேசுவரர்:

 சென்னையின் நீர் ஸ்தலமான கங்காதரேசுவரர்,தாமரைத்தாய்  மற்றும்  பங்கஜாம்பாளுடன்  அருள்புரிந்து கொண்டிருக்கிறார். கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,மீன லக்னம்அல்லது மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில்,இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.

7A, 7F, 7H, 34, 16A, 22, 29D, 23C, 27K என்ற எண்ணுள்ள பேருந்துகளில்  ஏதாவது ஒன்றில் பயணித்து கங்காதரேசுவரர் சிவன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.இந்த  ஆலயம் புரசைவாக்கத்தில் அமைந்திருக்கிறது.

4 நெருப்பு  அருணாச்சலேசுவரர்,அபிதகுலசாம்பாள்:

சென்னையின் நெருப்பு ஸ்தலமாக அருணாச்சலேசுவரர்+அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.நெருப்பு ஸ்தலமான அண்ணாமலைச் சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது. இங்கேபெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார். மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி,சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி,தனுசு லக்னம்  மற்றும்தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின்  நியாயமானநோக்கங்கள் நிறைவேறும்;தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்;மற்ற  ராசிக்காரர்களும்இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக  வளர்ச்சியைப் பெறுவார்கள்.

இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. NO:24,பள்ளியப்பன்தெரு,சவுக்கார்பேட்டை, சென்னை-79.

28, 34, 37, 159 இந்த எண்ணுள்ள பேருந்துகளில்  பயணித்து யானைக்கவுனி காவல்  நிலையம்நிறுத்தத்தில் இறங்கி,வால்டாக்ஸ் ரோட்டில் அண்ணாப்பிள்ளை தெரு  வழியாக சிறிதுதொலைவில் பயணித்தால் இந்த திருக்கோவிலை அடையலாம்.

5 வாயு  காளத்தீசுவரர்,ஞானபிரசன்னாம்பிகை:

சென்னையின் வாயு ஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர்+ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில், மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி,துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி,கும்ப லக்னம்அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டேஇருக்கும்;யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும்,பைரவ கடாட்சமும் எளிதில்  கிட்டும்.

NO:155, பவளக்காரத்தெரு,பாரிமுனை,சென்னையில் அமைந்திருக்கிறது. காலை 7 மணிமுதல் 11 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இத்திருக்கோவில்திறந்திருக்கும்.

38H, 44, 44C, 56C, 116 என்ற எண்ணுள்ள பேருந்தில் ஒன்றில்  பயணித்து மாணவர் மன்றம் அல்லது தம்புச்செட்டித்தெரு அல்லது பவளக்காரத் தெரு நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் கடைசியில் இந்த திருக்கோவில்அமைந்திருக்கிறது.அல்லது ராயபுரம் மேம்பாலம் எதிரில் பவளக்காரத்தெரு நுழைந்தவுடன் இந்த  திருக்கோவிலை அடையலாம்.

 

The post சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு செல்லும் வழி appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>