நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 2 ஆண்டுகள் பழமையான சயன நாராயண பெருமாள் கோவில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்து புத்த நீலண்டாவில் உள்ளது. ஐந்து மீட்டர் நீளமுள்ள பெரிய பாறையில் கம்பீரமான சிற்ப வேலை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தின் ஜலத்தில் விஷ்ணு சுருண்ட பாம்பில் படுத்த நிலையில் பெரிய கற்சிலையில் அருள்பாலிக்கிறார் இவரை வணங்கினால் தொழில் வளர்ச்சி பெரும், கடன் சுமை நீங்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை விஷ்ணுவின் சிலை கிடைக்காத அரிய வகையான ஒரே கருப்பு கற்களில் செதுக்கப்பட்டது. இந்த சிலை உயிரோட்டத்துடன் இருக்கிறது. விஷ்ணு 5 மீட்டர் 17 அடி உயரமாக 13 மீட்டர் 43 அடி நீள ஜலத்தில் சயன நிலையில் உள்ளார். இவரது கால்கள் நீந்துவதை போல் அமைந்துள்ளது.
இவருடைய நான்கு கைகளில் வைத்துள்ள சங்கு, சக்கரம், ஜபமாலை மற்றும் தாமரை ஆகியவை விஷ்ணுவின் நான்கு முத்திரைகளை குறிக்கிறது. இச்சிலை 8 ஆம் நூற்றாண்டில் ஆண்ட லிச்சாவி காலத்தில் செதுக்கப்பட்டது. புத்த நீலகண்டன் என்ற பெயர் புதுமையாக உள்ளது. தேவர்கள் பாற்கடலை கடையும் போது வந்த விஷத்தினை சிவன் உட்கொண்டதால் அவரது தொண்டை நீல நிறமாக மாறியது அதனை தணித்து கொள்ள அதனை அவர் கோசயின்குண்ட் என்ற ஏரியில் எறிந்துவிட்டார். அவை புத்த நீலகண்டனின் தொட்டியில் விழுந்தது. இது விஷ்ணுகுரியதாக அர்ப்பணிக்கப்பட்டது.
The post காத்மாண்டுவில் கடன் தீர்க்கும் சயன நாராயண பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.