Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருதேங்கூர் இரஜதகிரீஸ்வரர்

$
0
0

அருள்மிகு இரஜதகிரீஸ்வர சுவாமி திருக்கோயில் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் , திருநாவுக்கரசு நாயனார் , சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடல் பெற்ற ஸ்தலமாகும். உலகம் கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் திருதேங்கூர் என்னும் காரணப்பெயரை இத்தலம் அடைந்தது.

 

இறைவன்  –  வெள்ளிமலை நாதர்

இறைவி  –  பெரிய நாயகி

 

ஸ்தல விருட்சம்  – தென்னை

 

மஹாலக்ஷ்மி வழிபட்ட வரலாறு ;

பொருளுக்கு அதிதேவதையான லக்ஷ்மிதேவி , தனது கடைக்கண் நோக்கம் பட்டவுடனே எத்தகையருக்கம் செல்வம் பெருகும்படியான வரதைப்பெற விரும்பினாள். இத்தலத்தில் கைலாய கிரியிலுள்ள ஆயிரத்தெட்டு கொடு முடிகளில் ஒன்றைக் கொண்டு வந்து நிறுவி சிவபூஜை செய்ய வேண்டுமென்று நினைத்தாள். இதற்காக கருடனை அனுப்பி சிவபெருமானிடமிருந்து வெள்ளியிலான கொடுமுடியை கொண்டு வரச்செய்து இத்தலத்தில் வைத்து தவம் செய்தாள். லக்ஷ்மி தேவி இத்தலம் வெள்ளிமலையாக உமாதேவியுடன் சிவபெருமான் என்றும் இருந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கொடுத்தருளவும் வேண்டியதால் சிவபெருமானும் அப்படியே அருள் புரிந்தார். அன்று முதல் சுவாமியின் பெயர் ” வெள்ளிமலை நாதர்” என்றானது.

 

சிவபெருமான் சடையிலுள்ள கங்காதேவி தினம் தன்னிடம்

முழுகுவோரது பாபம் போக்கியதால் கங்காதேவியின் பாபம் அதிகரிக்கவே , இதனை நீக்கிக் கொள்ள திருதேங்கூரிலுள்ள திருக்குளத்தில் தீர்த்தமாடி பெரியநாயகியையும் , வெள்ளிமலை நாதரையும் பூஜித்து நவக்கிரக லிங்கங்களையும் வழிபட்டு பாபத்தைப் போக்கிக் கொண்டாள்.

 

இத்தலத்தில் அமாவாசை , பௌர்ணமி , உத்தராயண , தெட்சணாயான , அர்தோதய , மகோதய புண்ணிய காலங்களில் முழுகி வழிபடுவோர் நலம் பெறுவர்.

 

வெள்ளிமலை நாதரை வழிபடுங்கள் !

 

நவக்கிரக லிங்கங்களை பூஜை செய்யுங்கள் !

 

நலம் பல பெற்றிடுங்கள் !!

The post திருதேங்கூர் இரஜதகிரீஸ்வரர் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>