Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

புரட்டாசியில் நாராயணனை வணங்கினால் ஐப்பசியில் திருமணம்

$
0
0

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள ஆவணி நாராயணபுரம் என்னும் ஆவணியா புரத்தில் 1500 அடி உயரமுள்ள மலை மீது 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவரால் கட்டப்பட்ட பெருமாள் கோவில் உள்ளது, இங்கு பெருமாள் வெங்கடாஜலபதி (#venkatachalapathy) என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் இவரை புரட்டாசியில் வணங்கினால் ஐப்பசியில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. மேலும் குழந்தை பாக்கியம் கடன் தொல்லை நீங்கவும் விவசாயம் செழிக்கவும் பக்தர்களை தானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இத்தலம் தூலாபாரம் செலுத்தும் தலமாகவும் உள்ளது. இங்கு தேவர்கள் வெட்பாலை மரங்களாய் இருந்து குளிர்ச்சியை தருவது சிறப்பு வாய்ந்தது ஆகும். பிருகு முனிவர் ஏரண்ட முனிவர் ஆகியோர்கள் இங்கு வாந்து வழிப்பட்டுள்ளனர். சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி.10 நாள் நடைபெறும் பிரம்மோற்சவப் பெருவிழா தொடங்கியது.

avaniyapuram_1ஆவணியாபுரத்தில் எழுந்தருளிய சிம்மாசல பருவதம். கிழக்கு முகமாக பார்த்தபடி, வடக்கு தெற்காக படுத்திருக்கும் சிங்கத்தின் கம்பீரத் தோற்றத்துடன் காட்சி தருகிறது இந்த மலை. சிங்க முகத்துடன் நாராயணன்(#Narayanan) அருள்பாலிப்பதால் ஆவணிநாராயணபுரம் என்பதே இவ்வூரின் திருப்பெயர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மையமாக பாய்ந்தோடும் செய்யாற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது இந்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். திருப்பதியில் வெங்கடாஜலபதி, திருவரங்கத்தில் அரங்கநாதர்(#Ranganathar), காஞ்சிபுரத்தில் வரதராஜபெருமாள், சோளிங்கரில் யோக நரசிம்மர், ஆவணியாபுரத்தில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த நகரங்கள் பஞ்ச திருப்பதிகள் என பக்தர்களால் போற்றப்படுகிறது. பஞ்ச திருப்பதிக்கும் நேரில் சென்று சேவித்த பேரின்பத்தை, ஆன்ம நிறைவை, அகத்தின் மகிழ்வை ஓரிடத்தில் ஒருங்கே பெற முடியும்..

ஆவணியாபுரத்து மலை உச்சியில் ஸ்ரீரங்கநாதரும், ஸ்ரீவெங்கடாஜலபதியும், ஸ்ரீவரதராஜபெருமாளும், யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழ்மலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். பஞ்ச திருப்பதியின் நாயகர்களும் ஓரிடத்தில் எழுந்தருளிய புண்ணிய பூமியாக, ஆவணியாபுரம் திகழ்கிறது. ஆவணியாபுரத்து மலைமீது அமைந்துள்ள கோயில் கருவறையில் அமர்ந்த நிலையில் எழுந்தருளும் நரசிம்மருக்கு மட்டுமல்ல, அவரது இடபாகம் எழுந்தருளி திருமுகம் காட்டும் தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவரும் நின்றதொரு திருக்கோலத்தில் சிம்ம முகம். சன்னதியின் எதிரில் எழுந்தருளும் கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக்கிடைக்காத பெரும் பேறு. இத்திருதலத்துக்கு மேலும் பல சிறப்புண்டு. நவ நரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமி நரசிம்மர் கருவறையில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மருமாக 9 நரசிம்மர் இக்கோயிலில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.

கீழ்மலையில் உள்ள சன்னதியின் மேற்கு திசையில், வில் ஏந்திய நிலையில் வீர ஆஞ்சநேயர் காட்சித்தருகிறார். பல்லவர் காலத்து கட்டிட கலைக்கு சாட்சியாக விளங்கும். எனவே, இக்கோயில் ஆழ்வார்களின் காலத்துக்கும் முற்பட்டதாகும் என அறியப்படுகிறது. மலையின் இருநிலைகளில் சன்னதிகள் அமைந்துள்ளன. கீழ்மலையில், லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதியும், அலர்மேலுமங்கை தாயாருக்கு தனி சன்னதியும், அதனருகில் பஞ்ச நரசிம்மர் சன்னதியும், அழகிய கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்திகளும் காட்சியளிக்கின்றனர். மேல் மலையில், பெருமாளுக்கு தனி சன்னதியும் அதனருகில், ரங்கநாதர், வரதராஜர், யோக நரசிம்மர், அமிர்தவள்ளி தாயார் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்தருகின்றனர்.

பூஜை மற்றும் விழாக்கள்:

avaniyapuram_3 மாதந்தோறும் சுவாதி நட்சத்திர தினத்தில் ஊஞ்சல் உற்சவம், பவுர்ணமி தினத்தில் வெங்கடாஜலபதி கிரிவலம், மாசி மகத்தன்று பில்லாந்தி கிராமத்தில் எழுந்தருளல், பங்குனி உத்திரத்தில் சோழவரத்தில் எழுந்தருளல், திருக்கல்யாண உற்சவம், சித்ரா பவுர்ணமி தினத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெறும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு விழாக்கள், 3வது சனிக்கிழமை தினத்தில் ஸ்ரீவெங்கடாஜலபதி கருடசேவை. ஐப்பசி மாதம் தீபாவளி தினத்தில் திருமஞ்சனம், கார்த்திகை மாதம் விஷ்ணு தீபத்தன்று திருமஞ்சனம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, தை மாதம் காணும் பொங்கலன்று மந்தைவெளி புறப்பாடு நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இங்கு விழாக்கோலம்தான். இரவு முழுவதும் வார வழிபாடு நடைபெறும். சனிக்கிழமை இரவு இக்கோயிலில் பக்தர்கள் தங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் இக்கோயில் தரிசனம் வழிசெய்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

 இங்கு தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தின் மூலம் அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது. இங்கு அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள்  

தொடர்புக்கு :  கோவில் மேலாளர் திரு.திவாகர் செல்: 8608999572

அமைவிடம் : 

  திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #murugan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post புரட்டாசியில் நாராயணனை வணங்கினால் ஐப்பசியில் திருமணம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்