சென்னை : நாம் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய காலசர்ப்ப தோஷம் போக்கும் துவித நாக பந்தத்தை பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் ஸ்வாமிகள் எழுதிய ரத பந்தத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
ரதம் என்றால் வாகனம், நாம் வாகனத்தில் செல்லும்பொழுது விபத்துக்கள் வராமல் , நம்மை அண்டவிடாமல் தடுக்கும் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ரதபந்தத்தை படித்தால் அணைத்து விதமான தடைகள் மற்றும் விபத்துகளிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்
இரதபந்தம்:
“இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ
டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் – பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா
வாசிறந்த மாவின் பருள்”
ஸ்வாமிகள் எழுதிய இப்பாடலைப் படிப்பதால் உண்டாகும் பயன் வருமாறு :
வாகன விபத்துகள், விபத்துகள் பற்றிய பயம் நீங்கும், தினமும் காலை நாம் வாகனத்தில் புறப்படும்பொழுது இந்த ஸ்லோகத்தை சொன்னால் நம்மக்கு எந்த விதமான விபத்துக்களும் நேராது என்பது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாக்கு. இந்த ஸ்லோகத்தை நாம் ஓட்டும் வாகனம்மற்றும்ன்றி நாம் எங்கும் பயணம் செய்யும் போதும் சொன்னால் விபத்துக்கள் வராமல் நம்மை காக்கும் , இந்த காப்பு நாம் ஒட்டி செல்லும் வாகனத்தை ஒரு பாந்தமாக காக்கும் மேலும் நாம் எதிர்கொள்ளும் வழி தடைகளை நீக்கும்.
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் கோவில் சென்னையில் உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ளது , பக்தர்கள் இங்கு சென்று ஸ்வாமிகளின் ஜீவ சமாதியை தரிசித்து பலன் பெறலாம்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #pambanswamigal
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post விபத்துகளை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் இரதபந்தம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.