Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

ஜலத்தில் மறைந்திருந்து அருள் தரும் ஆத்திவரதர்!

$
0
0

     காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அத்தி இக்கோயிலில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு அத்தி வரதர் மற்றும் தங்க பல்லியும். இங்கு உள்ள அத்தி வரதர் என்னும் பெருமாளை, நாம் 40 வருடத்திற்கு ஓரு முறை தான் தரிசிக்கமுடியும். ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணீருக்கு அடியில் கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஓரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவதில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி மரத்தினால் செய்யப்பட்டது மிகப்பெரிய அத்திமரத்தால் வடித்து பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரமம்மனின் யாக தீயினின்று images2தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத்தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து, சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் ஊஷ்ணத்தை தணிக்கவே தெப்பக்குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக்கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.
பழைய சீவரபெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்துவிட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை ஈறைத்து விட்டு ஆதி அத்திவரதரை வெளியே கொண்டு வருவார்கள்.
வெள்ளிதகடுகள் பதித்த பெட்டியில் சயனகோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஓரு முறை,மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளியிருப்பார்.
பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, ஊற்சவ விழா வழிபாட்டோடு, 10 நாட்கள் கண்குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளித்தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப்பட்டுவிடுவார். 1939 மற்றும் 1979ம் ஆண்டுகளில் நடந்த இந்த kanchiவைபவம். அடுத்து 2019ம் ஆண்டு நடக்கும். வைகுண்டநாதப் பெருமாள் கோயில் காஞ்சி நகரத்தினுள்ளேயே பொலிவுற அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கி வீற்றிருக்கும் வைகுண்டப் பெருமாளுக்குப் பரமபத நாதர் என்ற பெயரும் உண்டு. தாயார் வைகுந்தவல்லி திருமால் மீது இழ்ந்த பக்திகொண்ட பரமேஸ்வரன் என்னும் பல்லவ மன்னன் எழுப்பிய இலயம். எனவே இந்தத் தலத்துக்கு பரமேஸ்வரவிண்ணகரம் (பரமேச்சுர விண்ணகரம்) என்ற பெயர் வழங்கப்படுகிறது. விண்ணகரம் கி.பி.674-800 காலக்கட்டத்தில் 2ம் நந்தி வர்ம பல்லவனால் கட்டப்பட்ட கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம் :-
காஞ்சிபுரம் பஸ்நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரமே உள்ள திருத்தலமாகும்.

செய்தி : ப.பரசுராமன்
படங்கள்:ப.வசந்த்

The post ஜலத்தில் மறைந்திருந்து அருள் தரும் ஆத்திவரதர்! appeared first on Swasthiktv.


இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 07/05/2016

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 09/05/2016

போகர் பிரதிஷ்டித்த முருகன்

$
0
0

       முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். இந்த கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார் உற்சவர் முத்துகுமாராசாமி. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் நேர்த்திக்கடன் செலுத்தும் பழக்கம் ஏற்பட்டது. பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும்.பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.

கோயில் வரலாறு :

     நாரதர் ஓரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்க விரும்பினார். ஆனால் சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி பழத்தை பெற image-9மகன்களுக்கு ஓரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் சுற்றி வர செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தை உலகத்தை சுற்றி வந்து ஞானபழத்தை பரிசாக பெற்றார். அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, (பழம்+நீ) பழனி என அழைக்கப்படுகிறது.
முருகனின் சிலை நவபாஷனாத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழதுபட்டுள்ளது.இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறுவில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்:-

    unnamed (1)பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம்,பங்குனி ஊத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக்கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளார். இந்த கோயிலில் தங்கத்தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

நடை திறக்கும் நேரம் :-

         மலைக்கோயில், பெரியநாயகி கோயில், திருவினன்குடி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் தினசரி காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்து இருக்கும்.

தலச்சிறப்புகள்:-

           குடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர். பொதுவாக குழந்தைகள் தாயிடம் பிறந்து தந்தையிடம் அடைக்கலம் பெறுவார்கள். ஆனால், முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து, தாய் பார்வதியின் அரவணைப்பில் வளர்ந்தார். முருகன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வந்து நின்ற தலமே மூன்றாம்படை வீடு என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழனி பஞ்சாமிர்தம் பக்தர்கள் மத்தியில் விசேஷ பிரசாதமாக விளங்குகிறது.

சுற்றுலா தலம்:-pal

      பழனி முருகன் முதலில் பக்தர்கள் வேண்டுதல்கள் மற்றும் தெய்வ வழிப்பாடுகள் செய்ய வந்து செல்ல ஓரு புன்னியதலமாக விளங்கியது. காலப்போக்கில், பழனி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் மலைக்கோயிலை சுற்றிப்பார்க்க தமிழக அரசு ரோப்கார் (கம்பிவடஎர்தி) வசதி செய்துள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பழனி மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல இந்த ரோப்காரில் சென்று வருகின்றனர்.

தண்டாயுதபானி பெயர் காரணம்:-

     இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்திரவுப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இருமலைகளையும் கீழே வைத்துவிட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார்.இடும்பன், அவரை இறக்கும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன் முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக்கொண்டார். சக்திகிரி மலையில் மீது எறிநின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் தண்டாயுதபாணி என பெயர் பெற்றார்.

பழனி முருகன் கோயில் :-

மூலவர்                : தண்டாயுதபாணி, நவபாஷாணமூர்த்தி,
தல விருட்சம் : நெல்லி மரம், தீர்த்தம் : சண்முக நதி,
இகமம்                : சிவாகமம், புராணப் பெயர் : திரு ஆவினன்குடி
தொடர்புக்கு     : போன் : 04545242293

செய்தி : ப.பரசுராமன்
படங்கள் :ப.வசந்த்

The post போகர் பிரதிஷ்டித்த முருகன் appeared first on Swasthiktv.

அட்சய திரிதியை தோன்றியது எப்படி?

$
0
0

     ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திரிதியை “அட்சய திரிதியை” என்று அழைக்கிறார்கள்.”அட்சயம்” என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம்.அப்படியாக அட்சய திரிதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் மிகவும்பெருகி வளம் சேர்க்கும்.குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திரிதியை போற்றப் படுகிறது.

அட்சய திரிதியையின் மற்ற சிறப்புகள்:

     தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும்,மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும்,இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான்.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்,புனித நதி கங்கை பூமியை தொட்ட நாள்,குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்,ஆதி சங்கரர் செல்வத்தை கொட்டிக் கொடுக்கும் ஸ்லோகமாகிய கனகதார ஸ்தோத்திரத்தை இயற்றிய நாள்,குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்,திரேதா யுகம் ஆரம்பமான நாள்,வியாசர் மஹா பாரதம் எழுத ஆரம்பித்த நாள்.

அட்சய திருதியை தினத்தில் செய்ய வேண்டியவை:

     இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு,அரிசி,ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.அன்றைய தினத்தில் புதிய தொழில் தொடங்கலாம். பூமி பூஜை செய்வதற்கு உகந்த நாள்.ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.பிதுர்க்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் அவர்களது ஆசீர்வாதம் பெற்று சிறப்பாக வாழலாம்.

அட்சய திருதியை நாளில் விரதம் இருக்கும் முறை:

     அட்சய திருதியை நாளன்று விடியும் முன் எழுந்து சுத்தமாக நீராடி,பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி கோலம் போட்டு அதன் மீது ஒரு பலகையை வைக்கவும்.பின் பலகையின் மீது கோலம் போட்டு ஒரு சொம்பில் சந்தன கும்குமம் இட்டு அதில் நீரை நிரப்பி அதன் மீது பெரிய தேங்காயை வைத்து மாயிலைகளை அதனைச் சுற்றி அதுக்கி கலசம் போல் தயார் செய்ய வேண்டும்.

பின் அந்த கலசத்தின் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து,அதன் அருகில் புதிதாக வாங்கிய பொன்,பொருள்களை வைத்து,பூ போட்டு பூஜை செய்ய வேண்டும்.பிறகு அதற்கு கற்பூர தீபாராதனைக் காட்டி வணங்கினால் வளமான செல்வம் பெருகும்.

நண்பர்களே! நலமும்,வளமும் தரும் இந்த அட்சய திருதியை நாளில் நாமும் இத்தகைய விரதம் மற்றும் பூஜைகள் செய்து அளவில்லாத செல்வம் பெற்று வாழலாமே!

குறிப்பு:

    இந்த அட்சய திருதியை தினத்தன்று வெண்மை நிறப் பொருட்கள்  விசேஷமானது ஆகும்.வெண்ணிற மல்லி பூ,வெண்பட்டு ஆடை,வெண்ணிற பால் பாயசம் இவைகளைப் பயன் படுத்துதல் சிறப்பாகும்.

 

The post அட்சய திரிதியை தோன்றியது எப்படி? appeared first on Swasthiktv.

நாக பஞ்சமி தினத்தன்று செய்யும் பால் கொழுக்கட்டை

$
0
0

நாக பஞ்சமி நாளன்று இந்த பால் கொழுகட்டையை செய்து இறைவனுக்கு நெய்வேத்யம் செய்தால் நாக தோஷம்,சர்ப்ப பயம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். இப்பொழுது அந்த பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1/2 கப்

தண்ணீர் – 1 கப் + 1 கப்( பாகு செய்ய)

பால் – 1/4 கப்

தேங்காய்ப் பால் – 1/2 கப்

வெல்லம் – 1/2 கப்

நெய் – 1 ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் 1 கப் தண்ணீர்,1/4 கப் பால்,அரிசி மாவு ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் அடிபிடிக்காமல் கிளறவும்.பின்பு கொழுக்கட்டை மாவு போல் திரண்டு வந்ததும்அடுப்பிலிருந்து இறக்கி  அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து ஒரு ஈரத் துணியால் மூடி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை கரைத்து நன்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த கொழுக்கட்டை மாவை சிறிய உருண்டைகளாக (கோலிக்குண்டு அளவில்) உருட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி அது சூடானதும், 2 ஸ்பூன் தேங்காய்ப் பால் மற்றும் வெல்லம் கரைத்த தண்ணீரையும் சேர்த்து 3 – 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.பின்பு அந்தக் கொழுக்கட்டை உருண்டைகளைப் போட்டு, ஏலக்காய்ப் பொடியும் போட்டு 10 – 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.இப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி 1/2 கப் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலந்து,ஆரிய பிறகு பரிமாறலாம்.

மிகவும் சுவையான இந்த பால் கொழுக்கட்டையை நாக பஞ்சமி அன்று படைத்து நாகராஜனின் அருளைப் பெறுவோம்.

The post நாக பஞ்சமி தினத்தன்று செய்யும் பால் கொழுக்கட்டை appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 10/05/2016

”இடுக்கண் தீர்க்கும்” இருக்கன்குடி மாரி அம்மன்

$
0
0

 

 மதுரை அருகிலுள்ள சதுரகிரிமலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்மனின் தரிசனம் வேண்டிதவமிருந்தார். அப்போது அசிரீரி ஒலித்து. சித்தரே ! அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா” என்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சிதந்தாள். தான் பார்த்தவடிவத்தை அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது.

 photo9பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமிபசுஞ்சாணம் சேகரிக்கும் சேகரித்து வந்தாள் ஒரு நாள் தரையில் வைத்த சாணக்கூடையை தூக்க முடியவில்லை. பொரியோரை அழைத்துவந்தாள் அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன். அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

  மாரியின் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா நதியானது ,வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்கமலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக்கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித்திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள்  குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுனன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் புமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய அதான் அர்ச்சுனா ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் தீராடிமகிழ்ந்தனர்.

 maxresdefaultஅம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனிபுராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகண் என்ற வேடன்தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனதுதவத்தில் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது  அயோத்தியை ஆண்டராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமயாண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது).தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவவிமோசனத்திற்காக சிவமலையில்  சிவபெருமானை நினைத்து, வணங்கித்தவம் செய்துபாவவிமோசனம் பெற்றார்.

  அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தன் மாலைக்கடனை  முடிக்க தண்ணீர் தேடிகிடைக்காததால் வருத்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன். உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக்குடத்தை அகத்தியர் இங்கு புதைத்துவைத்திருப்பதாக கூறினான்.இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்தநல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்தது, அங்கு ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் அர்ச்சுனாநதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

இரட்டை தீர்த்தம் : வனவாசம் சென்ற அருச்சுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மலைமீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது, இந்நதிஅவனது யெராலேயே அழைக்கப்பெற்றது,  இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூவைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். T_500_727அப்போது பிறந்த நதிவைப்பாறு எனப்பட்டது. இவ்விருநதிகளும் கங்கைக்கு ஓப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்தகோயில் என்பதை உணர்த்தும் விதமாக ‘இருகங்கைக்குடி’ எனப்பட்ட ஊர் ‘இருக்க (ங்)ன்குடி’ என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.

ஆதி அம்பிகை: அம்பாள், இங்கு சிவஅம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரைபோடப்பட்டுவிடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிசேகத்தைப் பக்தர்கள் காணலாம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில் அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்தசூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் கட்டுவதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியைவலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து  நேர்த்திகடன் செலுத்துகின்றனர் வயிற்று வலி தீர மபவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக  தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர்.

 photo6பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிராத்தனைத் தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், ‘வயனம் இருந்தல்” என்ற விரதத்தை அனுசரிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது, இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தைக் கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர்.  அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மைநோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 பொதுவாக அம்மன் இடது காலைமடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் இந்த அம்மனோ, இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலைமடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியின்மிகப்பெரிய சிறப்பு.

அமைவிடம்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து பஸ் வசதிவுள்ளது

தொடர்புக்கு : 91-456259614, 259864

செய்தி : ப.பரசுரமன்

படங்கள் : ப.வசந்த்

The post ”இடுக்கண் தீர்க்கும்” இருக்கன்குடி மாரி அம்மன் appeared first on Swasthiktv.


மஹா பெரியவாளின் 3 கட்டளைகள். பெரியவா காயத்ரி ஜப மகிமையைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அதுவும் சஹஸ்ர காயத்ரி பண்ணச் சொல்லியிருக்கிறார். நமக்கிட்ட 3 கட்டளைகள் என்ன?

$
0
0

தினமும் 3 வேளை சந்தியா வந்தனம் செய்.

சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்.

ஏகாதசி உபவாசம் இரு.

I. சந்தியா வந்தனம்:

தினமும் 3 வேளை கண்டிப்பாக சந்தியா வந்தனம் செய்யவேண்டும். விட்டுப்போனதை கணக்கில் வைத்துக்கொண்டு பிறகு செய்யவேண்டும். அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ விடாமல் செய்ய வேண்டும். (இது முசிறி பெரியவா சொன்னது). மஹா பெரியவா தன் வாயால் அவரை மகான் என்று சொல்லியிருக்கிறார்.

II. சஹஸ்ர காயத்ரி ஜபம்:

மஹா பெரியவா காயத்ரி ஜப மகிமையைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அதுவும் சஹஸ்ர காயத்ரி பண்ணச் சொல்லியிருக்கிறார். ரிடையர் ஆன ஒருவருக்கு இப்படி உபதேசம் செய்கிறார். “தினமும் சஹஸ்ர காயத்ரி செய்துகொண்டு வா. இது பரத்துக்கு. போஸ்ட் ஆபீசில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய். அவர்கள் கொடுக்கும் பணம் போதும் இகத்துக்கு.”

இந்த உபதேசம் அவருக்கு மட்டும் இல்லை. நம் எல்லோருக்கும் தான். ரிடையர் ஆவதற்கு முன் வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்றாவது சஹஸ்ர காயத்ரி பண்ணு என்று சொல்லியிருக்கிறார்கள். இதை முடிந்தவரையில் நாம் கடைபிடிப்போமே.

தினமும் 1 மணி நேரம் கிடைத்தால், டிவி பார்ப்பதை தவிர்த்து விட்டு இதை செய்தால் மஹா பெரியவா கட்டளைப்படி நடந்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். சொல்வது எளிது செய்வது கஷ்டம் என்றுதானே நினைக்கிறீர்கள்? நான் ஒரு வழி சொல்கிறேன்.

தினமும் காலையிலோ மாலையிலோ 1 மணி நேரம் கிடக்கும்போது, குளித்துவிட்டு சுத்தமான உடை (பஞ்சகச்சம்) அணிந்துகொண்டு, ஒரு அமைதியான இடத்தில் ஆசனம் போட்டு கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு நோக்கி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு ஆரம்பிக்கவும். நமது உள்ளங்கையை மேருவுக்கு ஒப்பாகச் சொல்வார்கள். ஒரொரு விரலிலும் 3 பாகங்கள் உண்டு. மோதிர விரல் நடு பாகம் 1 என்று கொண்டால் அடிப்பாகம் 2. சுண்டுவிரல் 3,4,5 (அடி, நடு, மேல் ), மோதிர விரல் நுனி 6, நடுவிரல் நுனி 7, ஆள்காட்டி விரல் 8,9,10 (மேல், நடு, அடி ). பிறகு 11 லிருந்து 20 வரை ஆள்காட்டி விரல் அடியிலிருந்து மோதிர விரல் நடு பாகம் வரை சென்று பூர்த்தி பண்ணவேண்டும். ஒரொரு எண்ணிக்கைக்கும் ஒரு காயத்ரி என்று சொன்னால் 20 எண்ணிக்கை வரும். இப்படி செய்தால் ஒரு முறை மேருவை (ஆதி பராசக்தி ஆட்சி செய்கிறாள் ) வலம் வந்ததிற்கு ஒப்பாகும்.

நாம் மேருவைப் பார்த்ததில்லை. அதனால் நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். திருவண்ணாமலையை மேருவாக உருவகம் செய்துகொண்டு செய்யலாம்.

1. கோவில் வாசலில் நமஸ்காரம் செய்தல். ( கிழக்கு கோபுர வாசல் )

2. தெற்கு வாசலில் பிள்ளையார் தரிசனம்.

3. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நமஸ்காரம்.

4. ரமண மகரிஷி தரிசனம்.

5. யமலிங்க தரிசனம்.

6. நந்திஎம்பெருமான் தரிசனம்.

7. மகாவிஷ்ணு தரிசனம்.

8. ஆஞ்சநேய சுவாமி தரிசனம்.

9. கிரிவலம் செல்லும் பாதை.

10. ஆதி அண்ணாமலையார் சன்னதி. (ப்ரம்மா ஆதியில் வழிபட்ட லிங்கம்)

11. ஆதி அண்ணாமலையாருக்கு நமஸ்காரம்.

12. வடக்கு கிரிவலப் பாதை. ஒரு மொட்டை கோபுரம் வரும்.

13. குபேர லிங்க தரிசனம்.

14. இடுக்கு பிள்ளையார்.

15. பஞ்சமுக தரிசனம்.

16. ஈசான்ய மூலை.

17. கிழக்கு கிரிவல பாதை.

18. கிழக்கு கிரிவல பாதை.

19. கோபுர வாசலை நெருங்குகிறோம்.

20. கிழக்கு கோபுர வாசலை அடைகிறோம்.

மேற்க்கண்டவை கிரிவலம் செய்தவர்க்கு புரியும்.

இப்பொழுது மூச்சுப் பயிற்சியைப் பார்ப்போமா?

நாம் சாதாரணமாக மூச்சு விடுவது வயிற்றிலிருந்து இருக்கவேண்டும். (அப்டாமினால் பிரீதிங் ). ஒரு கையை வயிற்றிலும் ஒரு கையை நெஞ்சிலும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மூச்சை வெளியே விடும்போது கீழ் கை உள்ளே போகவேண்டும். மூச்சு உள்ளே இழுக்கும்போது கீழ் கை வெளியே போகவேண்டும். பிறகு மேலும் மூச்சு இழுக்கும்போது, மேல் கை ( நெஞ்சில் இருக்கும் கை) வெளியே வரவேண்டும். மூச்சு வெளியே விடும்போது முதலில் மேல் கை உள்ளேயும் பிறகு வயிற்றில் இருக்கும் கை உள்ளேயும் போகவேண்டும். இதுதான் ஆழ்நிலை மூச்சு (டீப் பிரீதிங் ). புரிந்ததா? இதை விடாமல் பயிற்சி செய்யவும். இதுதான் மனதையும், உடலையும் மூளையையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ளும் ஒரே வழி. கை வைத்துக்கொள்வது பயிற்சிக்காக மட்டுமே. நாளடைவில் உங்களை அறியாமலே அப்டாமினால் பிரீதிங் கைகூடும்.

நாம் மறுபடியும் கிரி வலத்துக்கு வருவோம்.

1 – 20 காயத்ரி. மூச்சை உள்ளே இழுத்து விட்டு ஆரம்பிக்கவும். முடியும் வரை இழுத்துப் பிடிக்கவும். 7 அல்லது 8 க்குப் பிறகு காயத்ரி சொன்னவாறே மெதுவாக மூச்சை வெளியே விடவும். மீண்டும் 11 லிருந்து 20 வரை ஒருமுறை இழுத்து அடக்கி விடவும். இது ஒரு கணக்கு. ஆரம்பத்தில் 3 அல்லது 4 முறை ஆழ் மூச்சு விடவேண்டியிருக்கும். பழக்கத்தில் சரியாக வந்துவிடும். எதையுமே 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும் என்று சொல்வார்கள். (ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள் )

எதிரே ஒரு ஆசனம் போட்டு 10 நெல் அல்லது மணி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி 1 முறை (1-20) செய்தால் இடது கையில் ஒரு விரலை மடக்கிக் கொள்ளுங்கள். இப்படியாக 5 முறை செய்தால் 100 எண்ணிக்கை வரும். ஒரு நெல் வைக்கவும். இடது பக்கம் 3, மேலே 3, வலது பக்கம் 3 வைத்தால் ஒரு சிவ லிங்கம் வரும். 10 ஆவது நெல்லை கீழே ஆவுடையாக வைத்துவிடுங்கள் . இப்பொழுது 1000 காயத்ரி முடிந்தது. மேலும் ஒரு 8 சொல்லி, நைவேத்யம் செய்து ருத்ரம் சொல்லி பூர்த்தி பண்ணிவிடுங்கள்.

இப்படி கிரிவலம் செல்லும்போது நாம் மட்டும் செல்லாமல் மானசீகமாக நம் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லவும்.

மேற்கண்ட முறையில் பல நன்மைகள் உள்ளன. அவை என்னெவென்று பார்ப்போமா?

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சொல்வார்கள். நாம் இப்போது 50 தடவை கிரிவலம் செய்திருக்கிறோம்.

நம் குடும்பத்தினரையும் அழைத்து சென்றிருக்கிறோம்.

100 தடவை ஆழ் மூச்சு எடுத்திருக்கிறோம். அதனால் உள்ள பலன்கள் அநேகம்.

இதனால் வாயிற்று தசைகள் பலப்படிருக்கின்றன.

தொப்பை குறையும்.

நிமிர்ந்து உட்காருவதனால் முதுகுத் தசைகள் பலப்படிருக்கின்றன.

50 தடவை மகான்கள், தெய்வ சந்நிதிகள் தரிசனம்.

மனதை ஒருநிலைப் படுத்தும் பயிற்சி.

விரல்களின் ஒவ்வொரு இடமும் மலையின் ஒவ்வொரு இடத்தை நினைவுப்படுதுவதால் நம் கவனம் சிதறும்போதேல்லாம் வந்து சேர்ந்து கொள்ளலாம். ( நம் எண்ணம் நடுவில் எங்கெல்லாமோ செல்லும். நமக்கு பிடிக்கதவனை நினைத்து அவனுக்கு சாபம் கொடுக்கும் அளவிற்கெல்லாம் சென்றுவிடும்! ). கவலை கொள்ள வேண்டாம். மனதை ஒருநிலைப் படுத்துவதற்கு இந்த பயிற்சி கைகொடுக்கும்.

இது 1 மணி ஜபம். அந்த சமயித்திலாவது கெட்ட சிந்தனைகள் இல்லாமல் சத்சங்கத்தில் இருப்போம்.

இப்படி அதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். திருவண்ணாமலை ஒரு உதாரணத்துக்காகத்தான் சொன்னேன். எனக்கு நன்கு பரிச்சயம் உள்ளதால் அதை வைத்துக்கொண்டிருக்கிறேன். சிறு வயது முதல் அங்கு செல்வதுண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சென்றுவிடுவேன். அதுபற்றி பிறிதொருமுறை சொல்கிறேன்.

உங்களுக்கு நன்கு பரிச்சயமான நன்கு மனதிற்கு இதமான ஒரு கோவிலோ அல்லது ஒரு க்ஷேத்ரமோ, மலையோ சிவா விஷ்ணு பேதமில்லாமல் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமானது சஹச்ர காயத்ரி. அதை ஆரம்பித்து வைராக்யமாய் விடாமல் லோகக்ஷேமத்துக்கு செய்துவருவது ரொம்ப முக்கியம்.

III. ஏகாதசி உபவாசம்:

மகான் சொல்லியது. “ஏகாதசி அன்று உபவாசம் இருங்கோ. மத்த நாள் அளவோடு சாப்பிடுங்கோ”. இதை கடைபிடித்தால் நம் மனமும் உடம்பும் ஆரோக்யமாக இருக்காமல் எப்படி இருக்கும்? ஏகாதசி அன்று ஒன்றும் சாபிடாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் அதன் மகிமையை உணர முடியும். முதலில் நம் வயிறு குறைய ஆரம்பிக்கும். வயிறின் அளவு குறைவதால் மறுநாள் நாம் கொஞ்சமாக சாப்பிட்டாலும் நிறைவாக உணருவோம். அதன் பிறகு வயிற்றைப் பெருக்காமல் குறைவாக உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும். முதல் ஏப்பம் வரும்போது நிறுத்திக்கொள்ளவேண்டும். பசித்து சாப்பிடவேண்டும். நிதானமாக ரசித்து ருசித்து அளவோடு சராசரி விகிதத்தில் ஆரோக்யமான உணவு உட்கொள்ளவேண்டும். இரண்டு உணவுக்கு நடுவில் எதுவும் சாப்பிடக்கூடாது. அளவோடு தாகத்துக்கு தண்ணி குடியுங்கள். இப்படி விரதம் இருந்து பழகினால், இதை திங்கலாம் அதை திங்கலாம் எண்று அலையும் மனம் அடங்கும். இது ஆத்ம விசாரத்துக்கு உதவும்.

மேலே சொன்ன பெரியவாளின் மூன்று கட்டளைகளையும் கடைபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இது கடைசிவரை நீடிக்க அந்த பரம்பொருளின் அனுக்ரஹத்தை யாசிக்கிறேன். ஆன்மீக நாட்டம் எந்த விதத்திலேயாவது பலருக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற ஆசையில் மஹா பெரியவாளின் ஆக்ஞைப்படி இன்று ஏகாதசி புண்ணிய நாளில் இதை எழுதுகிறேன்.

நன்றி : டாக்டர் ஜி ரவிசந்திரன்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

.

The post மஹா பெரியவாளின் 3 கட்டளைகள். பெரியவா காயத்ரி ஜப மகிமையைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அதுவும் சஹஸ்ர காயத்ரி பண்ணச் சொல்லியிருக்கிறார். நமக்கிட்ட 3 கட்டளைகள் என்ன? appeared first on Swasthiktv.

தீராத நோயை தீர்க்கும் தீர்த்தம் கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம்.

$
0
0

சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள், மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.

தலபெருமை:

மலையின் சிறப்பு: அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடை பிடிப்பது போல அமைந்த மலை இது. பாறையை ஒட்டி சிறிய சன்னதியில் சிவன் காட்சி தருகிறார்.பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது. வயிற்று வலி, தீராத நோயால் அவதிப்படுவோர் நிவர்த்திக்காக இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச் செல்கின்றனர்.

அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள் கிடையாது. கோயில் வளாகத்தில் வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும் இருக்கிறார். இவருக்கு எதிரே தந்தைக்குரிய நந்தி வாகனம் இருப்பது விசேஷமான அமைப்பு.

தீப வடிவ குகை: சோமலிங்கசுவாமி சன்னதிக்குப் பின்புறம், மெய்கண்டார் தவம் செய்த குகை உள்ளது. பாறையில் இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது.


பழநியில் முருகனுக்கு நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம் செய்துள்ளார். ஒருசமயம் அவர் கௌவ்ரி  பூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து அங்கலட்சணங்களும் பொருந்திய பெண் வேண்டுகின்றார். அத்தகைய பெண்ணைத் தேடிச்சென்ற கொங்கணர் மற்றும் கருவூரார் சித்தருக்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய பெண் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் தந்திரமாக போகர் விரும்பியபடி ஒரு கல்லில் சிலை வடித்து, அதற்கு உயிர் கொடுத்து அவரிடம் அழைத்துச் சென்றனர். நடந்ததை தன் ஞானதிருஷ்டியில் அறிந்த போகர், அப்பெண்ணைப் பார்த்து “கல் நீ வாடி’ என அழைத்தார். கொங்கணரும், கருவூராரும் தங்களை மன்னிக்கும்படி வேண்ட, போகர் அவர்களை மன்னித்தருளினார். இவ்வாறு, போகர் அப்பெண்ணை அழைத்ததால் கல்நீவாடி என்றே அழைக்கப்பட்ட ஊர், பிற்காலத்தில் கன்னிவாடி என மருவியது. இந்த தகவல் ஜலத்திரட்டு என்னும் புராதனமான நூலில் கூறப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:

திருமணத்தடை, மாங்கல்ய தோஷம், பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிச் செல்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறியதும் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

முகவரி:

அருள்மிகு சோமலிங்கசுவாமி திருக்கோயில்,

சோமலிங்கபுரம், கன்னிவாடி – 624 705. திண்டுக்கல் மாவட்டம்.

போன்: +91 99769 62536

.

The post தீராத நோயை தீர்க்கும் தீர்த்தம் கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம். appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 11/05/2016

அம்பலப் புழை கண்ணன் கேட்ட அரிசி பால் பாயசம்

$
0
0

 நினைத்த மாத்திரத்தில் கடவுளை தரிசிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது. அப்படி தரிசித்தவரும் இருந்தார்.வாருங்கள் அவரைப் பற்றி பார்ப்போம்.

 Ambalappuzha-Sri-Krishna-Temple17 ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த வில்வ மங்களம் சுவாமிகள் தான் அவர்.நினைத்த போது கடவுளை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்.இவர் ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்ட செண்பக சேரி ராஜாவுடன் படகில் போய்க்கொண்டிருந்த போது ஒரு இனிய வேங்குழல் ஓசை கேட்டது.அப்பொழுது ஒரு ஆலமரத்தடியில் குழந்தை வடிவக் கண்ணன் புல்லாங்குழல் ஊதும் காட்சி வில்வமங்களம் சுவாமிகளுக்குத் தெரிந்தது.ஆனால் அது அந்த ராஜாவிற்கு தெரியவில்லை.கவலையுடன் ராஜா வில்வமங்களம் சுவாமிகளிடம் ஏன் கண்ணன் எனக்கு காட்சி தர மாட்டாரா?என்று கேட்க சுவாமிகளும் கண்ணனிடம் வேண்ட மறு நொடியே கண்ணன் அந்த ராஜாவுக்கு காட்சியளித்தார்.

    இவ்வாறு கண்ணன் காட்சி அளித்ததன் பயனாக அந்த ஆலமரத்தின் அடியிலே ஒரு கோயிலைக் கட்டினாராம் ராஜா.அம்பலம் என்றால் கோயில்,புழை அருகில் அம்பலம் உள்ளதால் அம்பலப்புழை என்ற பெயர் உருவானதாம்.கண்ணன் குழலூதி வில்வமங்களம் சுவாமிகளுக்கு காட்சி அளித்த ஆலமரம் இன்றும் கணபதி ஆல் என்ற பெயரில் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது.

   www.templetravel.net.jpg10இங்கு பிரதிஷ்டை செய்த சிலையை ஒரு நம்பூதிரி குறை உள்ளதாக லேசாக தட்ட அந்த சிலையின் கை உடைந்து விழுந்ததாம்.உடனடியாக புது சிலை வேண்டுமானால் மன்னருக்கு பகை இருந்த இடத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருந்தது அப்பொழுது ஒரு பணிக்கர் குறிச்சியிலிருந்து அந்த சிலையை கடத்தி இட்டித் தோமன் என்ற பிறமதத்தவர் வீட்டில் ரகசியமாக மறைத்து பின் இரவில் கொண்டு வரப்பட்டது.இன்றும் கிருஷ்ணனை மறைத்து வைத்த வீட்டில் இன்றும் அந்த அறையில் விளக்கேற்றி வருகிறார்களாம்.

   இந்தக் கோவிலில் கண்ணனின் சிலை கருவறையில் பொருத்தப் பட்டபோது அது சரிந்ததாகவும் பின் அதன் கீழ் ஒரு வெற்றிலையை செருகியதும் அந்த சிலை நன்றாகப் பொருந்தியதாகவும் அதனாலே “தாம்பூலப் புழை ” என்று பெயர் பெற்று அது காலப்போக்கில் “அம்பலப் புழை” என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.

  maxresdefault (1)அம்பலப் புழை கோவிலில் முக்கிய நிவேதனம் பால் பாயசம். இங்கு நிவேதனம் செய்யும் பால் பாயசத்தை சாப்பிட அந்த குருவாயூர்க் கண்ணனே மதியநேரம் இங்கு வந்து போவதாக ஒரு ஐதீகம்.தினமும் நூறு லிட்டர் பால் பாயசம் தயார் செய்கிறார்கள்.இந்த பாயசத்திற்கான பாலை தினமும் காலையில் குளித்து,வெண்ணிற ஆடையில் பெண்கள் குடங்களில் ஏந்தி கோயிலுக்கு கொண்டுவருகிறார்கள்.முதலில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த பாயசம் ,1959 ம் ஆண்டு முதல் அனைத்து பக்தர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

  இந்த பிரகாரத்தில் உள்ள கிணற்று நீர் தான் அபிஷேகம் முதல் பாயசம் செய்வது வரை உபயோகப்படுத்தப் படுகிறது.ஒரு பெரிய வெண்கல உருளியில் பாலைக் காய்ச்சி ஆதில் நன்கு கழுவிய அரிசியைப் போட்டு பின் அதை நன்கு காய்ச்சிய பிறகு சர்க்கரை சேர்த்து பாயசம் தயாராகிறது.

     திருப்பதிக்கு லட்டு போல அம்பலப்புழைக்கு பால் பாயசம் எப்படி வந்தது என்று ஒரு கதை உண்டு.என்னவென்றால்……

    ambalapuzha-sree-krishna (1)ஒரு முறை இந்த நாட்டில் பஞ்சம் வந்தது.அப்பொழுது ராஜா ஒரு செல்வந்தரிடம் நெல் மூட்டைகளை கடனாகப் பெற்றார்.ஒரு முறை ராஜா கோவிலிக்கு சென்ற போது அந்த செல்வந்தர் தன்னிடம் வாங்கிய கடனைத் தீர்க்காமல் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று வழிமறித்து நின்றார்.மன்னன் அவமானப் பட்டு நின்றதைப் பொறுக்க முடியாத மக்கள் தங்களிடம் இருந்த நெல் மூட்டைகளை கொடுத்து மன்னரின் மானம் காத்தனர்.இப்படியாக கோயில் முற்றத்தில் நெல் மூட்டைகள் குவிந்தன.அப்படி குவிந்த நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லுமாறு அந்த செல்வந்தருக்கு கட்டளை இட்டார் மன்னர்.அன்று உச்சி கால பூஜை தொடங்கும்முன் அந்த நெல் மூட்டைகள் அகற்றப்பட வேண்டும் என்பது அவரது ஆணை.எவ்வளோ முயன்றும் அந்த மூட்டைகளை அங்கிருந்து அகற்ற முடியவில்லை எனவே அந்த செல்வந்தர் நெல் மூட்டைகளை கோவிலுக்கே தானம் செய்து விட்டு சென்றார்.அந்த நெல்லை அரிசியாக்கி பால் பாயசமாக செய்து எல்லா பக்தர்களுக்கும் பிரசாதமாக கொடுத்தார்களாம்.

  மற்றொரு கதையின்படி ஒரு சமயம் ஒரு முனிவர் சென்பகசெரி ராஜாவுடன் சதுரங்கம் விளையாடி தோற்றுப்போனால் அதற்கு பரிசாக நெல் மணிகளைத் தரும்படி கேட்டுக் கொண்டார்.அப்பொழுது அப்படியே தருகிறேன் என்று சம்மதித்த அரசர் பந்தயத்தில் தோற்றுப்போய் மொத்தமாக ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள்  வைத்தும் மொத்த கட்டிடத்தை நிரப்ப முடியாமல்,தன்னிடம் சதுரங்கம் விளையாடுவது சாட்சாத் அந்த கிருஷ்ண பெருமானே என்று உணர்ந்து வேண்டிக் கொள்ள,கிருஷ்ணபிரான் தனக்கு அந்த நெல் மூட்டைகள் வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக அந்த நெல்லை அரிசியாக்கி தினமும் பால் பாயசம் தயாரித்து  நிவேதனம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருமாறு கூறி மறைந்து விட்டார். இதுவே பால் பாயசம் பிரசாதமாக கேட்ட கிருஷ்ணனின் கதை.

   ambalapuzha-sree-krishnaஇந்தக் கோயில் கிழக்கு தரிசனமாக உள்ளது.கோபுர வாசலைத் தொடர்ந்து குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.பிரம்மாண்டமான பிரகாரம் உள்ளது.கருவறையில் இரண்டடிக் கண்ணன் இருபுறமும் துவார பாலகர்கள் நிற்க அருள்பாலிக்கிறார்.கண்ணன் நம்மைப் பார்த்து சிரிப்பது போல் உணரும் உணர்வு மட்டில்லா மகிழ்ச்சி தரும்.

விழாக்கள்:

 ஐப்பசி மாதம் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.மேலும் தை மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடக்கும்.இந்த கிருஷ்ணனிடம் வந்து என்ன வேண்டினாலும் அது கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்……

  இந்த அம்பலப்புழை கிருஷ்ணனை தரிசித்து அந்த பால் பாயச பிரசாதத்தை உண்டு கிருஷ்ணனின் அருளைப் பெறலாம் வாருங்கள்……

The post அம்பலப் புழை கண்ணன் கேட்ட அரிசி பால் பாயசம் appeared first on Swasthiktv.

அகத்தியர் பூஜித்த சென்றாய பெருமாள்

$
0
0

 அகத்தியர் என்றால் நம் நினைவுக்கு வருவது மற்றும் வரவேண்டியது சிவன் தான். ஏனென்றால் அகத்தியர் சிவனின் பக்தர்.அப்படி அவர் வழிபட்ட சிவாலயங்கள் பல உண்டு என்றாலும் அவர் பூஜித்த பெருமாள் கோவில்கள் அபூர்வம் தான்.அப்படி அவர் பூஜித்த பெருமாள் ஆலயங்களுள் ஒன்றுதான் ஒகேனக்கல் அருகில் ஊட்டத்தூர் எனும் ஊரில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலாகும்.இந்தக் கோயில் அகத்தியர் சிவபூஜையோடு பெருமாளையும் வழிபட்டதற்கான சாட்சி ஆகும்.

தல வரலாறு:

  201512150045538147_Walk-kalippatti-Perumal-Temple-Opening-the-door-of-paradise_SECVPFஒரு முறை அகத்தியர் தென் திசை சென்று வந்தார்.அப்பொழுது அவரை பொன்னி நதி வழிமறித்தது.கோபம் கொண்ட அகத்தியர் அந்த நதியை கமண்டலத்தில் அடைத்துவிட்டார்.அதனால் பூலோகத்தில் தண்ணீர் பஞ்சம் வந்தது.அப்பொழுது அனைவரும் சிவபெருமானை வேண்டினர். அப்பொழுது விநாயகப் பெருமானுக்கு ஆணை இட்டார் எம்பெருமான்.அவ்வண்ணமே வினை தீர்க்கும் விக்னேஸ்வரர் காகம் வடிவில் வந்து அந்த கமண்டலத்தைத் தட்டிவிட்டார்.பின்பு அந்தக் கமண்டலத்தில் உள்ள நீர் காவிரியாக விரிந்து பாய்ந்தாள்.அப்பொழுது அகத்தியர் நீரை அடைத்து நிலத்தை வருத்திய பாவம் நீங்க நதிக் கரையில் பல கோயில்களை உருவாக்கி வழிபட்டார்.அப்படி அகத்தியர் ஆராதித்த கோயிகளில் ஒன்று தான் இது.

 பழங்காலத்து மன்னர்களும், சித்தர்களும், மகான்களும் வழிபட்டு வந்த இந்தக் கோயில் நாளடைவில் பொலிவிழந்து புதைந்து போனது.மண்ணில் புதையுண்ட பெருமாள் உரிய காலத்தில் பக்தர்கள் பார்வையில் பட்டதால் இந்தக் கோயில் புதிப்பிக்கப் பட்டது.

 201511240001580097_Walk-Perumal-Temple-Consecrated-Devotees-Vision_SECVPFஇங்கு கருடாழ்வார்,ஆஞ்சநேயர் சன்னதிகளோடு ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராக தரிசனம் அளிக்கிறார், சென்றாய பெருமாள்.சங்கும்,சக்கரமும் கொண்டு அருள்பாலிக்கும் முத்திரையுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள்.வெளிச் சுற்றில் ராகுவும் கேதுவும் உடனிருக்க அவர்களது நடுவே அமர்ந்து அருள்கிறார் விநாயகப் பெருமான்.இப்படி ஒரு வித்யாசமான அமைப்பில் கேதுவும் ராகுவும் இருப்பதால் இங்கு ராகு,கேது தோஷப் பரிகாரங்கள் நடத்திவருகின்றனர்.

  காவிரி பாயும் இந்த திருத்தலம் அந்தக் காவிரியையே தீர்த்தமாக வியாசர் தீர்த்தம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு இங்கு மக்கள் தம் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவதும் ஆகும்.

 நாமும் இந்த சென்றாய பெருமாள் கோவிலுக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று வாழலாமே!!

 

The post அகத்தியர் பூஜித்த சென்றாய பெருமாள் appeared first on Swasthiktv.

மசாலா பூரி

$
0
0

  குழந்தைகளுக்கு விடுமுறை நேரத்தில் அவர்கள் ஏதாவது தின்பண்டங்கள் கேட்பது வழக்கமே.இதோ நொடியில் தயார்செய்து குழந்தைகளை அசத்த உங்களுக்காக ஒரு புதிய முயற்சி.மசாலா பூரி பிடிக்காத குழந்தைகள் இருக்க முடியுமா? அப்படிப் பட்ட மசாலா பூரியை சுவையாக செய்வது எப்படி?வாருங்கள் பார்ப்போம்…..

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு – 1 கப்

மைதா மாவு – 1/4 கப்

கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்

காரப்பொடி – 1/2 ஸ்பூன்

ஜீரகம் – 1 ஸ்பூன்

பெருங்காயப் போடி – 2 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பூரி பொரித்து எடுக்க தேவையான அளவு.

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,மைதா மாவு,ஜீரகம்,பெருங்காயம்,மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,காரப் பொடி இவை அனைத்தையும் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கலந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.பின்பு அந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சிறிய வட்ட பூரிகளாக இட்டுக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான மசாலா பூரி தயார்.இந்த பூரியை டொமாடோ சாஸ் அல்லது தயிர் தொட்டு சாப்பிடலாம். நொடியில் தயாராகும் சுவையான இந்தப் பூரியை செய்து விடுமுறையை இன்னும் சுவாரசியமாக்குங்களேன்!!!

The post மசாலா பூரி appeared first on Swasthiktv.

ஒரே இரவில் காசியிலிருந்து காஞ்சிக்கு வந்த ராமானுஜர்

$
0
0

 

 ஸ்ரீ ராமானுஜர் ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்திற்கும்,மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்.இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அசூரி கேசவ சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதிகளுக்கு கி.பி.1017 ம் ஆண்டு பிறந்தார்.இவர் சிறுவயதிலேயே வேதங்கள் மற்றும் உபநிஷங்கள் மற்றும் அதிலுள்ள தத்துவங்கள் இவற்றை எளிதாக புரிந்து கொண்டார்.தனது 16 வது வயதில் ரக்ஷகாம்பாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட இவர் தன் தந்தையின் மறைவிற்குப் பின் ஸ்ரீபெரும்புதுரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடியேறினார்.

  downloadகாஞ்சீபுரத்தில் அத்வைத தத்துவத்தில் தலைசிறந்த பண்டிதரான பிரகாசர் என்கிற குருவிடம் சிஷ்யராக சேர்ந்தார்.அனைத்து ஞானங்களிலும் தேர்ச்சி பெற்ற தனது குரு பிரகாசர் அளித்த சில அத்வைத விளக்கங்களில் உடன்பாடு ஏற்படாத ராமானுஜர் தன்னுடைய குருவின் பொருந்தாத விளக்கங்களைக் கேட்டு கண்ணீர் விட்டார்.குருவை மிஞ்சும் சீடனாக விளங்கிய ராமானுஜரால் தனக்கு சிறுமை ஏற்படக்கூடாது என்று எண்ணிய பிரகாசர் அவரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்திட திட்டமிட்டார்.அப்படி குருவுடன் காசிக்கு போகும்போது தம்பியின் மூலம் குருவின் திட்டத்தை அறிந்த ராமானுஜர் பெருமாளின் துணையோடு ஒரே இரவில் காசியிலிருந்து காஞ்சிக்கு வந்து சேர்ந்தார்.ராமானுஜர் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட பிரகாசர் சில காலம் கழித்து காஞ்சிக்கு வந்து ராமானுஜரைக் கண்டு திகைத்துப் போனார்.பெருமாள் அருள் கொண்ட ராமானுஜரை இனி நாம் கொல்ல நினைக்கக் கூடாது என்று முடிவு செய்தார்.

 இதற்கிடையே ராமானுஜர் துறவறம் மேற்கொள்ள தன் மனைவியைப் பிரிந்தார்.காஞ்சி பூரணர் எனும் ராமானுஜரின் இளம் வயது நண்பர் தனது குருவான யமுனாசாரியாரை சந்திக்குமாறு கேட்க,ராமானுஜரும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.அவ்வாறு யமுனாசாரியாரிடம் வந்து சேர்ந்த ராமானுஜர் அவரது பூதஉடலை மட்டும் பார்க்க முடிந்தது.ஆனால் அவரது வலது கையில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன.இதனை ஆத்மபூர்வமாக புரிந்து கொண்ட ராமானுஜர் அவரை தனது மானசீக குருவாக ஏற்று அவரது மூன்று லட்சியங்களை நிறைவேற்ற சபதம் எடுத்தார்.

அதாவது:

1)வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத் தத்துவ முறையில் விளக்கம் எழுதுவது.

2)பராசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வது

3)விசிஷ்டாத்வைதத்தை உலகிற்கு எடுத்து சொல்லி அறியாமையில் முடங்கிக் கிடக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீமன் நாராயணனின் அருள் கிடைக்கச் செய்வது.

 ramanuja2இவ்வாறு இந்த மூன்று லட்சியத்தையும் நிறைவேற்றுவேன் என்று ராமானுஜர் அறிவிக்க யமுனாசாரியாரின் மூன்று விரல்களும் ஒன்றன் பின் ஒன்றாக திறந்தது.தனது விவாதத்தின் மூலம் பல இடங்களுக்குச் சென்ற ராமானுஜர் தனது விசிஷ்டாத்வைத தத்துவங்களை அங்குள்ள பண்டிதர்களுக்கு எடுத்துரைத்து வெற்றி பெற்றார்.ராமானுஜரின் குரு பீடத்தை பெரிய நம்பிகள் என அழைக்கப்படும் மகா பூரணர்,திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,திருவரங்கப் பெருமாள் அரையர்,திருமலை ஆண்டான் எனப்படும் மாலாதரர் என்ற ஐவரும் அலங்கரித்தனர்.ராமானுஜர் ஜாதி ஏற்றத்தாழ்வை கடுமையாக எதிர்த்தவர்.தனது மனைவியின் ஜாதி ஏற்றத்தாழ்வே தம்முடைய துறவறத்திற்கு காரணம் என்றார்.ராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமல்ல பெரிய நிர்வாகியும் கூட.இவர் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம் கோவிலின் நிரவகத்தை ஏற்று அந்தக் கோவிலை சீர் படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்தினார்.

  120 வயது வரை வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜர் கி.பி 1137 ம் ஆண்டு மண்ணுலகை விட்டு இறைவனடி சேர்ந்தார்.ஸ்ரீ ராமானுஜர் வேதாந்த சங்கிரகம்,ஸ்ரீ பாஷ்யம்,கீதா பாஷ்யம் (பகவத் கீதையின் விளக்கம்),வேதாந்த தீபம்,வேதாந்த சாரம்,ஸ்ரீ ரங்க காத்யம்,நித்ய கிரந்தம் போன்ற நூல்கள் பலவற்றை எழுதினார்.

ராமானுஜருக்கு தனி கோவில்:

 ramanujaஇந்தியாவில் முதன்முறையாக சேலத்தில் ஸ்ரீபகவத் ராமானுஜருக்கு ரூ 6 கோடி மதிப்பில் தனி கோயில் உருவாகி வருகிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜாதி மத வேற்றுமையை ஒழிக்க அனைத்து மக்களும் ஆலய வழிபாடு செய்ய முற்பட்டவர் ராமானுஜர்.இப்படிப்பட்ட மஹானின் ஆயரமாவது பிறந்தநாள் வரும் 2017 ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது. முதல்முறையாக ராமானுஜருக்கு சேலத்தில் உள்ள எருமாபாளையத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் ரூ 6 கோடி  மதிப்பில் 85 அடி உயர ராஜகோபுரத்துடன் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.அதில் 74 மடாதிபதிகளைக் குறிக்கும் 74 தூண்கள் ராமனிஜர் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் சிற்பங்களும் அமைக்கப்படுகிறது. 2017 ம் ஆண்டு நடைபெற உள்ள ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவில் வெகு விமரிசையாக கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஒரே இரவில் காசியிலிருந்து காஞ்சிக்கு வந்த ராமானுஜர் appeared first on Swasthiktv.


பாவம் தீர்க்கும்  வெள்ளியங்கிரி  பஞ்சலிங்கஈஸ்வரர்

$
0
0

 கோயம்பத்தூர் அடுத்துள்ள தென்கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ‘பஞ்சலிங்கங்களையும் தரிசனம் செய்தால் பாவம் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை”இஷா தியான மண்டபத்தில் இருந்து சுமார் ஜந்து கி.மீ. தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளகோவிலை சென்றடையலாம். மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர் கோவில் உள்ளது. அம்மன் திருநாமம் சௌந்தரிய நாயகி. கோவில் பின்புறம் இருந்து மலை கோவில் செல்லும் பாதைய தொடங்குகிறது. தென் கயிலை என்று அறியப்படும் வெள்ளியங்கிரிமலை மேல்இயற்கையாக அமைந்த குகைக்குள் பஞ்சலிங்கம் உள்ளது. அடிவாரத்தில் உள்ள கோவில் 6 கி.மீ. தூரம் செங்குத்தான மலையில் ஏறி பஞ்சலிங்கதரிசனம் செய்யலாம் ஏழுமலைகள் ஏறவேண்டும்.

  velliangiriமிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகள் நிறைந்த மலை இது. இயற்கைசுனைகள் நிறைந்த மலை. பொதுவாக பெளர்ணமி இரவில் தான் வெள்ளியங்கிரி மலை ஏறுவர்கள் பங்குனி உத்திரம், சித்திர பெளர்ணமி, மகாசிவராத்திரி போன்ற சமயங்களில் அதிக அளவில் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்குயாத்திரை செல்வார்கள், வடமாநிலம் மக்கள் அமர்நாத் யாத்திரைக்கு நிகராக வெள்ளியங்கிரி பஞ்சலிங்கதரிசனத்தையும் புனிதமாக கருதுகிறர்கள்.வெள்ளியங்கிரி மலை அடிவாரம் வெள்ளியங்கிரி கோவில் நீண்டவிசாலமான பிரகாரம், வித்தியாசமான வடிவில் நவக்கிரக சன்னதி, வழக்கமான மலைப்பாதை ஆரம்பத்தில் காணப்படும் ஒருவளைவு, செங்குத்தாக ஆரம்பிக்கும்சீரான படிக்கட்டுகள் கட்டெனத் தெரியும்.

 94_2கோயம்புத்தூரிலிருந்து 40 கீமி தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சிமலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பணியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத்தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சுழி, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் ‘வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய இம்மலை ஏழுசிகரங்களைக் கொண்டுள்ளது. ஜந்தரை கிலே மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயிலும்,  பாம்பாட்டி சுனை,  கைதட்டிசுனை, சீதைவனம், அர்ச்சுனன்வில், பீமன்களி உருண்டை, ஆண்டிசுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். இரவில், மலையில் காட்டுயானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை  மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள்  அங்கு இருப்பதை தவிர்க்கின்றன. கொங்கு மண்டலத்தில் சிவன் வசிக்கும் கைலாசம் என்று வெள்ளியங்கிரியை சொல்லுவார்கள். ஏழுமலைகள், வணன்களால் சூழப்பட்டபகுதியாகும்.

Forest-stream1மூங்கில் தடி மிகப்பிரபலம் வேலைப்பாடுகளுடன். இருக்கும். வெள்ளியங்கிரி தடி என்று சொன்னால் கொங்கதேசம் முழுக்கவே தெரியும். படியேறதுவங்கியதில் இருந்தே பல சாமியார்களைக் காணமுடியும். துவக்கத்தில் படி வசதிஇருக்கும், போகப்போகபடிகள் குறைந்து  கரடுமுரடான பாதைகள், பாறைகள் மீது கூட சிறிதுதூரம் பயணம் கொள்ள வேண்டியிருக்கும். மூங்கில் தடிஉதவும். மீண்டும் சுலபமான நடைபாதை போன்ற பகுதிகள் வரும். எப்போதும் செங்குத்தாகவே இராது. செல்லும் வழியில் இயற்கையான ஊற்றுக்கள் மூலம் வரும் நீர் மூங்கில் தப்பைகள் கொண்டு வடிந்து கொண்டிருக்கும். அந்த நீர்தேன்அமிர்தம் போல  இருக்கும். அருவிகள், பறவைகளின் ஒலிகள், வனச்சூழல் நம்முள்  இனம்புரியாத மாற்றத்தை ஏற்படுத்தும். செல்லச் செல்ல கோவையின் அழகு, வனங்களின் அழகு, மனதை கொள்ளை கொள்ளும். வழியில் ஒரே ஒரு கடை மட்டுமே உண்டு. கொஞ்சம் உணவுப் பண்டங்கள் இருக்கும். மூன்றாவது நான்காவது மலை ஏறும்போதே, ஏண்டா ஏறதுவங்கினோம் என்றிருக்கும். ஜந்தாவதுமலையில் ஒரு சுனை உண்டு, ஐஸ் தண்ணி என்றுதான் சொல்லணும். அதில் குளித்துத் தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்லணும். குளிராக இருந்தாலும் ஒரு முறை முழ்கி எழுந்தாலே மறு ஜென்மம் எடுத்ததுபோல, ஆத்ம சுத்தி,  பாரமற்றமனம், புத்துணர்ச்சியான உடல் என்று ஆனந்தத்தை உணரமுடியும். அவ்வளவு தூரம் ஏறிய களைப்பு சிறிது கூட இராது. திருநீறால் ஆன மலை என்று ஒரு பகுதி வரும். அதன் மண் தான்  வெள்ளியங்கிரி திருநீறு என்பவர். அங்கிருந்து பீமன்களியுருண்டை என்ற ஒரு பெரும்பாறையை காணலாம். வனவாசத்தின் போது பாண்டவர்கள்  இங்கே தங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம் : கோவையில் இருந்து 40 கீ.மி தூரத்தில் உள்ளது

மலைக்கோயில் தொடர்புக்கு : 91.422-2615258, 2300238.

செய்தி : ப.பரசுராமன்

படங்கள் : வசந்த்

The post பாவம் தீர்க்கும்  வெள்ளியங்கிரி  பஞ்சலிங்கஈஸ்வரர் appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 12/05/2016

முனிவர் வேடத்தில் “சித்தரை வரவேற்ற” சிவபெருமான் !

$
0
0

“புல்லாகி, பூடாய், புழுவாய் மரமாகி
பறவையாய் பாம்பாய் பல்விருகமாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி, முனிவராய்,தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்“பெருமான்”

  திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்துள்ள இஞ்சிமேடு பெரியமலை கிராமத்தில் முனிவர் வேடத்தில் சித்தரை வரவேற்று தொடர்ந்து விளக்கேற்ற சொன்னார் சிவபெருமான். நெய்தீப முனிவர் என்று பின்னாளில் போற்றப்பட்ட திரு.இராஜா என்கிற இராஜா சுவாமிகள் சிவத் தொண்டனாக 16 வயதிலிருந்து இஞ்சிமேடு பெரியமலை சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வந்தார். இவருடைய பார்வையில் பறவைகளும், தாவரங்களும்,மரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றுதான். உயிர்களிடத்தில் இவர் வைத்த நேசம் ஓப்பற்றது. தாம் எந்த மாதிரி உணவு உண்பாரோ அதே உணவை பணியாட்களுக்கும் பரிமாறவேண்டும் என்பார். இவர் மக்களின் பிணித் தீர்க்கும் சித்தராவார். பின்னர் இவர் 96 வயதில் ஜீவ சமாதி அடைந்தார்.

 iஇவருடைய மூதாதையர்கள் இவர் பிறந்த இஞ்சிமேட்டு கிராம நாட்டாண்மை பொறுப்பை ஏற்று சிறப்பாக கிராம நிர்வாகம் செய்து வந்தவர்கள். முற்பிறப்பின் பயனால் திரு.இராஜா அவர்கள் பொன்னன் என்ற திருப்பெயரோடு, பரசுராமன்- பச்சையம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாக 1900 ஆம் ஆண்டு பிறந்தார். இராஜா சுவாமிகளின் சந்ததியினர் தெய்வ வழிபாட்டில் அதிக நாட்டம் கொண்டு, உமா மகேசுவரியின் திருப்பெயர்களில் ஓன்றான மாரியம்மனை வழிபட்டு வந்தனர். பரம்பரைத் தொழிலான பம்பை, உடுக்கை வர்ணிப்பதைச் செய்து தொண்டாற்றி திருவிழாக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தவராவார்கள்.

  திரு.இராஜா சுவாமிகள் இரண்டாம் வகுப்பு வரையில் தெருத் திண்ணையில் படித்து, மணலில் எழுதி படிக்க கற்றுக்கொண்டவர், தமிழ் இலக்கியங்களில் அதிக நாட்டம் கொண்டதோடு பக்தி பனுவல்களை மனப்பாடம் செய்து அப்படியே மெய்யுருக பாடுவதிலும் வல்லவராக திகழ்ந்தவர். நாடகங்களில் நடிப்பவர்களுக்கு இவரே அவர்கள் சார்பில் பாடல்கள் பாடி பொதுமக்களை மகிழ்வித்தவர். தாமும் பக்தி நாடகங்களில் நடித்தவர். தம் தந்தையாருக்கு விவசாயத் தொழிலுக்கு முழுவதும் உறுதுணையாக நின்று உழைத்தவர். தமது தாயார் பச்சையம்மாளின் அன்பை மிகவும் கவர்ந்தவர். குடும்பத்தில் முதல் பிள்ளையாக எழுவரோடு பிறந்த இவரின் பொறுப்புகளும் கடமைகளும் அதிகமாகவே இருந்தன.

தந்தைப்பட்ட கடன் தனயனால் தீர்ந்தது :-

  gதம் தந்தை பரசுராமன் பட்ட கடனைக்கட்ட முடியாததால் தம் சொந்த நிலத்திலேயே தந்தையாரோடு தம் குடும்பத்தார் அனைவரும் குத்தகை அடிப்படையில் பயிர் செய்து கடனை அடைக்க ஓப்புக்கொண்டதன் பேரில் கடனை எப்படியாகிளும் ஆடைத்து விட வேண்டும் ஏன்ற காரணத்தினால் தம் தம்பிகளையும், குத்தகை அடிப்படையில் அந்தணர் நிலங்களில் பயிர் செய்ய அனுப்பினார். கடவுள் அருளால் நல்ல விளைச்சல் விளைந்தும், ஆறில் ஓரு பங்கை முறைப்படி கொடுக்காமல் அந்தணர் செய்த சதியால் தமக்கு வரவேண்டிய பங்கு வரவில்லை என்று நொந்த இராஜா சுவாமிகள் இருந்த சூழ்நிலையில் அந்தணர்களையும் எதிர்க்க முடியாமல், கடனை அடைக்க வழி கிடைத்தும், விதி வசத்தால், அடைக்க முடியவில்லையே என்று நொந்து செய்வதறியாது திகைத்தார். அப்போது அவருடைய கண்ணிலே வெட்ட வெளியிலே மலை மீது நின்ற சிவலிங்கம் தோன்றவே, தம் குறைகளை அச்சிவபிரானிடமே முறையிடவேண்டும் என்ற நோக்கோடு பூசைப் பொருட்களை வாங்கி ஓரு துண்டில் முடிந்து, தோள் மீது போட்டுக் கொண்டு பெரிய மலைக்குச் சென்றார். அப்போது உலக இரட்சகர், அடியார்களை ஆதரிக்கும் அருட்கடவுள் முனிவர் வேடம் தாங்கி, மலையடிவாரத்திலே ஈராஜாவை வரவேற்றார்.

   இராஜா, அண்ணலின் முகம் பார்த்தவுடனேயே, “சிவனே மகானாக வந்தாரோ” என்று உள்ளத்திலே நினைத்து அவர் திருப்பாதங்களிலே பணிந்து வணங்கிட, முனிவர் அவரைப்பார்த்து “என்ன இவ்வளவு தூரம், ஏன் ஏதோ இழந்ததைப் போல் பதற்றமாக இருக்கிறாய்; போய் மலையில் உள்ள தீர்த்தம் எடுத்து நீயும் குளித்து விட்டு ; சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் செய்! நான் பிறகு வருகிறேன்” என்று கூறி விட்டு சென்றார்.

  k இராஜா அப்படியே செய்த பின், முனிவர் வேடம் தாங்கிய சிவனார், “ராஜா நீ வாங்கி வந்துள்ள கற்பூரத்தை ஏற்றி, தேங்காய் உடைத்து, கண்ணை மூடிக் கொண்டு என்னென்னவெல்லாம் முறையீடு செய்ய வந்தாயோ, அதை தூய மனதுடன் முறையீடு செய் !” என்று அருள்வழி காட்டினார். ராஜாவும் அப்படியே செய்ய உடைத்த தேங்காயில், பூ இருப்பதும், சரி பாதியாக தேங்காய் உடைந்திருப்பதும், பார்த்து இறைவனார் “ராஜா நீ வேண்டியது அப்படியே நடக்கும்! நல்ல சகுனங்களை இறைவன் உனக்கு அருள்பாலித்துள்ளார் ! நீ என்ன வேண்டினாய்? ” என்று எல்லாம் தெரிந்த இறைவனார் ஓன்றும் தெரியாததுபோல் தன் பக்தனிடம் கேட்டார்!

 பக்தனும், சுவாமி நான் விவசாயி ! நிலங்களைப் பறிகொடுத்து விட்டேன்! என் நிலத்திலேயே குத்தகை செய்கிறேன் இந்த நிலை மாறவேண்டும்! என் சொந்த காலிலேயே நிற்க வேண்டும்! இது நிறைவேறினால் இந்த மலை மீது சுமார் 500 ஆண்டு காலமாக வெட்டவெளியில் பூசையின்றி நிற்கும் எம்பெருமானின் சிவலிங்கத்தைச் சுற்றி கோயில் கட்ட முயல்வேன்! “என்னால் முடியாவிட்டாலும், எனக்கு பிறக்கும் பிள்ளைகள் மூலமாகிலும் திருக்கோயில் கட்டும் பாக்கியத்தை நீயே அருள வேண்டும் என்று வேண்டினேன்!” என்றார்.

    இறைவனும் “நல்லது ; நீ நினைத்து வேண்டியபடி உன் வாழ்வில் நல்லதே நடக்கும் ; இறைவன் என்றும் துணையிருப்பான் ! நீ வேண்டியது அப்படியே நடக்க வேண்டும் என்றால், “இனி வாழ்நாள் முழுதும் சத்தியமே பேசவேண்டும்; நீ எங்கிருந்தாலும், மலையிருக்கும் இத்திசையை நோக்கியேனும் வணங்கவேண்டும்! ஆண்டிற்கு ஓருமுறை கார்த்திகைத் திருநாள் பௌர்ணமியன்று, விரதமிருந்து, ஓரு முறை உன்னால் முடிந்த அளவிற்குப் பசுநெய் வாங்கி, உன் உயிர் உள்ளவரையில் தப்பாமல் தீபம் ஏற்றி வரவேண்டும்!” என்றும் அருள் புரிந்தார்.

“பைத்தியமே” என்று எட்டி உதைத்த ஆங்கிலேய துரை :-
இராஜா தன் நிலங்களை மீட்க வேண்டுமானால், இங்கு கூலிக்கு வேலை செய்து கடனை அடைக்க முடியாது என்று முடிவு செய்து, மலேசியா நாட்டிற்கு சென்ற கப்பலிலே வேலைக்குச் சென்ற மக்களுடன் தானும் ஏறி சென்றுவிட்டார். அங்கு “பிணாங்கு” என்ற பகுதியிலே கணக்கராகப் பணியில் அமர்த்தப்பட்டார்! ஆங்கிலேய ஆட்சியின் கீழ்வரும் இம்மலாயப் பகுதியில் ஆங்கிலேய ஆட்சியாளர்,இராஜா தினமும் தன் வேலையை தொடங்கும்முன் இந்திய நாட்டின் திசை நோக்கி வணங்குவதை கண்டு கேலி புரிவார்! உங்கள் கடவுள் என்னச் செய்வான் என்று ஏளனம் செய்வார்!

  இராஜா, “நான் வழிப்படும் எம்பெருமானைப் பற்றி ஏதும் தவறாக பேசாதே! என்னை எப்படி யாகிலும் பேசு; தூற்று;” என்று கெஞ்சி கேட்பார்! “அடே இராஜா போடா பைத்தியமே” என்று அந்த திசை நோக்கி உதைப்பதுபோல் காலை உதைத்து காட்டினான்!. இராஜாவும் மிக நொந்து, “சுவாமி இன்றைய தினத்திலிருந்து எண்ணி 15 நாட்களில் நீயே அழைத்து மன்னிப்பு கேட்கும்படியானச் செயலை என் இறைவன் உன் வாழ்வில் நடத்திக் காட்டுவான்!” இது என் ஐயன் மேல் ஆணை என்றார்!.

  fஅதே போல் ஆங்கிலேய துரைச் செல்லும் குதிரை ஓரு நாள் எதையோ கண்டு மிரண்டு அதன் மீது அமர்ந்திருந்த துரை கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொண்டான்! அதன்பின் அவன் தன் தவறை உணர்ந்து சிவபெருமானின் மகிமை அறிந்து, தப்பை ஓப்புக் கொண்டு, இராஜா இழந்த நிலங்களை மீட்க பொருளுதவி செய்து தாயகம் திரும்ப ஏற்பாடு செய்தார்!

  இராஜா ஊருக்குத் திரும்பிய பின், தான் கொண்டு வந்த பணத்தை கொடுத்து நிலங்களை மீட்டு, பழையபடி தமது தம்பிமார்களுடன், சொந்தமாக பயிர் செய்ய ஆரம்பித்தார்.அதன் பின் தொடர்ந்து 70 ஆண்டுகள் இறைவனிடம் வேண்டி கொண்டபடியே, செவ்வனே மலை மீது “நெய்தீபம்” ஏற்றி வந்தார். அதனால் இவர் “நெய்தீப முனிவர்” என்றும், “பெரிய அண்ணன்” என்றும் ஊர்மக்களால் போற்றப்பட்டார்.

  இறைவன் திருவருளால், அவரது பிள்ளைகளும் அவர் வேண்டி கொண்டபடியே படித்து பெரிய உத்தியோகத்தில் அமர்ந்தனர். எனவே அவர் கேட்டுத் கொண்டதற்கு இணங்க, அவரது காலத்திலேயே கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழாவை அவரின் இளையமகன் அருட்செல்வன் இரா.பெருமாள் இ.ஆ.ப., முன் நின்று செய்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் 30 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி 2012-ல் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அடிக்கல் நாட்டிய 6 மாதங்களிலே, திருப்பணி தொடங்கும் முன்பே, தமது 96வது வயதில் இராஜா சுவாமிகள் சிவன் திருவடிகளைச் சேர்ந்தார்!

நெய்தீப முனிவரின் ஜீவ சமாதி:-
tஅவர் உயிரோடு இருந்த காலத்திலேயே தான் இறந்த பிறகு தன்னை எரிக்காமல் சித்தர்கள் மரபுப்படி மண்ணில் புதைத்து சமாதி எழுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். இறைவன் திருவருள் கிடைக்கப் பெற்றிருந்தவர் என்ற காரணத்தால், கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஓருவரது உயிர் பிரிந்த பிறகு மண்ணிலே பிறந்த இந்த உடலை மண்ணிற்கே இரையாக்க வேண்டும் என்ற சித்தர்கள் கொள்கையை அறிந்திருந்தார். ஆனாலும், அவர் இறந்தபோது, அவர் தமது பெற்றோருக்கு மூத்த மகனாக இருந்தால், ஊர் வழக்கப்படி அவரது உடலை மண்ணில் புதைக்காமல் எரிக்க வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் வற்புறுத்தினர். சித்தர்கள் மரபுப்படி அவரை மண்ணில் புதைத்து சமாதி எழுப்ப வேண்டும் என்று அவரது இளையமகன் அருட்செல்வர் இரா.பெருமாள் தீர்மானித்தார். பின்னர் நெய்தீப முனிவருக்கு பெரியமலை அடிவாரத்தில் திருமணிச்சேறை உடையார் ஆலயத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்கு தெரிகின்றதுபோல மண்ணில் புதைத்து கிரானைட் கற்களால் சமாதி கட்டப்பட்டது. இப்போதும் அந்த சமாதியை, கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் வணங்கிவிட்டு செல்கின்றனர்.

அமைவிடம் :-
அருள்மிகு.திருமணி நாயகி உடன் திருமணிச்சேறை உடையார் அறக்கட்டளை,
இஞ்சிமேடு. வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

தொடர்புக்கு :-
தவத்திரு சிவயோகி. இரா.பெருமாள் சுவாமிகள், இ.ஆ.ப.(ஒய்வு)
செல் – 09844224989, 09739301234

www.injimedushivatemple.com

செய்தி : ப.பரசுராமன்
படங்கள் : ப.வசந்த்

The post முனிவர் வேடத்தில் “சித்தரை வரவேற்ற” சிவபெருமான் ! appeared first on Swasthiktv.

நாவல் பழ அல்வா

$
0
0

நண்பர்களே! பொதுவாக காசி அல்வா,காரட் அல்வா,அசோகா அல்வா என்று தான் செய்திருப்போம்.இதோ உங்களுக்காக ஒரு புது வகை நாவல் பழ அல்வா. செய்து பாப்போம் வாருங்களேன்!!

தேவையான பொருட்கள்:

நாவல் பழம் – 200 கிராம்(கொட்டை நீக்கியது)

வெல்லம் – 200 கிராம்

நெய் – 100 கிராம்

முந்திரி – 25 கிராம்

பாதாம் – 25 கிராம்

உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

ஒரு கடாயில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பாகு பதத்தில் கிளறவும்.பின்பு நாவல்பழங்களை சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.இப்பொழுது மற்றொரு கடாயில் பாதாம் மற்றும் முந்திரியை தனித் தனியாக வறுத்து அந்த அல்வாவில் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான நாவல் பழ அல்வா தயார்.

The post நாவல் பழ அல்வா appeared first on Swasthiktv.

சீதளாதேவி மாரியம்மன் கோயில் வேம்பின் கசப்பு தேன் போல் இனிக்கும்

$
0
0

 திருவாரூர் சக்திபுரத்தில் உள்ளது சீதளாதேவி மாரியம்மன் கோயில்.இங்கு சென்று வழிபடும் பக்தர்களின் உடல் வெப்பத்தோடு, மனவெப்பத்தையும் போக்குகிறாள் இந்த அம்மன்.”சீதளம்”என்றால் குளிர்ச்சி,சந்தனம் என்று பொருள்.இப்படி வெப்பத்தைத் தனிக்கும் இந்த அம்மனுக்கு ஆதி பராசக்தி,கமலாம்பாள் என வேறு பெயர்களும் உண்டு.

 இத்தகைய சக்தி வாய்ந்த அம்மனின் அருளால் ஒரு அதிசயம் நடக்கிறது.என்ன என்று தானே யோசிக்கிறீர்கள்?அது வேறொன்றுமில்லை,இந்தக் கோயிலின் வாசலில் ஒரு வேப்பமரம் இருக்கிறது.அந்த வேப்பமரத்தின் இலை இனிக்கும் என்று சொன்னால் நம்பமுடியுமா? முடியாது. ஆனால் இது உண்மை.அந்த மரத்தின் வேப்பிலையை கோவிலுக்கு வெளியே சாப்பிட்டால் கசக்கும்.அதே இலையை அம்மன் கோவிலுக்கு உள்ளே எடுத்துச் சென்று சாப்பிட தேனாக இனிக்கிறது.இது தான் இந்த அம்மனின் சக்தி.பலவகை ஆராய்ச்சிகள் செய்தும் கண்டறிய முடியாத இந்த அதிசயத்தை அம்மனவள் அருளென்று தான் சொல்ல முடியும்.

 images பரந்து விரிந்துள்ள வெட்டவெளியில் வேப்பமரத்து நிழலில் கோபுரம் மிக அழகாக காட்சி அளிக்கிறது.அது மட்டுமா?கோவிலின் முன்புறம் பூத்துக் குலுங்கும் நாகலிங்க மரம்.அந்த மரத்தின் கீழே வீற்றிருக்கும் முதன்மைக் கடவுளான விநாயாகர். அவருக்கு நாக லிங்க விநாயகர் என்றே பெயராம்.ஆஞ்சநேயருக்கும் அங்கே கோயில் உள்ளது.சன்னதியில் அம்மன் இரு உருவங்களாக காட்சியளிக்கிறாள்.கீழே அமர்ந்திருக்கும் சீதளாதேவி மற்றும் அவளுக்குப் பின்புறம் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் “பெரிய சக்தி அம்மன்” இவளை “பெரிய மகமாயி” என்று அழைக்கிறார்கள்.

விழாக்கள்:

 இங்கு நடக்கும் நவராத்திரி நெய்குள வழிபாடு மிகவும் சிறந்தது.நவராத்திரி தினத்தின் முதல் நாளன்று சன்னதிக்கு வெளியே உள்ள மண்டபத்தின் நடுவே நீள் சதுரத்தில் 7அடிக்கு 3அடி அளவில் பெரிய தட்டுப் பாத்திரம் வைக்கப்படுகிறது.அந்த பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டு அதன் நடுவே குளம் போல பள்ளம் அமைத்து அதன் நடுவே நெய்விட்டு நிரப்புகிறார்கள்.அப்படி ஊற்றப்பட்ட நெய்யில் அம்மனின் முகம் அழகாக பிரதிபலிக்கிறது.பக்தர்கள் அனைவரும் அம்மனை வழிபட பின்பு அந்த சர்க்கரைப் பொங்கலை பிரசாதமாக வழங்குகிறார்கள்.

  இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு வழிபாடு காசு கட்டும் வழிபாடு.நீங்கள் என்ன நினைத்து பிரார்த்திக்கிறீர்களோ அதை நினைத்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து அதை அங்குள்ள அர்ச்சகரிடம் கொடுத்து அதை அம்மனின் திருக்கரங்களில் கட்டச் சொல்கிறார்கள்.இப்படிச் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் வெகு விரைவில் நடந்தேறும்.பின்பு அம்மனின் கைகளில் நீங்கள் முடிந்த காசை அவிழ்த்து உண்டியலில் போட்டுவிட வேண்டும்.இதுதான் அந்த வழிபாடு.

   திருமணம் நடக்காத பலரும் வரம் கேட்டு இங்கு வந்து வேண்டி அதன் பின் திருமணம் முடிய தம்பதி சமேதமாக வந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கிறார்கள்.அம்மனைத் தவிர காத்தவராயன்,தொட்டியத்து சின்னான், கருப்பண்ணசாமி,கருப்பாயி அம்மன் போன்ற கிராமிய தெய்வங்களும் உள்பிரகாரத்தில் உள்ளனர்.கோவிலின் இடதுபுறம் திருக்குளம் மற்றும் வலதுபுறம் பாம்புப் புற்றும் உள்ளது.

வழிபாடுகள்:

  சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை ஆண்டு முழுவதும் இங்கே விசேஷ நாட்கள்தான்.திருவிழாக்கள் கலைகட்டும்.பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு பிரம்மாண்ட முறையில் அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும்.ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனையும், விளக்கு பூஜையும் விசேஷ வழிபாடாக நடைபெறுகிறது.புரட்டாசியில் நவராத்திரி கொலு வைபவமும்,கார்த்திகையில் தீப வழிபாடும்,மார்கழியில் திருப்பள்ளி எழுச்சியும் நடக்கிறது.வைகாசித் திருவிழாவின் போது அம்பாள் அன்னவாகனத்தில் பவனி வருகிறாள்.அப்பொழுது பக்தர்கள் மாலை அணிந்து மஞ்சள் ஆடை உடுத்தி பத்து நாட்களும் கோவிலில் தங்கி விரதமிருந்து வருகிறார்கள்.அப்படி பிரார்த்தனை செய்தவர்கள் கையில் கங்கணம் கட்டி,தீக்குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.தீமிதித்து,தீயாகச் சுட்ட வினைகளிலிருந்து விடுபட பக்தர்களை அருளும் வகையில் அவர்களின் மனம் குளிர தனது அருளை மாரியாகப் பொழிகிறாள் சீதளாதேவி.

அமைந்துள்ள இடம்:

  திருவாரூரில் உள்ள காகிதக்கார தெருவின் மேற்குப் பகுதியில் சக்திபுரம் சீதளாதேவி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:

காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை.

The post சீதளாதேவி மாரியம்மன் கோயில் வேம்பின் கசப்பு தேன் போல் இனிக்கும் appeared first on Swasthiktv.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>