ஆன்மிகம் என்றால் அன்புதான்.அன்பு செலுத்த தெரியாதவர்களால் நிச்சயமாக பக்தி செலுத்த முடியாது.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில் ஒரு மந்திரம்:
அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள்.
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும்.
எங்கோ வானத்தில் நீண்ட தூரத்தில் இருக்கும் நிலாவில் கூட ஈரப்பசை இருக்கிறது. ஆனால் இங்கே பக்கத்தில் உள்ள மனித உள்ளத்தில் தான் அது இல்லை.ஈரம் – அன்பு. அன்பு சுரந்தால்தான் மனம் விசாலமாகும்.திருமூலர் அருளிய திருமந்திரத்தில் ஒரு மந்திரம்,
திருமந்திரம்:
“யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”
இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம்.இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும்,எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.பகவான் பக்தியைத்தான் பார்கிறார்.பக்தன் என்ன கொண்டு வருகிறான் என்று பார்பதில்லை.
ஒரு கை புல்,ஒரு கை பொரி,அன்போடு படைத்தால் விநாயகர் வசப்படுவார்.சில துளசி இலைகளில் மஹா விஷ்ணு வசப்பட்டுவிடுவார்.சில துளி கங்கா தீர்த்தம்,வில்வம் இவற்றால் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்ன மாகிவிடுகிறார்.
இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம்.
அன்பே ஆன்மிகம் ! ஆன்மீகமே அன்பு !!
The post பகவான் பக்தனிடம் பார்ப்பது என்ன? appeared first on Swasthiktv.