நரகங்களும் சொர்க்கங்களும் நிரந்தரமானவை அல்ல. ஓர் உயிர் அதன் நல்வினை மற்றும் தீவினை ஆகிய இரண்டு கர்மவினைக்கு ஏற்ப நரகங்கள் அல்லது சொர்க்கங்களுக்குச் செல்கின்றன. செயல்களுக்கான பலன்களை அல்லது தண்டனைகளை அனுபவித்து விட்டப் பின்னர் அவை மீண்டும் மண்ணில் பிறக்கின்றன. தண்டனைகள் என்பது செய்த தவற்றை உணர்ந்து, திருத்திக் கொள்வதற்காக தான். யமதர்மன் யாரையும் வெறுத்து அவர்களைப் பழிவாங்குவதற்காக தண்டனை கொடுப்பதில்லை. எனவே சொர்க்கமோ நரகமோ முடிவு அல்ல. மோட்சம் என்று சொல்லப்படும் பிறவாமை தான் முடிவு.
விஷ்ணு புராணம், தேவி புராணம், பாகவத புராணம் போன்றவை 28 நரகங்களை விளக்குகின்றன. எனினும் உண்மையில் ஆயிரத்துக்கும் அதிகமான நரகங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன. அவற்றுள் 28 நரகங்கள் முக்கியமானவையாக உள்ளன. வாழ்நாள் முழுவதும், கொஞ்சம் கூட திருந்தாமல் கீழ்க்காணும் தவறுகளை செய்பவனுக்கு அந்தந்த நரகங்களில் குறிப்பிட்ட தண்டனைகள் தரப்படுகின்றன.
பாகவத புராணம் (5:26) குறிப்பிடும் 28 நரகங்கள்:
1) தாமிஸ்ரம் – பிறர் பொருளை அபகரிப்பவருக்கு
2) அந்த-தாமிஸ்ரம் – பிறர் மனைவியை/கணவனை அபகரிப்பவருக்கு
3) ரௌரவம் – சுயநலம் கொண்டு மற்ற உயிரைத் துன்புறுத்துவருக்கு
4) மஹாரௌரவம் – பணத்துக்காக மற்ற உயிரைக் கொல்பவனுக்கு
5) கும்பீபாகம் –
வேடிக்கைக்காக
உயிர்களைக் கொன்று தின்பவனுக்கு
6) காலசூத்ரம் – பெற்றோர், பெரியவர், முன்னோர்களை மதியாதவருக்கு
7) அசிபத்ரவனம் –
தர்மநியதிக்கு
எதிராக செயல்படுபவனுக்கு
8) சூகரமுகம் – மக்களைத் துன்புறுத்தும் அரசியல்வாதிகளுக்கு
9) அந்தகூபம் – பகைமையால் மற்றவர்களை துன்புறுத்துபவனுக்கு
10) கிரிமிபோஜனம்
– தன் வாழ்நாளில் ஒருபோதும் உணவைப் பகிர்ந்து உண்ணாதவனுக்கு
11) சந்தம்ஸம் – மற்றவர்கள் பொருளைத் திருடுபவனுக்கு
12) தப்தசூருமி – கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்/பெண்ணுக்கு
13) வஜ்ரகந்தக-சால்மலி = மிருகங்களோடு உடலுறவு கொள்பவனுக்கு
14) வைதரனீ – தன் கடமையைச் செய்ய மறுத்தவனுக்கு
15) பூயொதம் – விபச்சாரம் செய்யும் பெண்/ஆணுக்கு
16) பிராணரோதம் – வேடிக்கைக்காக மிருகங்களைக் கொல்பவனுக்கு
17) விஷாசனம் – அப்பாவி உயிர்களைக் கொல்ல ஆயுதம் உருவாக்குபவனுக்கு
18) லாலாபக்ஷம் – மனைவியைத்/கணவனை துன்புறுத்துபவருக்கு
19) சாரமேயாதனம் –
பணத்துக்காக மக்களுக்கு ஆரோக்கியமற்ற (விஷ உணவுகளை) அளிப்பவனுக்கு
20) அவீசி – அப்பாவிகளை ஏமாற்றி தரமில்லாத பொருள்களை விற்பவனுக்கு
21) அயபானம் – போதை தரும் மது அருந்துபவனுக்கு
22) க்ஷாரகர்தமம் – அகங்காரத்தால் சான்றோர்களை மதிக்காதவனுக்கு
23) ரக்ஷோகன-போஜனம் – நரபலி மேற்கொண்டு, நரமாமிசம் உண்பவனுக்கு
24) சூலப்ரோதம் – வளர்ப்பு பிராணிகளை கொடுமை செய்பவனுக்கு
25) தண்டசூகம் – வாழ்நாள் முழுவதும் பொறாமை மற்றும் பகைமையில் வாழ்ந்தவருக்கு
26) அவதநிரோதனம் –
அப்பாவிகளை சிறையில் அடைத்தவனுக்கு
27) பர்யாவர்தனம்
– நாடி வந்தவர்களை இழிவுபடுத்தி துன்புறுத்துபவனுக்கு
28) சூசிமுகம் – செல்வத்தை வைத்து தப்பான செயல்களைச் செய்பவனுக்கு
The post உங்களுக்கு தெரியுமா? appeared first on SwasthikTv.