இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.
இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 34 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள் (thanjai periya kovil): தமிழகத்தில் இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.
1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்த கோவில் ராஜராஜசோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோவில் என்பதால். இத்தலத்தில் என்ன பிராத்தனை செய்தலும் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.
இத்தலத்தில் உள்ள வராகி அம்மன் சன்னதியில் பக்தர்கள் பிராத்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.
திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் உடனே திருமணம் நடக்குமாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிராத்தனை செய்தால், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.
மூலவரான பெருவுடையாரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும், மன அமைதி கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு,ஆகியவற்றிற்காகவும் பிராத்தனை செய்தால், சுவாமி பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்.