Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

தீயபழக்கங்கள் உள்ளவர்கள் வணங்க வேண்டிய திருவாரூர் பாம்புரேஸ்வரர்

$
0
0

 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது, இங்கு அம்பாள் பிரமராம்பிகையுடன் பாம்புரேஸ்வரர் என்ற பெயரில் சிவனாக அருள்பாலிக்கிறார். இவரை சேஷத்தீர்த்தத்தில் நீராடி ஞாயிறு கிழமை 4.30-6 ராகுகாலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீயபழக்கவழக்கங்களிள் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை.

  பிராத்தனைகள் நிறைவேறியதும் சாமிக்கு புதுவஸ்திரம் சாற்றி தனது பிராத்தனைகளை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். இங்கு இறைவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122-வத தேவாரத்தலம் ஆகும்.

 திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்– கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது. மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு–கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

அஷ்ட நாகங்களும் வழிபட்ட:

 இத்தல இறைவன் பாம்புரேஸ்வரர் என்றும், பாம்புரநாதர் என்றும், சேஷபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். நாகராஜனான ஆதிசேஷன் மட்டுமல்லாது அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் எனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட சிறப்புக்குரிய தலம் இதுவாகும். ஏக சரீர ராகு–கேது சன்னிதி பாம்புரேசுவரர் வீற்றிருக்கும் விமானத்தின் அருகே, திருமலை ஈசுவரர் சன்னிதி படிக்கட்டு களுடன் இருப்பது சிறப்பு. சுவாமிக்கு இடதுபுறம் வண்டார்குழலி என்ற பெயரில் அம்பிகை நின்ற கோலத்தில் அருள்மழை பொழிகிறாள். அவளது சன்னிதிக்கு எதிரே தான் ஏக சரீர ராகு–கேது சன்னிதி அமைந்துள்ளது. காள சர்ப்ப தோஷம், ராகு– கேது சதுர்த்தி உள்ளவர்கள், இந்த தோஷங்களால் திருமணம் மற்றும் குழந்தை பேறு தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

ராகு– கேதுவுக்கு அர்ச்சனை:

 மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பரிகாரம் இந்த ஆலயத்தில் செய்யப்படுகிறது. மது பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தனை செய்து விட்டு, ராகு– கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பலர் மது மயக்கத்தில் இருந்து மாறுதல் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அமைவிடம்:

  திருவாரூரில் இருந்து திருப்பாம்புரத்திற்கு பஸ் வசதி உள்ளது.

 தொடர்புக்கு :    9443943665- 9443047302.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #amman

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post தீயபழக்கங்கள் உள்ளவர்கள் வணங்க வேண்டிய திருவாரூர் பாம்புரேஸ்வரர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>