Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

சிவநாயன்மார் அறுபது மூவரின் சுருக்க வரலாறு

$
0
0

சிவநாயன்மார் அறுபது மூவரின் சுருக்க வரலாறு

1.திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான்அருளால் இளமை பெற்றார்.

2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanar சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanar நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanar தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.  இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5.விறல்மிண்டர்/Viralminda Nayanar சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.

 6.அமர்நீதியார்/Amaraneedi Nayanar சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்

7.எறிபத்தர்/Eripatha Nayanar சிவபக்தரின் பூஜைக்குரிய  பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanar கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர்/Kannappa Nayanar பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanar சாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில்வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காகதூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanar மறுநாள், தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகியகூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanar சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13.ஆனாயர்/Anaya Nayanar புல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி/Murthi Nayanar சந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்

15.முருகர்/MurugaNayanar வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தைஓதிக்கொண்டேயிருப்பார்.

16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanar கழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanar தாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை  வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanar சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanarசிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர்.  பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar தேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்/Kulacchirai Nayanar பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar சுந்தரருடன் கயிலை  சென்றவர்.

23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர்.  சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர்.  அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanar திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.

25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.

26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

27.திருஞானசம்பந்தர்/Tirugnana Sambandar ஞானக் குழந்தை.  பல அற்புதங்கள் செய்தவர்.  பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர்.  அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர்.  சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar இறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்/Tiru Mula  Nayanar திருமந்திரம் பாடியவர்.  நந்தி எம்பெருமானின் மாணாக்கர்.  சித்தர்.

30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar கண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.

31.மூர்க்கர்/Murkha Nayanar சூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்

32.சோமாசிமாறர்/Somasira Nayanar நிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்/Sakkiya  Nayanar அன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.

34.சிறப்புலி/Sirappuli Nayanar சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanar பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

37.கணநாதர்/Gananatha Nayanar சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.

38.கூற்றுவர்/Kootruva Nayanar நாடாள  முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar எறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.

40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.

41.அதிபத்தர்/Adipattha Nayanar வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை  நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்/Kalikamba Nayanar முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்/Kalia Nayanar வறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி/Satti Nayanar சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar மன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்/Kanampulla Nayanar விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்

47.காரி/Kari Nayanar காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara  Nayanar திருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்/Vayilar Nayanar இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப  வாழ்வுபெற்றார்.

50.முனையடுவார்/Munaiyaduvar Nayanar அரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி/Idangazhi Nayanar அரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை/Seruthunai Nayanar சிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar வறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.

55.கோட்புலி/Kotpuli Nayanar சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்/Pusalar Nayanar பொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில்  பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar சைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.  நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்/Nesa Nayanar எப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்/Sadaya Nayanar சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானியார்/Isaijnaniyar சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar தேவாரம் பாடியவர்.  சிவ பெருமானின் தோழர்.

The post சிவநாயன்மார் அறுபது மூவரின் சுருக்க வரலாறு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Daily Raasi Palan 09-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 09-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

 

 

The post Daily Raasi Palan 09-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

மந்திரங்கள் –எல்லாவற்றையும் அறிய, உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல்

$
0
0

மந்திரங்கள் – ஏழு அங்கங்கள்

மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:

1.ரிஷி

2. சந்தஸ்

3. தேவதை

4. பீஜம்

5. சக்தி

6. கீலகம்

7.அங்க நியாசம்

என்பன.

  1. ரிஷி

மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும்எ ன்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.

நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.

  1. சந்தஸ்

சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.

  1. தேவதை

தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதா நியாசம்.

  1. பீஜம்

மிகச் சிறிய ஆலம்விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்துக்குப் பீஜம் என்பா். இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.

  1. சக்தி

அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.

  1. கீலகம்

சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.

மந்திரங்களின் ஆற்றல்

மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம். பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.

இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா். இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம் என்று குறிப்பிட்டனா்.

மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா். இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்: காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்: சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள். ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.

மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை. விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations)  நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.

இறையருளைப் பெற

இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய வழி முறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன. மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள். எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை

1. தூல வடிவம்

2. சூக்கும வடிவம்

3. அதி சூக்கும வடிவம்.

அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம். முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு.  எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.

The post மந்திரங்கள் – எல்லாவற்றையும் அறிய, உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சகல செல்வங்களையும் அருளும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

$
0
0

சகல செல்வங்களையும் அருளும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்

மஹாலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

வித்யா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

ஸந்தான லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

காருண்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

சௌபாக்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

தனலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

வீரலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

தான்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும் தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன் . நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்!!

The post சகல செல்வங்களையும் அருளும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 10-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 10-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

 

The post Daily Raasi Palan 10-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்க!

$
0
0

முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்க!

துளசியின் சக்தி

 இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது. துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. மேலும் நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.

 துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

 அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும். பூஜையின் போது துளசியை சமர்ப்பித்தால் பக்தி அதிகரிக்கும். துளசிச்செடியின் அடியில் ஸ்ரீ கிருஷ்ணரை வைத்துப் பூஜித்தால் மோட்ச சாம்ராஜ்யம் கிட்டும். துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும்.

கொடும் பாவங்கள் செய்தவனாயினும், அந்திமக் காலத்தில் துளசித் தீர்த்தம் அருந்தி, துளசித் தளத்தை தலையில் தரித்துப் பின் உயிர் நீக்க நேர்ந்தால், கட்டாயம் முக்தி அடைகிறான். துளசித்தளம், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மட்டுமின்றி சிவபெருமானையும் பூஜிக்க ஏற்றது.  விநாயகரை துளசியால் பூஜிக்கலாகாது. விரதத்தில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தன்று உபவாசம் இருப்பவர்கள், ஏழு முறை துளசி இலையைச் சாப்பிடலாம். மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை முடிக்க வேண்டும்.

  ஏகாதசி அன்று துளசி பறிக்கக்கூடாது. திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகியப நாட்களிலும், எண்ணை தேய்த்துக் கொண்டும் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும். துளசியைப் பறித்து மூன்று நாள் வரை உபயோகிக்கலாம். துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.

  மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித் தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது. சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி’ என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.

  நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள். நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து, வெற்றி பெறுவோம்!

The post முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்க! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்க!

$
0
0

சனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்கும் கோமாதா வழிபாடு!

‘பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது’ என்பார்கள். அந்த அளவிற்கு பசு இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு ‘கோமாதா’  என்ற சிறப்பான பெயரும் உண்டு. ‘கோ’ என்னும் சொல் அரசன் மற்றும் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். அப்படிக் கடவுளுக்கு நிகரான  கோமாதாவின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

கோமாதா

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது  நந்தா, சுசீலை, பத்திரை, சுரபி, சுமனை என்னும் ஐந்து பசுக்கள் தோன்றின. இவற்றின் சந்ததிகளே இன்றளவும் கோமாதாவாக  நமக்குச் சகல செல்வங்களையும் அளித்து வருகின்றன. பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடித் தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் வீற்றிருக்கிறார்கள். மேலும் சகல விதமான தெய்வங்களும், பார் போற்றும் முனிவர்களும், நவகிரகங்களும் இருக்கின்றன. கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகிறது. அதனால்தான் கோமாவுக்குப் பூஜை செய்தால், நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கிறது. அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது.

கோமாதாவை வழிபட வேண்டிய முறை:

பசுவை இறைவைனின் வடிவமாகக் கருத வேண்டும். கோமாதா பூஜையின் போது, கோமாதாவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது வஸ்திரம் சாத்தி,  கழுத்தில் மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி  மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல், மற்றும் பல்வேறு வகையான பழங்களைப் படைக்க வேண்டும். நெய் விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். எடுத்த பின்னர் காலில் விழுந்து வணங்க வேண்டும். பின்பு மீண்டும் நெய் தீபத்தால் ஆரத்தி எடுத்து மூன்று முறை கோமாதாவை வலம் வந்து வணங்க வேண்டும். பூஜையின் போது கன்றுடன் சேர்த்துதான் பூஜிக்க வேண்டும்.

வீட்டில் பூஜை நடத்த இயலாதவர்கள், பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குச்  சென்று வழிபடலாம். கோயில்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கோபூஜையில் வழிபடலாம்.

கோமாதா பூஜை

கோமாதாவை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள்:

கோமாதாவைத் தெய்வமாக நினைத்து விரதமிருந்தால்,  கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும். பசுவுக்கு உணவளித்தால் நம் கர்ம வினைகள், சாபங்கள் நீங்கும். எந்தக் கிரகத்தால் நமக்குத் தொல்லையோ அந்தக் கிழமையில் பொங்கல் வைத்துப் படைக்க, கிரக பாதிப்புகள் விலகும்.  கோமாதாவுக்கு வாழைப்பழத்துடன் வெல்லம் சேர்த்துப் படைக்க பிதுர் தோஷம் நீங்கி புத்திரப் பாக்கியம் உண்டாகும். பாதியில் நின்ற கட்டடங்களில் பசுவைச் சுற்றி வரச் செய்தால் தடை விலகி, நின்ற பணிகள் நிறைவுபெறும். சனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திகீரை கொடுத்துவர, பாதிப்புகள் குறையும். கோபத்தால் விளையும் தீவினைகள் தீரும். கோமாதாவின் பிருஷ்டபாகத்தை வழிபட்டால் முன்ஜன்ம பாவங்கள் நீங்கும். காலையில் கண்விழித்ததும் தொழுவத்தில் பசுவைக் காண்பது சுபசகுனமாகக் கருதப்படும். பசுவை ஒரு முறை சுற்றி வந்தால் உலகம் முழுவதும் சுற்றி வந்த புண்ணியம் உண்டாகும்.

பசுவின் மேன்மைகள்:

பசுவைச் சிறப்பிக்காத புராணங்களே இல்லை எனலாம். ஒரு நாட்டை கைப்பற்றும் மன்னன் , கோடிக்கணக்கில் செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும், அவன் மனம் பசுவைக் கவர்வதிலேயே குறியாக இருக்கும். பசுக்கள் கௌரவத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டது. நீதி கேட்ட பசுவுக்காகத் தன் சொந்த மகனைக் கொன்றான் மனுநீதிச் சோழன். புதிதாகக் கட்டப்படும் வீட்டில், வியாபார ஸ்தலங்களில், தொழிற்சாலைகளில், மணிவிழாக்களில் கோமாதா பூஜையே முதன்மையானதாகும். பசு நன்றாகப் பராமரிக்கப்படும் இடங்களில் சகல சம்பத்தும் கிட்டும் என்பது ஐதீகம். பசுவின் சாணத்தில் லஷ்மி குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பசுவின் கோமியமானது கங்கைத் தீர்த்தம்போல் பாவிக்கப்படுகிறது. பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படும் திருநீறு தெய்விகத்தன்மை உடையது.

The post சனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்க! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

எதிரிகள், கடன் தொல்லை தீர வேண்டுமா?

$
0
0

பஞ்ச நரசிம்ம சேஷ்த்ரம்

தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர்  ஆவார்.

 அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.  ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் திவ்ய தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

 திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார். சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் எனும் ஊரில் பிறந்தவர். சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது மங்கை மடம் எனும் பகுதிக்கு குறுநில மன்னராக திருமங்கை மன்னன் என்பவர் நியமிக்கப்பட்டார்.  அந்த நகரை நிர்வாகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு பகவான் விஷ்ணுவின் அருளினால் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள்.

 அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்து வளர்த்தாலும், படை வீரர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை என்பதினால் அதற்கு பல்வேறு சண்டைப் பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்தார்கள். ஆகவே சிறு வயது முதலே அது யுத்தக் கலையில் சிறந்து விளங்கியது. அதனால்  ஒரே நேரத்தில் யானை, குதிரை, காலாட்டுப் படை என அனைத்து படைகளையும் திறமையுடன் அவரால் கையாள முடிந்தது.

 அவருடைய திறமையைக் குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் அவரை அழைத்து வந்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். அவர் யுத்தங்களில் எதிரிகளை சுலபமாக வீழ்த்தி கொன்று வந்ததால் அவரை காலன் என அழைத்தார்கள். காலன் என்பது அனைவர் உயிரையும் பறிக்கும் எம தர்மராஜரைக் குறிக்கும் பெயர்.

 அவர் திறமையினால் அவர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள். திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர். அவருக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் பூமியில் மனிதராகப் பிறந்து வைஷ்ணவத்தை பரப்ப வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் பூமியில் மனித உருவில் அவதரித்து இருந்த இன்னொரு தேவ கன்னிகையின் சாபத்தையும் விலக்க வேண்டும் எனவும் தெய்வ நியதி இருந்தது.

 அந்த தேவலோக மங்கையோ ஒருமுறை தேவலோகத்தில் கபில முனிவருடன் இருந்த அவலட்ஷணமான தோற்றத்தைக் கொண்ட இன்னொரு முனிவரை பரிகாசம் செய்ததினால் கோபமுற்ற கபில முனிவரின் சாபத்தைப் பெற வேண்டி இருந்தது. தான் செய்த தவறுக்கு அந்த தேவ கன்னிகை கபிலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதினால் அவர் தனது சாபத்தை மாற்றி அமைத்தார். அதன்படி அவள் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்து அங்கிருக்கும் வேறொரு பிரிவை சார்ந்த ஒரு படைத் தலைவரை மணந்து கொண்டு அவரை ஆன்மீக உலகுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

 அவர் மூலம் வைஷ்ணவத்தைப் பரப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவளுக்கு கிடைத்த சாபம் விலகும் என்றார். அந்த தெய்வ நியதியின்படி அவர்கள் இருவரும் திருமங்கை மன்னன் மற்றும் குமுதவல்லியாக பூமியில் பிறந்தார்கள். பல நிகழ்ச்சிகள் நடந்தேற அதன் இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால்  தெய்வ நியதிப்படி அவருக்கு அவள் ஒரு நிபந்தனை போட வேண்டி இருந்தது. அது என்ன எனில் குமுதவல்லி திருமங்கை மன்னனை மணக்க வேண்டும் எனில் திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.

 அவர்கள் கால்களை அலம்பி விட்ட பின் அந்த நீரில் சிறிது எடுத்து வந்து அவள்  தலை மீது தெளிக்க வேண்டும்.  அப்படி தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே அவளை திருமங்கை மன்னனால் மணக்க முடியும். திருமங்கை மன்னனும் அவள் கூறிய நிபந்தனையை ஏற்று அதை செய்து வர இருவருக்கும் திருமணம் நடந்தது.  இப்படியாக ஆன்மீக உலகில் திருமங்கை ஆழ்வாரை ஆன்மீகத்தில் நுழைந்து விட்டால் அவர் மூலம் வைஷ்ணவத்தை பரப்பி அந்த ஷேத்திரத்தில் ஐந்து நரசிம்ம அவதாரத்தில் தானும் காட்சி தரலாம் என விஷ்ணு பகவான் எண்ணினார்.

  திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததினால் அவருடைய கஜானாவும் காலி ஆயிற்று. சோழ மன்னனும் திருமங்கை மன்னன் தனக்குத்  தர வேண்டிய கப்பத் தொகையை தராமல் இருந்ததினால் மிச்சம் மீதி இருந்த அவருடைய செல்வத்தை அவர் நாட்டில் இருந்து  எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.  ஆகவே பணம் இல்லாத நிலையை நிவர்த்தி செய்து கொள்ள திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்கத் துவங்கினார். திருமங்கை மன்னனின் நன் நடத்தையைக் கண்ட லட்சுமி தேவி அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணி  பகவான் விஷ்ணுவிடம் கேட்டபோது அவர் அவளை சற்று நாட்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கூறினார்.

 அதன் பின் ஒரு சிறிய நாடகம் நடைபெற்றது. ஒருநாள் திருமால் தனது மனைவியான லட்சுமி தேவியுடன் புதியதாக மணம் செய்து கொண்ட தம்பதி போல உரு எடுத்து உடம்பில் பல்வேறு நகைகளை அணிந்து கொண்டு திருமங்கை மன்னன் ஆண்டு கொண்டு இருந்த இடத்தின் காட்டு வழியே சென்றார்.  அவர்களைக் கண்ட திருமங்கை மன்னன் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கொள்ளை அடித்தார். ஆனால் அந்த நகைகளை அவரால் எடுத்துக் கொண்டு செல்ல முடியாமல் அவை கனத்தன . அதன் காரணம் அந்த நகைகள் அனைத்துமே சில மந்திரங்களினால் கட்டடப்பட்டு இருந்தது என்பதே.

 ஆகவே அந்த மந்திரத்தை கற்றுக் கொண்டு நகைகளை எளிதில் எடுத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்த திருமங்கை மன்னனுக்கு அந்த மந்திரத்தை போதிப்பதாக மாற்று உருவில் இருந்த திருமால் கூற அதை காது கொடுத்து கேட்க அவர் அருகில் சென்ற திருமங்கை மன்னன் காதில் மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார்.  அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார்.  அவர் பகவான் விஷ்ணு மீது பல தோத்திரங்களை பாடத் துவங்கினார். அதன் பின் சில காலத்திலேயே அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.

 திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை இயற்றத் துவங்கினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற ஹிரண்யகசிபுவின் வதமும் நிகழ்ந்தது.  அதைக் கண்ட திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார்.

 அப்படி  அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள்.

அவை உள்ள இடங்கள்:

குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள்

மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்

திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள்

திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்

திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்

(1) திருவாலியில் வில்வாரண்யம் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் லட்சுமி நரஸிம்ம தோற்றத்தில் காட்சி தரும் பெருமாளை திருவாலி நகரலன் அல்லது வரதராஜப் பெருமான் எனவும் அழைக்கின்றார்கள். அங்குள்ள தாயாரை அமிர்தவல்லித் தாயார் அல்லது அமிர்தகடவல்லித் தாயார் என அழைக்கின்றார்கள். ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின் நரசிம்மத் பெருமான் அடங்காத கோபத்துடன் இருந்தார். அவருடைய கோபத்தைக் தணிக்க உதவுமாறு தேவர்கள் அனைவரும் லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள லட்சுமி தேவியும் நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவின் வலது தொடையில் சென்று அமர, கோபம் தணிந்த நரசிம்மத் பெருமான் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருவாலி ஆகும். ஆகவே ஆலிங்கனம் எனப் பொருள்படும் விதத்தில் அமைந்த  திருவாலி என இந்த இடம் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில்தான் லட்சுமி தேவி தொடையில் அமர்ந்திருக்க விஷ்ணு பகவான் தனது மனைவியுடன் கூடிய  ரங்கநாத பெருமானாகவும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தந்தாராம்.

(2) அங்கிருந்து சற்றே தூரத்தில் உள்ள குறையலூரில் நரஸிம்ம பெருமாள் உக்கிர நரஸிம்மராக காட்சி தந்தாலும், அவர் முகத்தில் அதீத கோபக்களை காணப்படவில்லை.

(3) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மங்கை மடத்தில் பெருமாள் வீர நரஸிம்மராக காட்சி தருகின்றார்.

(4 & 5) திருநகரி எனும் இடத்தில் உள்ள  ஆலயத்தில் பெருமாள் இரண்டு நரஸிம்ம அவதார தோற்றத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்தில் அவர் யோக நரஸிம்மராகவும், ஹிரண்ய நரஸிம்மராகவும் காட்சி தருகின்றார்.

 இந்த ஆலயம் த்ரேதா யுகத்தை சேர்ந்தது. ஒருமுறை பிரும்மாவின் ஒரு மகன் விஷ்ணு பகவானின் தரிசனம் கிடைக்க தவம் செய்தபோது அவர் காட்சி தரவில்லை. லட்சுமி தேவி வேண்டிக் கொண்டும் விஷ்ணு அவருக்கு காட்சி தரவில்லை. ஆகவே லட்சுமி தேவி தன் கணவரான விஷ்ணு பகவானின் மீது கோபம் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். அவளைத் தேடிக் கொண்டு திருநகரிக்கு வந்த விஷ்ணு தாமரை தடாகம் ஒன்றில் அவள் ஒளிந்து கொண்டு இருந்ததை அறிந்து கொண்டார். அந்த குளத்தில் ஐந்து தாமரை மலர்கள் இருந்தன.

 அங்கு சென்ற விஷ்ணு பகவான் தனது இடது கையை அவற்றை நோக்கிக் காட்டினார். அவர் இடது கையில் சந்திர பகவான் இருந்ததினால் நான்கு தாமரை மலர்கள் மலர்ந்தன. ஆனால் ஐந்தாவதில் லட்சுமி தேவி ஒளிந்து கொண்டு இருந்ததினால் அது திறக்கவில்லை என்பதினால் விஷ்ணு பகவானினால் லட்சுமி ஒளிந்து கொண்டு இருந்த மலரை எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது.

 அந்த தாமரை மலரை கையில் எடுத்து திறந்து அதில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதனால்தான் திருமால் மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்த அந்த இடம் அதே பொருளைத் தரும் திரு நகரம் அதாவது திருநகரி என ஆயிற்றாம். இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் ஒரே ஒரு கொடிமரத்தைக் கொண்ட மற்ற ஆலயங்களை போல இல்லாமல், இந்த ஆலயத்தில் இரண்டு கொடி  மரங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆலயத்துக்கும் இன்னொன்று திருமங்கை ஆழ்வாருக்கும் உள்ளன.

The post எதிரிகள், கடன் தொல்லை தீர வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


அருள்பாலிக்கும் மகாவிஷ்ணுவின் அவதார மகிமை

$
0
0

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கும் மகாவிஷ்ணுவின் அவதார மகிமை

வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. இவர் அவ்வப்போது பூலோக மக்களைக் காப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்களும், இதிகாசங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.

மச்சாவதாரம் :

மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமாக கருதப்படுகிறது, மச்ச அவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். பிரம்ம தேவரிடம் இருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அரசுனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் இதுவாகும்.

கூர்மாவதாரம் :

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. ஒரு கட்டத்தில் மந்தார மலை சரியத் தொடங்கியது. இதனைத் தாங்கி பிடிப்பதற்காக, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்தார்.

வராக அவதாரம் :

பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். இதனால் பூமியின் இயக்கம் நின்று போனது. இதையடுத்து திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து, அசுரனைக் கொன்றதோடு, பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு வந்து அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம் :

வராக அவதாரத்தின்போது திருமாலால் அழிக்கப்பட்ட இரண்டாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. அவன் நாராயணனை எதிரியாக பாவித்து வந்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதனோ, நாராயணரின் நாமத்தையே உச்சரித்து வந்தான். இதனால் சிறுபிள்ளை என்றும் பாராமல் பிரகலாதனை துன்புறுத்தினான் இரண்யகசிபு. பிரகலாதனுக்காக தூணில் இருந்து, சிங்க தலையும், மனித உடலுமாக நரசிம்ம உருவத்தில் திருமால் அவதரித்தார்.

வாமன அவதாரம் :

பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. அவனது ஆணவத்தை அடக்குவதற்காக பெருமாள் குள்ளமான உருவம் தாங்கி அவதரித்தார். அதுவே வாமன அவதாரம் ஆகும். மகாபலியிடம் இருந்து மூன்றடி மண் கேட்டார். அவனும் சம்மதிக்கவே, ஒரு அடியில் பூமியையும், மற்றொரு அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்தில் தள்ளினார்.

பரசுராம அவதாரம் :

ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். தந்தையின் சொல்லுக்காக தாயின் தலையையே கொய்தவர். இவர் இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

ராமாவதாரம் :

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்திற்காக வனவாசம் சென்றதுமாக ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்த அவதாரம் இது.

பலராம அவதாரம் :

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவ தாரம் :

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம் :

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என்று கூறப்படுகிறது.

The post அருள்பாலிக்கும் மகாவிஷ்ணுவின் அவதார மகிமை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 11-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 11-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

The post Daily Raasi Palan 11-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கான பைரவரின் அருளை பெற

$
0
0

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் மாலையில் சூரியபகவான் மறைவு நேரத்தில் பைரவர் தரிசனம் செய்து வழிபடவும்.

சிவந்த ஜடையும் பரிசுத்தமான உடலும் சிவந்த தேஜஸும் சூலம் கபாலம் உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும் நிர்வாணமாகவும் நாயினை வாஹனமாகவும் கொண்டு முக்கண்ணனாக ஆனந்த வடிவினனாக பூத பிரேதநாதனாக க்ஷேத்திரங்கள் க்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.

பைரவர்மூலமந்தரம்:

ஓம் ஹ்ரீம் வம் வடுகாய அபதுத்தாரனாய
குரு குரு வடுகாய ஹ்ரீம்||
ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹ்ரெளம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம:

பைரவர்காயத்ரீ:

சுவாந த்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
ஒம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே க்ஷேத்ரபாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||
நிசாசராய வித்மஹே சுவைஹய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||

பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு . அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும். தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி. தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் .

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பைரவரை வணங்கலாம்? – நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்

அசுவினி – சரஸ்வதி – ஞான பைரவர் – பேரூர்

பரணி – துர்க்கை – மஹா பைரவர் – பெரிச்சியூர்

கார்த்திகை – அக்கினி – அண்ணாமலை பைரவர் – திருவண்ணாமலை

ரோகினி – பிரம்மன் – பிரம்மசிரகண்டீஸ்வரர் – திருகண்டியூர்

மிருகசீரிஷம் – சந்திரன் – க்ஷேத்திரபால பைரவர் – ஷேத்ரபாலபுரம்

திருவாதிரை – சிவன் – விடுக பைரவர் – வடுகூர்

புனர்பூசம் – அதிதி – விஜய பைரவர் – பழனி

பூசம் – பிரஹஸ்பதி – ஆஸின பைரவர் – ஸ்ரீ வாஞ்சியம்

ஆயில்யம் – ஆதிசேஷன் – பாதாள பைரவர் – காளஹஸ்தி

மகம் – சுக்கிரன் – நர்த்தன பைரவர் – வேலூர்

பூரம் – பார்வதி – பைரவர் – பட்டீஸ்வரம்

உத்திரம் – சூரியன் – ஜடாமண்டல பைரவர் – சேரன்மகாதேவி

அஸ்தம் – சாஸ்தா – யோகாசன பைரவர் – திருப்பத்தூர்

சித்திரை – விஸ்வகர்மா – சக்கர பைரவர் – தர்மபுரி

சுவாதி – வாயு ஜடாமுனி – பைரவர் – போர்பனைக்கோட்டை

விசாகம் – முருகன் – கோட்டை பைரவர் – திருமெய்யம்

அனுஷம் – லக்ஷ்மி – சொர்ண பைரவர் – சிதம்பரம்

கேட்டை – இந்திரன் – கதாயுத பைரவர் – சூரக்குடி

திருக்கோஷ்டியூர் – வயிரவன்பட்டி

திருவாவடுதுறை – தபசுமலை

மூலம் – அசுரர் – சட்டைநாதர் – சீர்காழி

பூராடம் – வருணன் – வீர பைரவர் – அவிநாசி , ஒழுகமங்கலம்

உத்திராடம் – கணபதி – முத்தலைவேல்வடுவர் – கரூர்

திருவோணம் – விஷ்ணு – மாரிதாண்ட பைரவர் – வயிரவன்பட்டி

அவிட்டம் – வசுக்கள் – பலிபீட மூர்த்தி – சீர்காழி ஆறுகமூர் (அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )

சதயம் – யமன் – சர்ப்ப பைரவர் – சங்கரன்கோவில்

பூரட்டாதி – குபேரன் – அஷ்டபுஜ பைரவர் – கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர்

உத்திரட்டாதி – காமதேனு – வெண்கல ஓசை பைரவர் – சேஞ்ஞலூர்

ரேவதி – சனி – சம்ஹார பைரவர் – தாத்தையங்கார்பேட்டை

ஒவ்வொரு நட்சத்திர தாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிபிட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவமூர்த்தியின் பரிபூரண திருவருளை பெற்று கொள்ளுங்கள்.

The post இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கான பைரவரின் அருளை பெற appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்!

$
0
0

 ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 சர்ப்ப கிரகங்களான ராகுவும்–கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’ என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங் களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.

 அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம். ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.

 மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற் பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு மிகுந்தது.

வீட்டில் பூஜை செய்வது எப்படி?

 ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாத வர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.

 வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

  செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகு காலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.

எந்த நாளில்.. எப்படி பலன்

 வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.

 அதன்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

 ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

எலுமிச்சை விளக்கேற்றும் முறை

 ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வரு கிறது. விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம்.

 ராகுகால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.

 ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

 இந்தச் சொல்லுக்கு ‘முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க’ என்று பொருள்.

The post வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 12-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 12-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

 

The post Daily Raasi Palan 12-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அபிஷேக பிரியன் –சிவ பூஜையும் அபிஷேகங்களும்

$
0
0

சிவ பூஜையும் அபிஷேகங்களும்

 ஆலயங்களில் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக்ஷனம் என்று பெயர். அபிஷேகம் என்றால் ஈரமாக்குதல்; நனைத்தல். இதற்கு இன்னொரு பெயர் ஜலார்ச்சனை. ஜலம் என்றால் நீர். நீரை வைத்து நிகழ்த்தப்படும் மிகப்பெரிய கிரியைதான் அபிஷேகம். இந்த அபிஷேகமானது உலக தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால்தான் அபிஷேகத்தைப் பார்க்கக்கூடாது என்று சொல்வர். சந்தனாபிஷேகம், விபூதி அபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

 மற்ற அபிஷேகங்களைப் பார்க்கக் கூடாதென்பது ஆகம விதி. இவையெல்லாம் ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஏற்படும் ஆற்றலைக் கணக்கிட்டு விதிக்கப் பட்டவையாக இருக்கலாம். தற்போது பாலாபிஷேகம், தயிராபிஷேகம் போன்றவற்றை பக்தர்கள் காணும்படி செய்கிறார்கள். அவ்வாறு பழகிவிட்டது.

 அபிஷேகம் செய்யும்போது பெரும் பகுதி அபிஷேகத்தை முன்கூட்டியே செய்து விடுவார்கள் இருப்பினும்  பக்தர்கள் திருப்திக்காக அவர்கள் காணும்வண்ணம் கொஞ்ச நேரம் செய்வார்கள். காளிகாம்பாள் ஆலயத்தில்கூட நண்பகல் அபிஷேகத்தை திரைபோட்டுதான் செய்யப்படுகிறது மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பத்து லட்ச ரூபாய் கட்டினாலும் அபிஷேகம் காணமுடியாது.

 அன்றிலிருந்து இன்றுவரை அந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஆக இந்த வழக்கம் எல்லா இடங்களிலும் இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது- “இல்லது வாராது; உள்ளது மறையாது’ என்பதுபோல!. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் போது அதன் மேல்பகுதியிலிருந்துதான் செய்யவேண்டும். பாணத்தின் உச்சியில் வட்ட மாகக் கட்டப்பட்ட பூக்களை வைத்துதான் அபிஷேகம் செய்யவேண்டும் எந்த வகை மலரால் வேண்டுமானாலும் வளையம் அமைக்கலாம்.

 அதை சுவாமியின் சிரசில் வைத்து அபிஷேகம் செய்தால் கீழே விழாது. இந்த வளையத்துக்கு இண்டம் என்று பெயர். மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போதும் சிரசில் இண்டம் எனப் படும் மலர்வளையத்தை வைக்கவேண்டும். அபிஷேகத்தின்போதுதான் என்றல்ல. எப்போதும் இண்டம் வைக்கலாம். சிவலிங்கத்தை வெறுமனே காணக்கூடாது. அதன் உச்சியில் ஒரு சிறு மலரையாவது எப்போதும் வைத்திருக்கவேண்டும். அதன் மேல்பகுதிக்கு ஈசான முகம் என்று பெயர்.

 ஈசனின் மற்ற நான்கு முகங்களான சத்யோஜா தம், வாமதேவம், தத்புருஷம், அகோரம் ஆகியவை மற்ற நான்கு திசைகளையும் குறிக்கின்றன. முருகப்பெருமானை ஈசன் தோற்றுவிக்கும்போது அதோமுகம் என்னும் ஆறாவது முகத்துடன் இருந்தார் என்பர்.

 இந்த முகம் கீழே உள்ளது. கீழே என்றால் கீழ்நோக்கிய பார்வை என்பதல்ல; உள்ளே சென்று பார்க்கக்கூடியது. முருகனுக்குரியதாக இது சொல்லப்படுகிறது. குறி சொல்கிறவர்கள், அருள்வாக்கு சொல்பவர்களையெல்லாம் பாருங்கள். அவர்கள் முருக உபாசகர்களாக இருப்பார்கள். முருகனை உபாசிக்க உபாசிக்க, ஒருவரின் உள்ளிருக்கும் ரகசியங்களை அறியும் ஆற்றல் உருவாகும். ஆக, சிவலிங்கத்தின் ஈசான முகத்துக்கு தான் அபிஷேகம் செய்யவேண்டும். பாணத்துக்குக் கீழுள்ள கோமுகியுடன் கூடிய அகன்ற பகுதியை ஆவுடையார் என்பர். (இந்த கோமுகி வடக்கு அல்லது கிழக்கு பார்த்துதான் இருக்கவேண்டும்.) “ஆ’ என்றால் பசு. அதாவது

 ஜீவாத்மாக்கள். இவையெல்லாம் இந்த ஆவுடையாருக்குள்தான் இருக்கின்றன. இங்கிருந்துதான் அனைத்துயிர்களும் வெளிப்படுகின்றன. இது அம்பாள் பாகம் எனப்படுவதால், கண்டிப்பாக இதன்மீது ஆடை சார்த்தித்தான் அபிஷேகம் செய்யவேண்டும். இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பி டுகிறேன். நலிந்த நிலையிலுள்ள ஆலயங்களை சீரமைக்க முயலும்போது, அவ்வாலயத்தின் நிலைபற்றி மக்கள் அறிந்துகொள்ள படம் எடுக்கின்றனர்.

 அப்படி எடுக்கும்போது, ஆவுடையாருக்கு ஒரு ஆடை சார்த்தி, சிவலிங்கத்தின் சிரசில் ஒரு மலரை வைத்துவிட்டுதான் எடுக்கவேண்டும். திருப்பணி செய்வோர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் சிவலிங்கம் என்பது பிரபஞ்ச வடிவம். அதில் பிரபஞ்ச ஆற்றல் நிறைந்துள்ளது. அதன் கீழ்ப்பாகம் பிரம்மபாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும், மேல்பகுதி ருத்ர பாகம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு ஆற்றல்களும் அடங்கிய சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது, நமக்குள்ள தீய எண்ணங்கள்,

 கோபம், ஆவேசம், வளர்ச்சியின்மை போன்றவையெல்லாம் அகற்றப் பட்டு மலர்ச்சியுடையவர்களாகிறோம். எல்லா ஜீவராசிகளுக்கும் இதன் பயன் சென்று சேர்கிறது. அவ்வாறு ஒரு மாறுதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு கிரியைதான் அபிஷேகம். முதலில் சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு சார்த்துவார்கள். நமக்கு சிறு வயதில் தலையில் நன்றாக எண்ணெய் தேய்த்துவிடுவார்கள். அது நம் உடலிலுள்ள வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியை உண்டாக்கும். அதுபோலவே செய்யப்படுவதுதான் இதுவும்.

 தெய்வ சந்நிதியில் சுற்றிலும் விளக்குகள் உள்ளன. நாமும் செல்கிறோம். அதனால் ஏற்படும் வெப்பம் தெய்வத் திருமேனியில் தங்கும். அதைப் போக்கவே எண்ணெய்க் காப்பு. எண்ணெய்க்காப்பு சாற்றும்போது நன்றாக தலையில் தேய்த்துவிட வேண்டும். அது கல் அல்ல; சாட்சாத் சுவாமிதான். கை, கால்களைப் பிடித்து உபசாரம் செய்யவேண்டுமென்று சாஸ்திரத்திலே சொல்லப்பட்டுள்ளது. வஸ்திரம் சாற்றித்தான் அபிஷேகம் செய்யவேண்டும்.

 பிறகு இதற்கென உள்ள பொடி வகைகளைக்கொண்டு நன்றாகத் தேய்த்துவிடவேண்டும். எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் அகன்றுவிடும். பிறகு பால், தயிர், பழரசம் போன்றவற்றைக்கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும். இந்த செயல்களையெல்லாம் பயபக்தியோடு செய்யவேண்டும். இப்படி செய்யப்படும் அபிஷேகத்தால் அனைத்துலகுக்கும் நன்மைகள் ஏற்படும்.

 ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் தனித் தனியான பலன்களும் உள்ளன. ருத்ராபிஷேகம் செய்தால் மனஅமைதி கிட்டும். அனைத்து கவலைகளும் அகலும். அதனால்தான் ஆலயங்களுக்குச் செல்லவேண்டுமென்கிறோம். வீடுகளில் இவற்றையெல்லாம் முறையாக செய்யமுடியாது. ஆலயத்துக்குச் சென்றால் அனைத்தும் முறைப்படி இருக்கும். அம்மா சமைத்து வைத்திருக்கிறாள்; போய் சாப்பிடுவது தான் பாக்கி என்பதுபோல.

 இவ்வாறு அபிஷேகம் செய்யும்போது அதன்சக்தி உடனே எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. தொடர்ந்து செய்யச் செய்ய அனைத்து மக்களுக்கும் அந்த சக்தியானது சென்றுசேர்கிறது. எவ்வளவு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு சுவாமிக்கு நிவேதனங்களைப் படைக்கவேண்டும். நாம் அதிக நேரம் குளித்தால் என்னாகும்? அதிக பசியெடுக்கும். சுவாமிக்கு நூறு படி பாலில் அபிஷேகம் செய்துவிட்டு இரண்டு வாழைப்பழங்களை நிவேதனம் செய்யலாமா?

 நூறு படி அபிஷேகம் செய்தால் ஐம்பது படியாவது நிவேதனமாகப் படைக்கவேண்டும். நாம்  இரண்டு லிட்டர் பால் கொடுக்கிறோமென்றால் ஒரு லிட்டரை அபிஷேகத்துக்குப் பயன்படுத்திவிட்டு ஒரு லிட்டர் பாலை நிவேதனம் செய்துவிடு விடுவார்கள். “நைவேத்யம் க்ஷீ னே துர்பிட்சம்’ என்பார்கள். நிவேதனம் குறையக்குறைய வளர்ச்சி குறையும் என்பது பொருள். நாட்டுக்கு நல்லதல்ல. சரி; நிறைய அபிஷேகம் செய்து நிறைய நிவேதனம் செய்தால் பெரிய அளவு வளர்ச்சி ஏற்படுமல்லவா என்று நினைக்கத்தோன்றும். எதற்குமே ஒரு வரையறை உள்ளது. அபிஷேகம் செய்ய 24 நிமிடங்கள் என்று கணக்குள்ளது. அதற்குமேல் செய்யக்கூடாது. அந்த 24 நிமிடங்களுக்குள் எல்லா அபிஷேகங்களையும் முடித்துவிட வேண்டும்.

 (பிரம்மோற்சவம் போன்ற சிறப்பு தினங் களில் செய்யப்படுவது வேறு.) அபிஷேகப் பொருட்கள் அதிகமாக இருந்தால் காலை பூஜை, நண்பகல் பூஜை, மாலைநேர பூஜையென காலங்களைப் பிரித்துக்கொண்டு  செய்வார்கள். சுவாமி மீது ஆடையும் பூக்களும் இருக்கவேண்டியது அவசியம். இவ்வாறு எல்லாவற்றையும் முறையாகச் செய்தால்தான் அந்த ஆலயத்தில் சாந்நித்யம் நிறைந்திருக்கும். பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். நாட்டிலும் செழிப்பும் நிம்மதியும் நிலவும். ஒரு சிலை வடிக்கப்படுகிறது. அது பிரதிஷ்டை செய்யப் பட்டு ஆலயம் அமைக்கப்படுகிறது.

 விழாவுக்கு மட்டும்போய் மாலை மரியாதை பெற்றுவருவதல்ல. வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன- என்னென்ன தேவையென்று கவனித்து அவற்றை சரியான முறையில் நிறைவேற்றித் தருவதுதான் குடும்பத் தலைவனின் கடமை. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருவதல்ல. தர்மகர்த்தா பணியும் அத்தகையதே. பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.

 கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

The post அபிஷேக பிரியன் – சிவ பூஜையும் அபிஷேகங்களும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம்….

$
0
0

  திருமூலர் காட்டும் லிங்கங்கள்….!!!

இலிங்கம் என்பதற்கு மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.

லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். எந்த இடத்தில் பிரளய காலத்தில் சேதன, அசேதனப் பிரபஞ்சங்கள் அனைத்தும் லயம் அடைந்து பின்னர்ப் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.

லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும் என்றும், சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

இலிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பை உணர்த்தும் அடையாளத்தை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம். சிவலிங்கம் என்பதை சிவனின் அடையாளம் எனலாம்.

அண்ட இலிங்கம்

பிண்ட இலிங்கம்

சதாசிவ இலிங்கம்

ஆத்ம இலிங்கம்

ஞான இலிங்கம்

சிவலிங்கம்

அண்ட இலிங்கம்

 அண்டம் என்றால் உலகம். இலிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி செய்தான்.  குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713)  இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724) நிலம் – ஆவுடையார், ஆகாயம் – இலிங்கம், கடல் – திருமஞ்சனமாலை, மேகம் – கங்கை நீர், நட்சத்திரங்கள் – ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை – எட்டு திசைகள் என்று இலிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம். (திருமந்திரம் 1725)

பிண்ட இலிங்கம்

 மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்

மானுட ராக்கை வடிவு சிதம்பரம்

மானுட ராக்கை வடிவு சதாசிவம்

மானுட ராக்கை வடிவு திருக்கூத்து   (திருமந்திரம் 1726)

என்று திருமூலர் கூறுகின்றார். மக்கள் தலை – பாணம், இடைப்பட்ட உடல் – சக்தி பீடம், கால் முதல் அரை வரை – பிரமபீடம் எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

சதாசிவ இலிங்கம்

 இலிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு இருதயம் – ஞானசக்தி, தலை – பராசக்தி, தலைமுடி – ஆதிசக்தி, கவசம் – இச்சா சக்தி, நேத்திரம் – கிரியா சக்தி, சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும்.  (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ இலிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.

ஆத்ம இலிங்கம்

 அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம இலிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கும் நிலை.  நாதமும் விந்துவும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார். திருமூலர் முதலிய தவயோகியர் சிவலிங்க வடிவங்களைப் பீடமும் இலிங்கமுமாக வைத்து பீடத்தை விந்து வடிவம் எனவும் இலிங்கத்தை நாத வடிவம் எனவும் உணர்த்தியுள்ளனர்.

 நாதம் என்பது முதல்வனது ஞானசக்தி நோக்கத்தினால் சுத்த மாயையில் நேர்க்கோட்டு வடிவில் மேலும் கீழுமாக எழும் ஒரு அசைவைக் குறிக்கும். இவ்விரண்டு அசைவும் முறையே முதல்வனது ஞானசக்தியினாலும், கிரியா சக்தியினாலும் விளைவனவாகச் சிவசக்திகளது சேர்க்கையை உணர்த்தும் என பெரியோர்கள் கருதுகின்றனர்.  இவ்விரு அலைகளும் இணைந்தும், பிணைந்தும், மாறுபட்டும் உலகப் பொருட்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், தேய்ந்து மாய்தலையும் உண்டாக்குகின்றன என்கின்றனர்.

ஞான இலிங்கம்

 உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770) என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.

சிவலிங்கம்

 அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு அடையாளத்தின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகிறது. அடையாளமும், உருவமும் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைக்கவோ வழிபடவோ முடியாது. பக்குவம் நாடும் உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய முதனையாக இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம் தேவையாக இருக்கிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அந்த அடையாளத்தினிடத்திலும் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்,

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்

பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்

நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை

வரைத்து வலஞ்செயு மாறறி யேனே  (திருமந்திரம் 1773)

ஓம் நமசிவாய!!!

The post சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம்…. appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


சங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா?

$
0
0

நாளை  சங்கடஹர சதுர்த்தி விரதம்

சங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா?

சங்கடஹர சதுர்த்தி:

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை :

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி பல ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

    கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்

    உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

   ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவீர்கள். மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. விநாயகர் எளிமையானவர். ஆற்றங்கரைகளில் அரச மரத்தடியில் கூட எழுந்தருளி அருள் பாலிப்பவர். ஆனை முகனை நினைத்து மஞ்சளில் பிடித்து வைக்கலாம்! மண்ணிலே பிடித்து வைக்கலாம். எளிதாக கிடைக்கும் எருக்கம் பூ அருகம்புல் அவருக்கு பிடித்தமான பத்திரங்கள். இவரின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.

   ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.

சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல்.

  சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.  இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.

    பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும். விநாயகர் உலகை வலம் வந்தபோது, தனது அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவது’ என்று சபித்தார்.

  பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று. சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி. நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

 கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார். விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக்கிரகம் செய்தார்.  புருகண்டி முனிவர்’ என்றழைக்கப்பட்ட அவருக்கு விநாயகரின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார். அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சிறந்தது. இதன் மூலம் சித்த சுத்தி ஏற்படுகிறது. ‘நான் பூஜை செய்கிறேன்‘ என்ற அகங்காரம் அகன்று, ‘அவனருளால் அவன் தாள் பணிகிறோம்‘ என்ற எண்ணம் தோன்றுகிறது.

  நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர் தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக் கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.   சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும்.

  சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.

  குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை

  வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு

  வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு

   துள்ளி யோடும் தொடரும் வினைகளே

  கருணை வள்ளல் கணபதியைத் தொழ

  அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே

  முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்

   தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை

  வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்

நாளை  சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது. விநாயகரைத் தொழுது விக்கினங்கள் அகலப் பெறுவோமாக!

The post சங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Halebidu – Dorasamudra or Dwarasamudra

$
0
0

 Halebidu (literally “old city”) is located in Hassan District, Karnataka, India. Halebidu (which used to be called Dorasamudra or Dwarasamudra) was the regal capital of the Hoysala Empire in the 12th century. It is home to some of the best examples of Hoysala architecture. Most notable are the ornate Hoysaleshwara and Kedareshwara temples. The city got the name “Halebidu” because it was ransacked two times during the invasion of Malik Kafur.

History

 Halebidu was the 12th-13th century capital of the Hoysala empire. The Hoysaleshwara temple was built during this time by Ketamala (around 1121 AD) and attributed to King Vishnuvardhana, the Hoysala ruler. It is believed to have been completed around 1160 AD by Kedaroja, the chief architect of Vishnuvardhana’s son and successor Narasimha I (1142 – 1173). It enshrines Hoysaleshwara and Shantaleshwara, named after King Vishnuvardhana Hoysala and his Queen Shantala Devi. The town was sacked by the armies of Malik Kafur in the early 14th century, after which it fell into a state of disrepair and neglect.

Temple complex

The temple complex comprises two Hindu temples, the Hoysaleshwara and Kedareshwara temples and two Jain basadi. In front of these temples there is a large lake. The two Nandi images on the sides of the Hoysaleshwara temple are monoliths. Soapstone (chloritic schist) was used for the construction of these temples. There is an archeological museum in the temple complex.

The Hoysaleshwara temple, dating back to the 1121 C.E., is astounding for its wealth of sculptural details. The walls of the temple are covered with an endless variety of depictions from Hindu mythology, animals, birds and shilabalikas or dancing figures. No two sculptures of the temple are the same. This temple, guarded by a Nandi bull, was never completed, despite 86 years of labour. The Jain basadi nearby are equally rich in sculptural detail.

The Parshvanatha Basadi was built by Boppadeva in 1133AD during the reign of Vishnuvardhana by Boppana, the son of the famous Gangaraja who was a minister under Hoysala King Vishnuvardhana. There is an 18 ft tall Parshvanatha tirthankara statue inside the Basadi made of black granite stone. Sculpture of Yaksha Dharanendra and Yakshi Padmavati present in mahamantapa.

The Shantinatha Basadi was built around 1192 A.D., during the reign of Ballala II. There is an 18 ft. tall statue of Shantinatha.  This temple is now being proposed as a UNESCO World Heritage Site. The Adinatha Basadi is a small Jain basadi built in 12th century. The temple houses an idol of Adinatha and Hindu goddess Saraswati.

Halebidu is 16 km away from the one more historical place Belur. It is well connected by road and rail to Bangalore, Mangalore and Mysore. There are regular buses to Hassan. The distance is 149 km to Mysore and 31 km to Hassan.

The post Halebidu – Dorasamudra or Dwarasamudra appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

முழுவாழ்க்கையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?

$
0
0

முழுவாழ்க்கையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?

நாடி ஜோதிடத்தில் சொல்லப்படும் காண்டங்கள் கூறுவது என்ன?

நாடி என்றால் ஓலை. அதாவது ஒருவரைப் பற்றி அவை பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஏடு என்பதே நாடி ஜோதிடம்  என்பதன் முழுமையான அர்த்தமாகும். நாடி ஜோதிடத்தின் கணித முறைகளும், பலன்களும் பாடல் வடிவாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அகத்தியர்கள் பலர் எழுதியதாக நம்பப்படும், இந்த ஏடுகள் 12 காண்டங்களும், 4 தனிக்  காண்டங்கள் பற்றியும் கூறுகிறது. நாடி சோதிடம் பல வகை உண்டு. இதில் பிருஹத் நாடி சோதிடம் மூலம் பலன்கள் எப்படி காண்கிறார்கள் என்பதை காண்போம்.

 2 ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தவை எனக் கருதப்படும் இந்த சுவடிகள் சப்த ரிஷிகளான அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி ஆகியோரால் எழுதப்பட்டவை என்று நம்பப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஓலைகள் கிடைக்கின்றன. வாசிப்புகளும் அவர் பெயரிலேயே நடைபெறுகின்றன.

சுவடியில் உள்ள காண்டங்கள் எதைக் குறிக்கிறது?

 முதல் காண்டம் – வாழ்க்கையின் பொதுப்பலன்கள்.

 இரண்டாம் காண்டம் – குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்.

 மூன்றாம் காண்டம் – சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்.

 நான்காவது காண்டம் – தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு மற்றும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல்.

 ஐந்தாம் காண்டம் – பிள்ளைகள் பற்றி கூறுகிறது.

 ஆறாம் காண்டம் – வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.

 ஏழாம் காண்டம் – திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை பற்று கூறுகிறது.

 எட்டாம் காண்டம் – உயிர்வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.

 ஒன்பதாம் காண்டம் – தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது.

 பத்தாவது காண்டம்  – தொழில் பற்றி கூறுகிறது.

 பதினோராம் காண்டம் – லாபங்கள் பற்றி கூறுகிறது.

 பன்னிரண்டாம் காண்டம் – செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது.

 தனி காண்டம் கூறுவது என்ன?

 சாந்தி காண்டம் – வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது.

 தீட்சை காண்டம் – மந்திரம், யந்திரம் போன்றவை பற்றி கூறுகிறது.

 ஔஷத காண்டம் – மருத்துவம் பற்றி கூறுகிறது.

 திசாபுத்தி காண்டம் – வாழ்க்கையில் நடக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கூறுகிறது.

The post முழுவாழ்க்கையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 13-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 13-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

The post Daily Raasi Palan 13-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சனியின் தாக்கம் குறைய சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு

$
0
0

இன்று சங்கடஹர சதுர்த்தி

சனியின் தாக்கம் குறைய சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். ‘ஹர’ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை ‘மகா சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கின்றனர்.

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

‘ஓம் தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்’

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினை

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று அழைக்கின்றனர்.

விரதத்தின் பலன்கள் :

 இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

The post சனியின் தாக்கம் குறைய சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live