உலகில் அத்தனை சக்தியையும் மொத்தமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருக்கு எத்தனை சக்தி இருக்கிறதோ அத்தனையும் கொண்டது நந்தி என்கிறார்கள். சிவனைக் காண்பதற்கு முன் நந்தியை நாம் கண்டே ஆகவேண்டும். எல்லா சிவன்கோவிலிலும் இதுதான் நியதி. இந்த முறையை முதன்முதலாகக் கொண்டு வந்தது இந்த இடம்தான் என்கிறார்கள் பெரியவர்கள். அது கோயம்புத்தூர் அருகிலுள்ள இந்த சிவன்கோவில் தான்.. வாங்க. இந்த கோவிலுக்கு செல்வது எப்படி, சென்றால் என்ன கிடைக்கும். அதிகார நந்தி என்றால் என்ன என்பது குறித்து இங்கே காண்போம். மகிழ்ச்சியை வாரி வழங்கும் நந்தி நந்தி என்றால் ஆனந்தம்.மகிழ்ச்சி என்று பொருள். இவரை வணங்கியபின்னர்தான் சிவனையே நாம் காணமுடியும். அப்படிபட்ட நந்தியின் அனுமதி கிடைத்தால் நாம் சிவனை அடைந்து வேண்டுதலை முன் வைக்கலாம். அது உலக வழக்கம். ஆனால், கோயம்புத்தூர் அருகிலுள்ள இந்த இடத்தில் இருக்கும் கோவிலின் நந்தியிடம் நீங்கள் நேரடியாகவே கோரிக்கைகளை வைக்கலாம். அவரே அருள் தருகிறார். ஆம்… இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்தாலே நீங்கள் மனதில் நினைத்தது கூடிய விரைவில் நடக்குமாம். இதை பக்தர்களே சொல்கின்றனர். அந்த கோவில் எங்க இருக்கு தெரியுமா? wikimedia.org எங்கே இருக்கு அந்த கோவில் விருந்தீஸ்வரர் கோவில். அதிகார நந்தியை முன்னிறுத்தி சிவபெருமான் வீற்றிருக்கும் தளம் இதுவாகும். இது கோயம்புத்தூர் அருகே வடமதுரையில் அமைந்துள்ளது. இதன் தல விருட்ச மரமாக முருங்கை மரம் அமைந்துள்ளது. இந்த மரத்தின் பலன்களைப் போல இந்த கோவிலும் நிறைய பலன்களை பக்தர்களுக்கு வழங்குவதாக நம்பப்படுகிறது.
↧
அதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அற்புதங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
↧