Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 27/04/2016

$
0
0

  உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு பரிகாரமும்,பயன்களும் என்ற இந்த அற்புதமான தலைப்பில் நாம் எடுத்துக் கொண்ட சித்தர்களுடைய அடை வரிசையில் குதம்பை சித்தர்.

    Kudhambaiகேதுவின் ஏழு வருட காலத்தை நமக்கு மாற்றக்கூடிய வல்லமை கொண்ட சித்தராக இருக்கிறார்.இந்த சித்தரின் இரத்தின சுருக்க அந்த வாழ்க்கை வரலாறு என்னவென்றால் யாதவ குலத்திலே பிறந்த இவர் பெண் போன்றே இருப்பதால் இவரது பெற்றோர்கள் குதம்பை என்ற ஒரு நகையை அணிந்து இவர் அழகை பார்த்து வந்தார்கள்.இவருக்கு 16 வயது வரும்போது முற்பிறவியின் காரணமாக திடீரென்று காட்டுக்குச் சென்று அந்த அத்தி மரம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு த்யானம் செய்யும் பொழுது பல விதமான சித்திகளைக் கையாடல் கொண்டார். அப்படிப்பட்ட அந்த குதம்பைச் சித்தரை வணங்குவதால் இந்த கேது தசை என்பது அனைத்து தசைகளிலும் பெரும்பாலான நபர்களுக்கு அதிக சோதனையைக் கொடுக்கக் கூடிய தசையாக இந்த கேது தசை இருக்கிறது.கேதுவை கெடுத்து கொடுக்கும் ஆன்மீக கிரகம் என்று கூறுகிறார்கள்.

    kumarஒரு மனிதனுக்கு அவனுடைய ஜனன காலத்தை ஆராய்ச்சி செய்யும் போது கேது பகை சாரம் பெற்று அல்லது பகை   வீடுகளிலே இருந்து அல்லது 6,8,12 லே மறைந்து அவர் தசை நடப்பு செய்யும் பொழுது மனக்கோளாறு ஏற்பட்டு பைத்தியம் பிடிக்கும் பெரிய பெரிய வியாதிகளான குஷ்டம் கேன்சர் இவருடைய தூண்டுதலால் வரும் மேலும் இவர்கள் ஆசையால் ஈர்க்கப்பட்டு வியாபாரம் செய்யும் போது அதிக பட்சமான நஷ்டங்களை அடைந்து தற்கொலை செய்து கொள்கிற சூழ்நிலைக்கே இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.சிறை வாசம் செய்பவர்கள் இந்த கேது தசையில் தான் நிறைய நடக்கிறது.இந்த மாற்று நிலைக்கு செய்வினைக்கு சூனியத்திற்கு ஒரு மனிதன் கட்டுப்படுகின்றான் என்றால் இந்த 7 வருட காலத்தை  மந்திரவாதிகள் தெரிந்து கொண்டு அவர்களை மோசமான நிலைக்கு அழைத்து செல்ல முடியுமென்றால் இந்த கால கட்டத்தில் தான் அது நடக்கும்.

   கேது தசை வந்தாலே கேடு தசை என்று தான் சொல்வார்கள் அதாவது ஒரு மனிதனுக்கு கேது நல்லபடியாக இருந்து தசை நடத்தும் போது இது ஒரு அற்புதமான தசையாக இருக்கிறது ஆனால் அதற்கு எதிர்மாறாக இந்த தசை மோசமாக இருந்து செயல்பட்டால் அந்த 7 வருட காலத்திலே மூன்று ஜன்மத்திற்குரிய அதாவது மூன்று பரம்பரைக்குரிய சொத்துக்கள் இருந்தாலும் வெள்ளமென அது கரைந்து விடும்.தண்ணியிலே உப்பு போட்டால் எப்படி அது கரைந்து விடுமோ.குந்தித் தீர்த்தால் குன்றும் மாறும் என்று சொல்வார்களே அப்படி இவர்கள் சொத்து சேர்க்கையைப் பெற்றிருந்தாலும் அந்த கேது தசை நடந்து வரும் போது அப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் இந்த குதம்பைச் சித்தர்களை நோக்கி காலையிலேயே அமர்ந்து ஓம் க்லீம் குதம்பை சித்தர் போற்றி போற்றி என்று கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக அமர்ந்து அவர்கள் தியானம் செய்யும் பொழுது அந்தக் கேதுவை ஞானக் காரகன் என்று அழைக்கிறார்கள்.

  kumaஅந்த விநாயக பகவானுக்கு மட்டும் தான் கட்டுப்படுவார் அப்படிப்பட்ட அந்த கேது இந்த குதம்பை சித்தருக்கும் கட்டுப்படுவார்.அந்த குதம்பை சித்தரை வணங்கி நீங்கள் செய்கிற காரியங்கள் அனைத்தும் லாபகரமாக இருக்கும்.நஷ்டங்களைக் கொடுக்காது.மனிதனின் மனதை  மூன்று நிலை என்று சொல்கிறார்கள்.மேல் மனம்,அடி மனம்,அடிகள் மனம்.முற்பிறவியை பதிவு செய்யும் அறை என்று சொல்கிறார்கள்.அங்கே ஒரு அழ்ந்த நித்திரை மனிதன் அவன் அந்த அனுபவத்தைப் பெறும் போது இந்த சித்தர்கள் அந்த சூப்பர் கான்சியஸ் என்று சொல்லப்பட்ட அந்த பகுதியிலே இருந்து வந்து இவர்களுக்கு வழி நடத்துவார்கள்.இந்த வழிநடத்துதல் கூட இவர்களுக்கு ப்ராப்தம் இருக்க வேண்டும்.

  இவர்களுடைய சொந்த ஜாதகத்தை என்னிடம் தர வேண்டும்.ஏனென்றால் இந்த சித்தர் வரலாறை அனைவராலும் அவ்வாறு சுலபமாக பெற்றுவிட முடியாது.இதை பார்பவர்கள்,கேட்பவர்கள்,அனைவரும் பாக்யசாலிகள்,புண்ணியவான்கள்,என்றால் அதில் ஒரு சிறிதளவும் சந்தேகம் இல்லை.ஏனென்றால் முற்பிறவியிலே எந்த மனிதனுக்கு சித்தரின் உறவு ஏற்படுகிறதோ அவனுக்கு இந்த பிறவியிலே அந்த ஞாபகம் வந்து சரியான நேரத்திற்கு அவன் சதுர மலைக்கு செல்கின்றான்.சரியான நேரத்திலே திருவண்ணாமலைக்குச் செல்லுகின்றான்.செல்லாத நேரத்திலே வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லுகிறான்,காசிக்கு செல்லுகிறான் ஆன்மீகத்தடங்களுக்குச் செல்லுகிறான் என்றால் கேதுவின் தூண்டுதளில்.நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் இந்த குதம்பை சித்தரை நோக்கி இரவில் 30 நிமிடம் ஓம் ஸ்ரீ குதம்பை சித்தரே போற்றி போற்றி என்ற இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்கள் வாழ்க்கையிலே பல விதமான அற்புதங்களை அடையாளம் காட்டும் என்று சொல்லி இந்தப் பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி வணக்கம்.

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 27/04/2016 appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>