Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பூலோக வைகுந்தம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்

$
0
0

 “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி’  என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும்.

 ஸ்ரீர‌ங்கநாத‌ர் கோயிலின் தெய்வம் ஸ்ரீரங்கநாதர் – ரங்கநாயகி ஆவர். கோ‌யி‌‌ல் க‌ர்ப‌கிரக‌த்‌தி‌ல் ப‌ள்‌ளி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ர‌ங்கநாத‌ர் சுய‌ம்புவாக தோ‌ன்‌றியதாக‌க் கூற‌ப்படு‌கிறது. விஷ்வக்சேனா, ராமர், கிருஷ்ணர், நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருடர், ஹனுமான், ஆண்டாள் ஆகியோருக்கென தனித்தனி சன்னிதானங்களும் இ‌க்கோ‌யி‌லி‌ல் உள்ளன. 156 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் 7 திருவீதிகளைக் கொண்டது. அதிலும் 7 திருவீதிகளும் ஒரே அமைப்பில் காட்சியளிக்கும். முதன் முறையாக செல்பவர்கள் அல்ல.. பல முறை சென்றவர்கள் கூட இந்த 7 திருவீதிகளில் குழம்பித்தான் போவார்கள். இக்கோயிலில் அமைந்திருக்கும் தூண்களையும், அதில் உள்ள சிற்பங்களையும் கண்டு ரசிக்கலா‌ம். கா‌வி‌ரி‌க்கு‌ம் கொ‌ள்‌ளிட‌‌த்‌தி‌ற்கு‌ம் நடுவே அமை‌ந்து‌ள்ள இ‌ந்த அழ‌கிய ஸ்ரீர‌ங்க‌‌த்‌தி‌ல் ப‌ள்‌ளி‌ கொ‌ண்டிரு‌க்கு‌ம் ர‌ங்கநாதரை‌க் காண க‌ண் கோடி வே‌ண்டு‌ம்.

ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம்.  வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது.ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்

புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!

பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்

யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”

என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.

ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்..

பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.

ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்

அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்

தோலாத தனிவீரன் தொழுத கோயில்

துணையான வீடணற்குத் துணையாங்கோயில்

சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்

செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்

தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில்

திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

 என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார். ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை. தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம்,  ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம்,  ராஜஸ்தானில் புஷ்கரம்,  நைமிசராண்யம், என்பவை தான் அவை. வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம். பகவான் காடு ரூபமாக உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில்.  ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.

 இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில்,  ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார்.  மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக்  கோலம், பொய்கை  ஆழ்வார் காஞ்சியிலும், பேயாழவார்  மயிலாபூரிலும்,   பூதத்தாழவார் திருக்கடல்மல்லை  என்று ஆழ்வார்கள்  எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும்  சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.

ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலே பிறந்தாலும்

“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ”

 என்று அரங்கனைத்தான் வாழ்த்தினார்கள். “இவ்வளவு நேரம் ஆகிவிட்டது , சயனம் கொள்ளுகிற  நேரத்திலே எங்க கிளம்பி விட்டீர்” என்று அடியவர் திருமாலிருஜ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார். இப்படி  எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம்.  நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில்,

 “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்

  வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்

  பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்டிட

  கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே”

  என்று எல்லா  திவ்விய தேசத்து எம்பெருமான்களும் பள்ளி  கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #murugan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post பூலோக வைகுந்தம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>